முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உதிர்ந்த நட்சத்திரங்கள்

 


தென்னமெரிக்க பசிபிக் பெருங்கடல் தீவொன்றில் மரமொன்றை வெட்ட முடிவு செய்தால், அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மரத்தை சுற்றி நின்று வசைபாடுவார்களாம். துயரம் தாளாது மரம் இறந்துபோகுமாம். அதன் பின் பயன்படுத்துவார்களாம்.

தாரே சமீன் பர் படத்தில் அமீர் கான் ஆசிரியர், டிஸ்லெக்சியா பாதித்த மாணவனின் பெற்றோருக்கு சொல்வார் இந்த கதையை.


இன்று ஓரு சமுதாயமே தம் அடித்தட்டு மாணவர்களை மையத்தில் நிறுத்தி 'உன்னால முடியாது தம்பீ, முடியாது தங்கச்சீ! ஏன்னா நீங்க பள்ளத்தில நின்னு படிக்கறீங்க, அவங்க எல்லாரும் மேட்டுல நின்னு படிக்கறாங்க!' என 24*7 அவர்களை பல்வேறு ஊடகங்கள்வழி அச்சுறுத்திக்கொண்டிருக்கிறோம். 


கதையில் மரம் தற்கொலை செய்கிறது. நிசத்தில் நம் தம்பிகளும், தங்கைகளும்...


பொங்கி வெடிக்கிறோம், ஆவேசக்குரல் எழுப்புகிறோம், சபதங்கள் செய்கிறோம், எதிர்க்கிறோம், ஆதரிக்கிறோம்...ஆனால் இந்த தம்பி தங்கைகளை கரையேற்ற யார் முயல்வது? மேடு பள்ளங்களை யார் சமன் செய்வது?

அரசுதான் செய்யவேண்டும் என்பது இத்துப்போன வாதம், நாமும்தானே அரசு? மக்களால், மக்களுக்காக...!

யாராவது ஏதாவது செய்வாங்க என்று எல்லோருமே மணலில் தலைபுதைந்த நெருப்புக்கோழிகள் போல வாழ்கையில் ஏன் இந்த நிலைப்பாடற்ற பொங்கல்?

1. உடனடி தேவை, அரசு பள்ளிகளில் பயின்று நீட் எழுத விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அரசே இலவசமாக தனியார்தரத்தில் கோச்சிங் தருவது. இங்கு பயின்று வெற்றி பெற்று மருத்துவராகும் மாணவச்செல்வங்களை 'பிணை' முறையில் குறிப்பிட்ட காலத்திற்கு அரசு மருத்துவ சேவையில் ஈடுபடுத்துவது.

2. மத்யமர் போன்ற தளங்களும், தனி நபர்களும்கூட, சேவை மனப்பான்மையில் மாணவர்க்கு கற்றுத்தர எந்த குழு முன்வந்நாலும் நிதியுதவி செய்து ஊக்குவிப்பது. Super 30 போன்ற நல்மனிதர்கள் இங்கும் இருக்கிறார்கள்!

3. நீண்டகாலத்தேவை, சமச்சீர் கல்வியை அரசியலின் பிடியிலிருந்து விலக்கி தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக இயங்கவைப்பது. எல்லோர்க்கும் சமமான அடிப்படை கல்வி என வரையறுத்து, கல்வி நிறுவனங்களின் தரத்தையும் நெறிப்படுத்துவது.

இயன்றதை செய்வோம் என நாம் இறங்கினால்தான் துயரங்கள் குறையும்.

'இல்லைங்க, எங்களுக்கு பொங்கல் பொதுங்க. அதுவே திருப்தி. இன்னும் கொஞ்ச நாள்ல வேறேதாவது பொங்கல் வைப்போம் அப்டியே பொழப்ப ஓட்டிடுவம்' என்கிற நிலைப்பாடு யாருக்கும் உதவாது.

ஊர்கூடி இழுக்கவேண்டிய தேர் இது...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்