நம் உலகின் ஆதி மழைத்துளியில் முளைத்த தாவரம், பெருகி தாவரங்களானதும், மரம், செடி, கொடி என்று பல்கிப்பெருகியதும், பூச்சிகளை உண்ணும் ஆற்றல் பெற்றதும் (Non vegetarian plants) என்றோ எவ்வாறோ நடந்த விந்தையாகட்டும்... நம் எண்ணக்குவியல் இங்கு விந்தை மீதல்ல. அந்த முதல் துளி மீது! அந்த நீர்த்துளி கண்ட, காணும், காணப்போகும் காட்சிகளை ஒரு நொடியேனும் நம்மால் உணரமுடிந்தால் அதுவே பேரின்பம்... அன்றும் இன்றும் என்றும் அசுவத்தாமன் போல மரணமின்றி அலையும் ஆற்றல் அதற்கு எங்கிருந்து என்ற கேள்விக்கும் போகவேண்டாம். அசுவத்தாமன் உதிரத்தையும் அவன் பாவங்களையும்கூட அது கழுவியிருக்கலாம்... என்று விழுந்தாலும் எங்கு விழுந்தாலும் விழுந்த இடத்தில் உயிர் முளைக்கவைக்கும் பேராற்றலை புரிந்து கொள்ள நாம் என்ன செய்தோம்? அருவியென்றோம், ஓடையென்றோம், ஆறென்றோம், கடலென்றோம், இடையில் ஏரியென்றும், ஏந்தலென்றும், ஊருணியென்றும், குளமென்றும் தேக்கியது போக. அப்படி தேக்கியவரெல்லாம் காற்றில் கலந்து பலகாலமானபின்பு, நம்மைச்செதுக்கிய நீரென்ற பேருயிரை மறந்து, இன்று அதனை நம் கைக்கருவியாக பாவிக்கிறோம்...ஆழிசூழ் உலகில், ஆழி நிரப்பிய குடுவைகள