சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்; சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்; அதாவது.மானம். பிழைத்திருந்தால். பாரதி கண்ட புதுமைப்பெண் - அவர் கனவு கண்ட பாரதத்தில் மட்டுமே... பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என தரிசு நிலங்களையும் கோயில் போன்று போற்றப்படும் இடங்களாக மாற்றவேண்டும் என அவன் எழுதிச்சென்றதை, 'பள்ளிகளை கோயிலாக்குவோம்' என தவறான புரிதலோடு வாழும் நம் நாட்டில் பெண் தெய்வங்கள் மட்டும் ஏன் தொடர்ந்து வன்முறையின் இலக்குகளாக மாறிப்போயினர்? கல்விக்கூடங்களில், தரிசு நிலங்களில், இறை கூடங்களில், சொந்த வீட்டில், நம்பி நுழையும் வீட்டிலும்... இந்த கண்ணம்மாக்களின் ஆன்மாக்கள் சிதைந்து அலைய சபித்தது எந்நக்கடவுளாக இருந்தாலும் அவர் நற்கடவுள் அல்ல, நம் கடவுளும் ஆகார். இந்தக்கொடுங்குற்றம் செய்தவர்க்கு மதச்சாயங்கள் பூசி வன்மம் வளர்ப்பதை உடனடியாக நிறுத்தி, Ministry of Crimes Against Women and Children என்கிற ஒரு அமைச்சகத்தை நிற
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!