முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடையில ஏதுமில்லே, நம்பு நட்பே!

 


குட்மார்னிங் நட்பே


பூம்பூம் மாடு

புல்லட்டில் போகுது


குரங்கு வெளுக்குது

நம்ம துணிகள


கங்காருவுடன் குத்துச்சண்டை

நாயை காப்பாத்த


பாம்பு பிடிக்கறாரே

தைரியமா பாருங்க


ரோட்டில நடந்தது

யாருங்க பேயா


வானத்தில பாருங்க

ஏலியன் விமானம்


கோயில் விமானத்தில்

ஏலியன் உருவங்கள்


கர்டாஷியான் பின்புறம்

பெரிதானது எப்படி


எல்லையில சீனாகாரன்

பண்ணறத பாருங்க

...

இதென்ன கொடுமை

எல்லாரும் போராடுவோம்


என் தப்பை 

நீ பேசாதே

அவன் செய்த

தப்பை மாத்து


என்னோடு இல்லாதவர்

நாட்டு விரோதிகள்

...

பூம்பூம் மாடு

புல்லட்டில் போகுது


குரங்கு வெளுக்குது

நம்ம துணிகள


கங்காருவுடன் குத்துச்சண்டை

நாயை காப்பாத்த


பாம்பு பிடிக்கறாரே

தைரியமா பாருங்க

...


குட்நைட் நட்பே!


குட்மார்னிங் நட்பே

குட்நைட் நட்பே

இடையில ஏதுமில்லே

நம்பு நட்பே!


நமக்கு வேண்டியதை இணையத்தில் தேடிய காலம் போய் இன்று நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே நாமும், நமக்கு என்ன வேண்டுமென தெரியாமலே பெரு வணிகமும், "இதுவா?" "இதுவா?" என கண்முன்னே 24*7 கடை விரிக்க, மண்டை குழம்பிப்போய் கோழி கூவும் விடியலில் துயில்பவரே இங்கு இன்று அதிகம்.


Wall E என்ற அனிமேஷன் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும். அசெம்பிளி வரிசையாக பீச் சேரில் உடல் பருத்த மனிதர்கள், அமர இயலாது படுத்தபடி, பெரிய திரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் ரசித்திருக்க, கையருகில் கன்வேயர் பெல்ட்டில் உணவு, உற்சாக பானம் என வரிசையாக வந்து வந்து, அவரவர்கள் உண்டு பருகி தீர்த்ததும் மிச்சத்தை சுமந்து நகர, அவர்கள் படுத்தபடியே உடற்பயிற்சி செய்ய...  என்று நம் எதிர்கால வாழ்வியலை பிரதிபலிக்கும்.


இதன் அடுத்த பரிமாணமாக இதே படத்தில் ஒரு சிக்கன் உணவு பொட்டலத்திலிருந்து, சிக்கனாக மாறிப்போன சேவல், hologram எனும் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் தனது சிக்கனைப்பற்றி தானே ஆடிப்பாடி விளம்பரம் செய்யும்!


அந்த நிலைக்கு நாம் வரும் முன்னர் சில மாற்றங்கள் நம்மில் நிகழும்;


மளிகைக்கடைக்கு சென்று "ஏதாவது கொடுங்க. பாத்துட்டு வேண்டியதை எடுத்துக்கறேன்"


உணவகத்துக்கு சென்று, 'எல்லாத்திலயும் சாம்பிள்கள தாங்க. உண்டு பார்த்து வேண்டியதை கேட்கிறேன்'


பலர் கூடிய இல்ல விழாவில் அனைவரும் தத்தமது மொபைலில் மூழ்கிப்போயிருக்க, போர் அடிக்கும் நொடியில் யாராவது ஒருவர் திடீரென எழுந்து, 'யாராவது என்னோட பேசுங்களேன்!' என கேட்பார். ஏனையோர் அவரது குரலை கேட்காமலே தம் மொபைலில் மூழ்கியிருப்பர். அவர் அலுத்துப்போய் மீண்டும் மொபைலில் ஏதாவது கிடைக்குமா எனத்தேடி மும்முரமாகி...இப்போது இன்னொரு உறவு மொபைல் போரடித்து திடீரென எழுந்து, 'யாராவது என்னோட பேசுங்களேன்!' என கேட்பார். இதுவும் அங்கிருக்கும் யார் காதுகளிலும் நுழையாமலேயே காற்றில் வழிந்தோடி கரையும்.


"பாஸ்! இதெல்லாம் ஒரு மேட்டரா! இன்னும் சில வாரங்கள்ல வாட்சப்பு நம்ம டேட்டாவெல்லாம் ரெக்கார்டு பண்ணப்போறானுவோ! நாம சம்மதிக்கலன்னா நம்மள வாட்சப்புலேந்தே தூக்கிருவானுங்கோ! வுடக்கூடாது பாஸ்!! உலகளாவிய போராட்டம் ஒண்ணு பண்றோம்! "Change org" ல ஆன்லைன் பெட்டிஷன் போட்றோம், கலாட்டா பண்றோம், புரட்சி வெடிக்கும் பாஸ்! வாட்சப்பு சர்வீசு free யாதான் இருக்கணும். ஓனர் சொன்னாருன்னா விட்றுவமா?! நாங்க தனி மரமில்ல பாஸ், தோப்பு!!!!!!!"


போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்!


குட்மார்னிங் நட்பே

குட்நைட் நட்பே

இடையில ஏதுமில்லே

நம்பு நட்பே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்