J. Krishnamurthi dissolves Order of The Star குரு பார்வை. குரு பற்றிய ஒரு பார்வை. எழுத்தறிவித்தவன் இறைவனாவான் என்பது பழமொழி - இது சொல்லும் எழுத்து நம் தலையில் எழுதப்பட்டது; எழுதுகோலை நம் கரத்தோடு பற்றி ஆசிரியர் எழுதப்பழக்கிய எழுத்தல்ல அது. மாதா பிதா குரு தெய்வம். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். எனில் யார்தான் நிஜமான குரு? நமக்கு தெரியாததை கற்றுத்தந்து / செய்து காட்டி / வாழ்ந்து காட்டி, செய்யக்கூடாதவற்றிற்கும் இலக்கணமாய் திகழ்ந்து வாழ்வுத்தடத்தின் அடுத்த புள்ளிக்கு நம்மை இட்டுச்செல்லும் எவரும்/எதுவும் நமக்கு குரு. அது பனையோலையில் காற்றாடி செய்ய கற்றுத்தந்த மனிதனாகவும் இருக்கலாம், தன் குஞ்சுகளுக்கு இரை எப்படி உண்பது என செய்து காட்டி கற்றுத்தரும் தாய்க்கோழியாகவும் இருக்கலாம், நம் வாகன சக்கரத்தில் முள் எடுத்து துளை அனைத்து நம் பயணத்தை தொடரச்செய்யும் நாம் அறிமுகம் செய்துகொள்ள விரும்பாத யாரோவாகவும் இருக்கலாம். வாழ்க்கை என்பது ஒற்றை நூல் சரடல்ல. ஒற்றை நூல் சரடும் ஆகாது. வாழ்க்கை என்பது பலவிதமான நூல்களால் ஒவ்வொருவரின் ஆன்மாவின் தறியிலும் நாமே நெய்துகொள்ளும் ஆடை. இதில் ஊடும் பாவுமாய் ஊடு
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!