#onemoresong பார்வையற்ற பாடகன். அவனிடம் மையலான கொலுசுப்பெண். அவள் கொலுசொலி அவன் வாழ்வின் ஒலி, தனித்துக்கேட்கும் அவன் காதில். வில்லி அம்மா; வில்லன் சிங்கப்பூர் மாப்பிள்ளை. பாடகனை வில்லன் நெருப்பில் தள்ள, சலங்கை காப்பாற்ற, காதலர்கள் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள். வேறூரில் வாழ்வு சிறக்க, ஆற்றங்கரையில் மோகனமாய் காதலர்கள். கஞ்சா கூட்டம் அவளை கடத்த, ஊர்க்காரன் மீட்டு வீடு சேர்க்கிறான். வீடு ஒரு செட்டியாருக்கு அவளை 'கட்டி' வைக்கிறது. பாடகனுக்கு ஒரு வசதியான குரு கிட்ட, இசை வளர்கிறது. பார்வையும் சிகிச்சையினால் கிட்டுகிறது. சலங்கையை தேடுகிறான், பாடும் ஊரெல்லாம், இடமெல்லாம். காணவில்லையே. இன்னும் ஒரே ஒரு கச்சேரி. அதன் பின் பாடப்போவதில்லை என அவள் ஊரின் அழைப்பை ஏற்று வருகிறான். கொலுசு வீட்டிலேயே விருந்தினனாக. கொலுசு அவனை பார்த்த நொடியிலிருந்து மௌனமாய் அதிர்கிறது, அலறுகிறது. கோவிலில் கச்சேரி. மேடைக்கு எதிர்மேடையில் கொலுசும் செட்டியாரும். வழக்கம் போல அங்கும் பாடல்வழியே அவளை தேடுகிறான். பாடலின் ஈர்ப்பில் கொலுசின் தளைகள் உடைய, கொலுசுக்கால் தா
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!