முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சங்கீத ஜாதிமுல்லை

#onemoresong பார்வையற்ற பாடகன். அவனிடம் மையலான கொலுசுப்பெண். அவள் கொலுசொலி அவன் வாழ்வின் ஒலி, தனித்துக்கேட்கும் அவன் காதில். வில்லி அம்மா; வில்லன் சிங்கப்பூர் மாப்பிள்ளை. பாடகனை வில்லன் நெருப்பில் தள்ள, சலங்கை காப்பாற்ற, காதலர்கள் ஊரை விட்டே ஓடிவிடுகிறார்கள். வேறூரில் வாழ்வு சிறக்க, ஆற்றங்கரையில் மோகனமாய் காதலர்கள். கஞ்சா கூட்டம் அவளை கடத்த, ஊர்க்காரன் மீட்டு வீடு சேர்க்கிறான். வீடு ஒரு செட்டியாருக்கு அவளை 'கட்டி' வைக்கிறது. பாடகனுக்கு ஒரு வசதியான குரு கிட்ட, இசை வளர்கிறது. பார்வையும் சிகிச்சையினால் கிட்டுகிறது. சலங்கையை தேடுகிறான், பாடும் ஊரெல்லாம், இடமெல்லாம். காணவில்லையே. இன்னும் ஒரே ஒரு கச்சேரி. அதன் பின் பாடப்போவதில்லை என அவள் ஊரின் அழைப்பை ஏற்று வருகிறான். கொலுசு வீட்டிலேயே விருந்தினனாக. கொலுசு அவனை பார்த்த நொடியிலிருந்து மௌனமாய் அதிர்கிறது, அலறுகிறது.  கோவிலில் கச்சேரி. மேடைக்கு எதிர்மேடையில் கொலுசும் செட்டியாரும். வழக்கம் போல அங்கும் பாடல்வழியே அவளை தேடுகிறான். பாடலின் ஈர்ப்பில் கொலுசின் தளைகள் உடைய, கொலுசுக்கால் தா

Mortals of Meluha / நாம் திருநீலகண்டமல்ல!

#WAKEUPiNDIA! அவசரம்! ஆபத்து! ஆகாரம் விஷம் குலநாசதே!! If You kill 'seeds' in the labs, it KILLS YOU BACK! விநாச காலே விபரீத நாஷ்டா! 'வச்சு செய்யும்' விஷ விதைகள்!  The top six diseases in the below 'healing ad' are fertility related. Diabetics and Hypertension are pushed back! ,

பேய்மழை, நிற்கவில்லை இன்னும்.

ஒரு பெருமழைக்காலத்தின் முதல் நாளில் மரித்துப்போனான். அதற்கு முந்தைய நாட்கள் விரைவாகவே, அடர்த்தியான வேலைகள் கொண்டதாகவே அமைத்துக்கொண்டான். பேர் தெரிந்த தெரியாத செடி கொடிகள் புல் பூண்டுகள் குட்டை மரங்கள் நெட்டை மரங்கள், வாத்துகள், கோழிகள், புறாக்கள், ஆடுகள், மாடுகள், கிளிகள், அணில்கள்... காக்கை, குருவி, வண்ணப்பூச்சி, செம்போத்து, மயில், மரங்கொத்தி, இரட்டைவால் குருவி, தவிட்டுக்குருவி, தேன்சிட்டு, கொசுத்தேனி, கொட்டும் தேனி, மரவட்டை, வெட்டுக்கிளி, இலையுண்ணும் கம்பளிப்பூச்சி, பழந்திண்ணி வவ்வால், கும்பிடு பூச்சி, தாழப்பறந்த தட்டான்கள், கறுப்பெறும்புகள், வண்டுகள் என தன் வாழ்வை மகிழ்வித்த அனைத்துயிரிடமும் உரையாடிய வண்ணமே அப்பொழுதுகள் கழிந்தன.  'நீங்கள் பறந்து, ஊர்ந்த காடுகளை நான் காணுவது சாத்தியமில்லை. உங்கள் இறகின் நிழல் பட்ட மலைகள் அனைத்தையும் நான் கண்டிருக்க வாய்ப்பில்லை. உங்கள் விதைகள் பயணம் செய்த பாதைகளை நான் கற்பனையில்கூட பார்த்ததில்லை... மரித்தபின் புதைக்கச்சொல்லியுள்ளேன். என் இனத்தில் சிலராவது, எனது ஆன்மாவிற்கு அருகிலிருப்பவர்களாவது அதை நிறைவேற்றுவார்கள் என

போகுமிடம் எங்கேப்பா?

காலையில் சாலை மரங்களோடு பேசிக்கொண்டே நீரூற்றிக்கொண்டிருந்தேன். எதிர்வீட்டு நண்பர் யாரிடமோ தான் உதவ இயலாது என்பதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார். உதவியென்று யார் கேட்டாலும் மறுக்காதவராச்சே...என எண்ணி திரும்புமுன் அந்தக்குரல் அழைத்தது, 'சார்...'. திரும்பினேன். எ.வீ. நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மனிதர் இப்போது என்னிடம். தூக்கமிழந்த கண்கள், உயிரோற்றமற்ற முகம், மத்திய வயது, தயங்கிய குரலில் மீண்டும் அழைத்தார், 'சார்...' 'என்ன வேணுங்க?' என்றேன். 'சார், என்னை கொஞ்சம் வீட்டில கொண்டு விட முடியுமா?' உடல்நலம் சரியில்லாதவர் என உள்ளுணர்வு சொல்லியது. 'அட்ரஸ் சொல்லுங்க. இந்த ஏரியால நான் உங்கள பாத்ததில்லையே...' என நான் வினவ அவரது பதில் முகத்தில் அறைந்தது; 'வீடு அட்ரஸ் தெரியல சார்'. குடித்திருக்கிறார் என்பதை குடிப்பவர்களும், குடிப்பவர்களோடு பழக்கம் இருப்பவர்களும் நொடியில் அறிந்திருப்பார்கள்... எனக்கு தெரியாது போயிற்று. 'இல்லைங்க, அட்ரஸ் தெரியலன்னா நான் உதவி செய்ய முடியாதே' என்றேன். கண்

நில்லென்று சொல்ல யாருமில்லை...

வேடன். விலங்கு வேட்டையாடி, காட்டுப்பூ தலையில் சூடி, அருவி நீர் வாயில் நிரப்பி, கானகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன். இறையென்று அந்தணர் ஒருவர் வணங்கும் சிலை கண்டான், அவனறியா பக்தி கொண்டான். எச்சில் நீர் உமிழ்ந்து இறையின் சிரம் துடைத்து தன் தலைப்பூவை இறைக்கு சூட்டி, தான் உண்ட மாமிசத்தை பேரன்போடு படைத்து, செல்கிறான். அந்தணன் வருகிறான், கண்டதும் மருள்கிறான். காட்டுவாசி மூடன் எவன் என தேடி சலிக்கிறான். தன் வேத விதிப்படி இறை தீட்டு கழித்து பூசித்து நிம்மதியாய் நீங்குகிறான். மாமிசமும் மரக்கறியும் மாறி மாறி உண்ட இறை, அந்தணன் கனவில் 'கோபம் வேண்டாம். நாளை நிகழ்வதை பார்' என்று மறைகிறது. அந்தணன் முன்னரே வந்து ஒளிந்து நோக்க, வேடன் வருகிறான்.  இறை கண்ணில் குருதி கண்டு பதறி கானகத்திடம் வேண்டி பச்சிலை பெற்று (மனிதர்கள் மட்டுமே உடைத்துப்பறிப்பர். வேடுவர் வேண்டிப்பெறுவர்...) இறை கண்ணில் பிழிய... உறைய மறுக்குது குருதி. அம்பு ஒன்றை உருவி நொடியில் இளநுங்கு சுளை போல் தன் ஒரு கண்ணை விடுவித்தெடுத்து இறை கண்ணில் அப்ப, நிற்கிறது குருதி. தொடர்கிறது இன்னொரு கண்ணில்! வேடன

புலி வருது புலி வருது... வந்துருச்சி!

வீரிய விதைகளும் மலட்டு தேசங்களும் வீரிய விதை - விளைச்சல் பெருக்கும். மறுபடி ஊன்றினால் முளைக்காது! ஒரு பழத்தில் அடங்கியுள்ள விதைகளை எண்ணிவிடலாம். ஆனால் ஒரு விதையில் அடங்கியுள்ள பழங்களை எண்ணவே முடியாதென்பது முதுமொழி; அனுபவ மொழி. ஒரு பருவத்தின் விளைச்சல், எண்ணற்ற சூழலியல் காரணிகளால் முடிவு செய்யப்படுகிறது; விதைகளால் மட்டுமே அல்ல. விதையின் மரபோ தொன்மையோ அறியாத நவீன அறிவியலாளர்கள், ஒரு குறுகிய கால விளைச்சல் விபரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, 'பார்! இந்த விதையின் விளைச்சல் சரிவோ சரிவு. நாங்கள் இதை நவீன 'மருத்துவமனைகளில் வாளால் அறுத்துச்சுட்டு'  விளைச்சல் பெருக்கிவிட்டோம் என மார்தட்ட, அவர்களுக்கு 'படியளக்கும்' பேராசை பெருவணிக நிறுவனங்கள், இந்த விதைகளை சந்தைப்படுத்தி ஒரு புறம் பணம் அள்ள, மறுபுறம் இந்த புதிய விதைகளின் வீரியத்தை பல்லுயிரும் பதம் பார்க்க, தொடங்குது முடிவற்ற யுத்தம்... கடுமையாய் தாக்குவது 'அ' பூச்சிதான் என ஆய்வு செய்து, இந்த முறை இன்னும் வீரியம் + 'அ' பூச்சியின் தாக்குதலை தாங்கி வளரும்; விலை சற்றே அதிகம் என அதே நிறுவனங்க

மனிதர் வாழத்தகுதியற்ற ஊரில் இறை இருக்குமா?

தேன் ஈக்கள் இயற்கையின் இயக்கத்துக்கு தம் சிறகசைவால் வலு சேர்க்கும் உன்னதங்கள். மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை என காதலி காதலனிடம் சொல்கிறாளென்றால் அது இவர்கள் இனத்தின் உரையாடலாகவே இருக்கும். வசந்தத்திற்கு சிட்டுக்குருவிகள் வண்ணம் சேர்ப்பது போல, தேனீக்கள் நம் உணவுக்கு வண்ணம் சேர்ப்பவை.  ஒரு மிக முன்னேற்றமடைந்த சமுதாய கட்டமைப்பு, பணிப்பகிர்வு, தொலைநோக்குப்பார்வை, உணவு சேமிப்பு... இவையத்தனையையும் ஒரு மரக்கிளையில் காற்றில் ஊசலாடியவண்ணம் நிகழ்த்தமுடியுமா நம்மால்? இச்சிறுபூச்சிகள் அற்புதத்தின் பெருவடிவு அல்லவா! இரு வேறு தேனீ கூட்டங்கள், உணவுக்காகவோ வேறு தேவைகளுக்காகவோ என்றாவது, எங்காவது சண்டையிட்டதுண்டா? நம் வீடழித்து கூடு கட்டியதுண்டா? காடழித்து கழனியமைத்ததுதான் உண்டா? தேனீக்கள் ஓரிடத்தில் கூடு கட்டினால், அந்த இடம் அமைதியான, நஞ்சற்ற, பாதுகாப்பான இடம் என்று பொருள். இன்று மலைகளில் / காடுகளில் மட்டுமே அவை கூடு கட்டுவது இதனால்தான். நகருள் இப்படி ஒரு சூழல் அபூர்வமாக அமையுமானால் அங்கும் இவை கூடு கட்டும். அந்தக்கூடு மனிதர் கண்ணில் பட்டதும் சூழல் மாறும். 'கொட்ட