முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போகுமிடம் எங்கேப்பா?


காலையில் சாலை மரங்களோடு பேசிக்கொண்டே நீரூற்றிக்கொண்டிருந்தேன்.

எதிர்வீட்டு நண்பர் யாரிடமோ தான் உதவ இயலாது என்பதை திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.

உதவியென்று யார் கேட்டாலும் மறுக்காதவராச்சே...என எண்ணி திரும்புமுன் அந்தக்குரல் அழைத்தது, 'சார்...'.

திரும்பினேன்.

எ.வீ. நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மனிதர் இப்போது என்னிடம்.

தூக்கமிழந்த கண்கள், உயிரோற்றமற்ற முகம், மத்திய வயது, தயங்கிய குரலில் மீண்டும் அழைத்தார், 'சார்...'

'என்ன வேணுங்க?' என்றேன்.

'சார், என்னை கொஞ்சம் வீட்டில கொண்டு விட முடியுமா?'

உடல்நலம் சரியில்லாதவர் என உள்ளுணர்வு சொல்லியது.

'அட்ரஸ் சொல்லுங்க. இந்த ஏரியால நான் உங்கள பாத்ததில்லையே...' என நான் வினவ அவரது பதில் முகத்தில் அறைந்தது;

'வீடு அட்ரஸ் தெரியல சார்'.

குடித்திருக்கிறார் என்பதை குடிப்பவர்களும், குடிப்பவர்களோடு பழக்கம் இருப்பவர்களும் நொடியில் அறிந்திருப்பார்கள்... எனக்கு தெரியாது போயிற்று.

'இல்லைங்க, அட்ரஸ் தெரியலன்னா நான் உதவி செய்ய முடியாதே' என்றேன்.

கண்களில் வேதனை தெரிந்தது. மௌனமாய் தலையாட்டி வேறு திசையில் குத்துமதிப்பாய் நகர்ந்தார்.

'யாருடைய கணவனாகவோ, தகப்பனாகவோ, மகனாகவோ, உறவினராகவோ இருக்கலாம். என்ன வேதனை இவரை தன்னிலை மறந்து குடிக்கத்தூண்டியது? இவர் எத்தனை நாட்களாய் அட்ரசை மறந்து இப்படி? தொலைதூர ஊர்க்காரராக இருக்கவும் வாய்ப்புள்ளதே. இவருக்காக காத்திருக்கும் மனைவிக்கு / மகளுக்கு இவரது நிகழ்காலம் தெரியுமா? போகும் வழியில் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆனால் என்ன ஆகும் அவர்களுக்கு?...' என கேள்விகள் அலையடிக்க, என் பச்சாதாபம் சமுதாயக்கோபமாக, அரசின்மீது கோபமாக...இன்னும் என்னவெல்லாமாகவோ உருமாற, சட்டென்று உறைத்தது புத்தியில்;

'நம் தேசமும் இப்படித்தானே!'

போகுமிடம் எங்கேப்பா? போனப்புறம் சொல்றோம்ப்பா!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்