இந்தியா. இந்தியா? இல்லை, தமிழ்! இல்லை, தெலுங்கு! இல்லை, துளு! இல்லை, பிகாரி! இல்லை, ஒரியான்வி! இந்தியா இந்துக்களின் நிலப்பரப்பு. அன்றும், இன்றும், என்றும். இந்து என்பது மதமல்ல. வாழ்வியல். வட-தென், கிழ-மேல் முனைகளிலும் இடைப்பட்ட பகுதிகளிலும் நிலப்பரப்பு, உணவு, உடை எவ்வாறு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்ட வாழ்வியல். பண்புகள், நன்மை தீமைகள் யாவற்றிலும் அடிப்படை ஒற்றுமை கொண்ட வாழ்வியல். ஐம்பூதங்களையும், அனைத்துயிர்களையும் வியந்து போற்றி வணங்கி வாழ்ந்த ஏராளமான தொல்குடியினரால் பாதுகாக்கப்பட்ட பெரும்பரப்பு. எனது வாழ்வு எனது நிலத்தில். உனது வாழ்வு உனது நிலத்தில். வந்தால் விருந்தினனாய் வா. நல்லது பகிர், நல்லது எடுத்துச்செல். இவை செய்யும்வரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பேருணர்வு நிறைந்த நிலம். வேறு நிலங்களிலிருந்து வந்தவர் எவரும் இங்கேயே இருந்துபோனதில்லை பண்டைய வாழ்வில். ரோமப்பேரரசு, பேரரசானபோதும், ரத்தம் சிந்தி சிதைந்தபோதும், பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் என பல புதிய பெரிய வாழ்வியல் முறைகள் தோன்றி, தமக்குள் முட்டி மோதி, துரத்
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!