முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெருப்புக்கோழி மனிதர்கள்

இந்தியா.

இந்தியா?

இல்லை, தமிழ்!

இல்லை, தெலுங்கு!

இல்லை, துளு!

இல்லை, பிகாரி!

இல்லை, ஒரியான்வி!

இந்தியா இந்துக்களின் நிலப்பரப்பு. 

அன்றும், இன்றும், என்றும்.

இந்து என்பது மதமல்ல. வாழ்வியல்.

வட-தென், கிழ-மேல் முனைகளிலும் இடைப்பட்ட பகுதிகளிலும் நிலப்பரப்பு, உணவு, உடை எவ்வாறு இருந்தாலும் உணர்வால் ஒன்றுபட்ட வாழ்வியல்.

பண்புகள், நன்மை தீமைகள் யாவற்றிலும் அடிப்படை ஒற்றுமை கொண்ட வாழ்வியல்.

ஐம்பூதங்களையும், அனைத்துயிர்களையும் வியந்து போற்றி வணங்கி வாழ்ந்த ஏராளமான தொல்குடியினரால் பாதுகாக்கப்பட்ட பெரும்பரப்பு.

எனது வாழ்வு எனது நிலத்தில். உனது வாழ்வு உனது நிலத்தில். வந்தால் விருந்தினனாய் வா. நல்லது பகிர், நல்லது எடுத்துச்செல். இவை செய்யும்வரையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பேருணர்வு நிறைந்த நிலம்.

வேறு நிலங்களிலிருந்து வந்தவர் எவரும் இங்கேயே இருந்துபோனதில்லை பண்டைய வாழ்வில்.

ரோமப்பேரரசு, பேரரசானபோதும், ரத்தம் சிந்தி சிதைந்தபோதும், பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் என பல புதிய பெரிய வாழ்வியல் முறைகள் தோன்றி, தமக்குள் முட்டி மோதி, துரத்தி வெட்டி, ஓடி ஒளிந்து என்று வரலாறு தேய்ந்தபோதும் நம் வாழ்வியல் சலனமற்று வளர்ந்து வந்தது.

கடல் கடந்து நாடுகள் வென்ற நம் மக்களும் நம் வாழ்வியலை கத்தி முனையில் அக்கரையில், எக்கரையிலும், திணித்ததாய் வரலாறில்லை.

Integration, Homogenization எனப்படும் ஒருங்கிணைத்தல், ஒன்றேபோல் ஆக்குதல் என்பனவெல்லாம் நம் வாழ்வியல் அறிந்திராதவை, படைக்கும், காக்கும், அழிக்கும் கடவுள்கள் அவதரிக்கும்வரை.

அதற்கு முன்பு நமக்கு வியப்பூட்டிய அனைத்தையும் போற்றிய வாழ்வியல், தடம் மாறத்தொடங்கியது இங்குதான். கடவுளர்களை வகுத்தோம், கடமைகளை பகிர்ந்தளித்தோம். கடவுளர்களுக்கும் நாம் உயர்வு தாழ்வு வரையறுத்தோம். அவர்களை வணங்கும் மக்களையும் நிறம் பிரித்தோம். அடையாளம் அவசியம் என்றோம்.

இந்திய நிலப்பரப்பு முழுமைக்கும் பரவியிருந்த மனிதக்கூட்டம். தம் தம் சுய அடையாளங்கள் இழந்து புதிதாய் வரையறுக்கப்பட்ட அடையாளங்களுக்குள் தம்மை புகுத்திக்கொண்டதே முதலாம் உலகமயமாக்கல் (ஏனைய மதங்கள் அனைத்தும் மற்ற நிலப்பரப்புக்களில் இதையேதான் செய்தன; அதாவது, நம் அணுகுமுறையை நகலெடுத்தன (they copied our approach), செம்மைப்படுத்தின, முன்னிறுத்தின, மற்ற மதங்களை படைபலம் கொண்டு தம் மதத்துக்கு மாற்றின. மாற மறுத்தவர்களை அழித்தன).

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற நமது முதுமொழியின் பொருள் குருதிகொண்டு மாற்றியமைக்கப்பட்டது இவ்விதம்.

"யாவரும் கேளிர், அவர்கள் மனிதர்களாய் இருந்தால் மட்டும்" என இரண்டாவது உலகமயமாக்கல் மத்திய ஆசிய நிலப்பரப்பில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியது மிக விரைவாய்.

"நமக்கு மட்டும் உணவிருந்தால் போதும். நம்மால் உண்ண இயலாததை அழித்து, நமக்கு வேண்டியதை மட்டும் வளர்ப்போம், நாம் அழித்தது வேறு எதுவாய் / எதன் உணவாய் / உறைவிடமாய் இருந்தால் நமக்கென்ன?" என்பது இரண்டாம் உலகமயமாக்கலின் நிலைப்பாடு.

"எல்லோரும் இதையே உடல்திறனை வைத்து மட்டும் செய்துகொண்டிருந்தால் எப்படி? உணவுக்கான நிலப்பரப்பு நம் உணவுத்தேவையை விட மெல்லவே ஆயத்தமாகிறதே. பொறிகள் செய்வோம், உணவு பெருக்குவோம்" என மூன்றாம் உலகமயமாக்கல் நோக்கி நகர்ந்தோம்.

நுகர்வு உணர்வும், வாய்ப்பும் பெருகி பெருநுகர்வாகி, "நுகர்வு மட்டுமே நாம் செய்வோம், உணவு உற்பத்தியை, நுகர்வுப்பொருட்களை முழுக்க முழுக்க எந்திரங்கள் செய்யும்" என நான்காம் உலகமயமாக்கம் இப்போது நம் வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

"உணவு, நுகர்வு பற்றிய கவலை இன்றி வாழமுடிகிறதே!. வாழும் நாளை நீட்டித்தால் நுகர்வை இன்னும் இன்னும் அனுபவிக்கலாமே!" என நாமே முன்னர் கடவுளரிடம் தந்த ஆக்கும், காக்கும், அழிக்கும் தொழில்களையும் அறிவியலிடம் கைமாற்றிவிடும் நிகழ்வு, ஐந்தாம் உலகமயமாக்கல், ஏற்கனவே தொடங்கியாகிவிட்டது.

"முடிவற்ற வாழ்வு பெறுவோம். நம் நுகர்வு வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் நம் பூமி அழிவின் விளிம்பில் சுழல்கிறதே! துரிதமாய் வேறு பூமிகளுக்கு நகர்வோம்" என்கிற முதலாவது புவி பெயர்தல் (புலம் பெயர்தல் புவிக்குள் நடப்பது. இது வேறு பரிமாணம்!) நோக்கி நிறுத்திகள் இன்றி (without brakes) மனிதவேகத்தில்* சென்றுகொண்டிருக்கிறோம். 

இந்தியா?

நம் உலகெனும் சிறுபுள்ளியின் பல துகள்களில் ஒன்று; அவ்வளவே. 

(* அசுரவேகத்தை நாம் தாண்டி ஐம்பது வருடங்கள் ஆகிப்போனது இப்போது...)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்