முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மதிலுகள்!

மதிலுகள்! ஹையோ! ஐம்பது கடந்த அந்த எழுத்தாளர் இப்போது ஒரு கைதி, சர்க்காருக்கு எதிராக கலகம் செய்ததால்! (கார்ல் மார்க்ஸ் படிக்கிறாரு! பெருங்குத்தமல்லோ!). ஜெயிலர் முதல் ஏனைய சிறை முகங்கள் பழக்கப்பட்டவை, இவரது நையாண்டியும் அவர்களுக்கு புதிதல்ல. ஆண்கள் சிறைப்பகுதியை பெரும் மதில் சுவர்கள் பெண்கள் சிறையிலிருந்து பிரிக்கின்றன. நம்மவருக்கு பெண்வாசம் நாடியில் ஊறிய ஒன்று. சிறைக்குள் நுழைந்த நொடியிலேயே பெண் சிறை அருகில் இருப்பது தெரியாமலே வாசம் மட்டும் உணர்கிறார் (பூ வாசமல்ல, பெண்வாசம் என்கிறார்!). பின்னர் பெண் சிறை மதிலுக்கு அப்புறம் என அறிந்ததும் இவர் மனம் ரெக்கை கட்டிப்பறக்கிறது. அந்த மதில் சுவரின் அருகில் வேலை இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். சுவரில் ஒரு துளை. அதன் வழியே பெண்கள் சிறையை பார்க்க இயலும். ஆனால் ஒரு வில்லங்க ஜெயிலர்(!) அந்த ஓட்டையையும் அடைத்து ஒரு கைதியிடம் அதனால் மொத்தும் வாங்குகிறார். நம்மவர் அந்த சுவரின் அருகில் வேலை செய்யும்போது பெண் வாசம் மீண்டும்! அதோடு மனதை கொள்ளையடிக்கும் சிரிப்பு சத்தம் வேறு! குரல் கொடுக்கிறார். மறுபுறமிருந்து பதில் வரு

செக்கச்சிவந்த வானம்!

சென்னையின் மிகப்பெரிய தாதா. தாதா மணநாள் கோவில் தரிசனம் முடித்து மனைவியுடன் காரில் மனைவி, குழந்தைகள், ஏனைய பெண்கள் பற்றி பேசி வருகையில் ஒரு என்கவுண்டர். கையெறி குண்டே காருக்குள் வெடித்தும் இருவரும் உயிர் பிழைக்கின்றனர். மூணு போன் கால்ல மூணு பசங்களின் அறிமுகம். பெரியவன் அப்பாவின் நிழலுலக வலதுகை, நடுவன் அப்பாவின் பணத்தை துபாயில் வெள்ளையாக்கிக்கொண்டு. இளையவன் செர்பிய நாட்டில் கள்ள (மார்க்கெட்டில்) ஆயுதங்கள் விற்கிறான்; உலகில் எந்த மூலைக்கும் டெலிவரி காரண்ட்டி! மூவரும் முதலில் மருத்துவமனையில் பின்னர் மாளிகை இல்லத்தில் (palatial house) சந்திக்கின்றனர். குடும்பத்தில் பாசப்பிணைப்பு, குச் நஹி! உடலில் ஓடுவது ரத்தமில்லை, பனிக்குழம்பு என்ற அளவில்! 'யார் செய்தது?'  'அரியாசனம் காலியானால் அடுத்த முடிசூடி யார்?' அப்பாவின் எதிரி தாதாவை சந்தேகப்பட்டு தாதா போர் (gang war!) தொடங்க, சேதாரம் இரு பக்கமும். மூத்த தாதா இருவரும் சமாதானம் பேச, இளையவர் இருவரும் ஊர் திரும்ப (அப்பாவோட நாற்காலி எனக்குதான் என தம்பிகள் இருவருமே ஆர்வத்தை அண்ணனிடம் வெளிப்படுத்தியபின்)

மௌனம் எனக்கொரு போதிமரம் - Version 2

மௌனம் எனக்கொரு போதிமரம். விழித்திருக்கும் நொடியெலாம் மௌனம், மையிருள் வனம் போல.  உலகின் ஓசையனைத்தும் இதிலிருந்தே எழுந்து இதிலேயே அடங்கும், அடர் மௌனம். விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த மௌனம்... முழுதாய் உள் நிரப்ப காது பொத்தி கண்கள் மூடி இதழ்களும் மூடி மூச்சு முட்ட மகிழ்வாய் தவிக்கும் பேரன்பு.  ஆழத்தின் ஆழம் காணமுடியாத நினைவு அடுக்களில் சிக்கி மீண்டு ஊற்றெடுத்து பொங்கிப்பெருகி ஓசையற்று வழிந்தோடும் அடர்மௌனம் என் கண்களின் வழியே. இடையறாது வழியும் என் மௌனத்தின் மெல்லிய இரைச்சல் கேட்டு திறக்கும் சில விழிகளேனும்.  ஓசைகளற்ற ஓசை வழியே அவ்விழிகளை நிறைத்து உள்ளிறங்கி அவ்வுள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் மௌனத்தை தட்டியெழுப்பி கதைகள் பல பேசும் என் மௌனம், மௌனமாகவே. பேரன்பின் பெருமௌனத்தில் திளைக்கும் மோனப்பெருவெளி எங்கும் ஞானத்தின் களி நடனம், திளைப்பவர் விழிகளில் தீபமேற்றும். அன்பின் தரிசனம் சுடராடும் என் விழிகள் வழி, உன் விழிகள் வழி, உலகெங்கும் தீட்சை பெறும், மோட்சம் பெறும். மௌனம் நமக்கது போதிமரம்.

நிலவு பார்த்தல்

திருமூலர் அருளாத மூன்று மந்திரங்கள்!

திருமூலர் அருளாத மூன்று மந்திரங்கள்! மூன்று மாதம் இவற்றை முயன்றவர் வாழ்நாள் நலம் பெறும், அதன் பின்னும் தொடர்ந்து பயின்றால் :-) முதலாம் மந்திரம்: -------------------------------- "பற்பசை தவிர்த்தவனே குடல்நோயின்றி வாழ்வான்!" அதாகப்பட்டது... பெரு வணிக பற்பசை - பல் முளைத்த நாளிலிருந்து நாம் 'உண்ணும்' நஞ்சு. கேடு தரும் ஆறிலிருந்து பத்து நச்சுக்கள் இல்லாத பற்பசை மிக மிக குறைவு! கார்சினோஜெனிக் எனப்படும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சும் இதில் அடக்கம்! இவற்றை அறவே தவிர்த்து இயற்கை விளைபொருட்களாலான பற்பொடி 'உண்ணுங்கள்'!. மூன்று மாத பயன்பாட்டில் வயிற்று உருமல், பொருமல் குறையும்; மற்ற உணவும் நல் உணவாய் இருந்தால்! இரண்டாம் மந்திரம்: ------------------------------------- 'வெள்ளைச்சர்க்கரை மகா பீடை" அதாகப்பட்டது... வெள்ளை சர்க்கரை உடலுக்கு ஒவ்வாத நச்சு, எந்த வடிவில் உட்கொண்டாலும். கருப்பு க்ளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாளாம் வெளுத்த தோல் வேண்டுமென. சர்க்கரையோ வெள்ளையாவதற்கு நூறு நச்சுக்களில் குளித்து, வெண்மை நிறத்தினுள

பெரும்பாண்டிக்கு புறப்பட்ட பூதகணங்கள்!

ஆவணம்.  தமிழகத்தில் தஞ்சை தாண்டி பட்டுக்கோட்டை, பேராவூரணி என நூல்பிடித்து போனால் பேராவூரணி தாண்டி வருகிற ஒரு சிறு கிராமம். அங்குமேல்நிலைப்பள்ளி ஒன்று, கோ எட். தமிழ் மட்டுமே பயிற்று மொழி (ஆங்கிலம்கூட தமிழில்தான்!!). படிப்பைத்தாண்டி அவ்வப்போது கீரமங்கலம் வீ.ஆர்.கே தியேட்டரில் பாடாவதி திரைப்படம் ஏதாவது பார்க்க அழைத்துச்செல்வார்கள். அதுவே பெரிய விஷயமாய் பேசப்படும் :-) இப்படியான ஒரு சூழலில், 'மாத்தி யோசி மனோகரா' என நானே ஒரு டூர் ப்ரோக்ராம் ஆர்கனைஸ் செய்கையில் நான் எட்டாம்ப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். 'பெரும்பாண்டிக்கு யாரெல்லாம் வரீங்க?! ஒலகத்திலயே ரொம்ப அற்புதமான எடமாம். சோலையும் ஆறும் அருவியுமா இருக்குமாம். போறதே ரொம்ப சி்ரமமாம், போனவங்களுக்கு திரும்பி வரணும்னே தோனாதாம். பஸ் டிக்கட்டு 25 பைசாதானாம்' என நான் வகுப்புத்தோழர்களிடம் அறிவித்துவிட்டு விளையாடப்போய்விட்டேன். வாயுள்ள பிள்ளை பரப்பும் என்பதாய் நான் கேம்ஸ் பீரியட் முடிந்து வரும்முன்னே பெரும்பாண்டி வைரலாச்சு. அஞ்சாம்ப்புலேர்ந்து பத்தாம்ப்பு வரை பெண்டு பிள்ளைகளெல்லாம் சேதி கேள்விப்பட்டு பெயர

பனையோலை கலகலவென...

துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது: (அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-) 'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ... கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட.  சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)! நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வான்னு கண