மதிலுகள்! ஹையோ! ஐம்பது கடந்த அந்த எழுத்தாளர் இப்போது ஒரு கைதி, சர்க்காருக்கு எதிராக கலகம் செய்ததால்! (கார்ல் மார்க்ஸ் படிக்கிறாரு! பெருங்குத்தமல்லோ!). ஜெயிலர் முதல் ஏனைய சிறை முகங்கள் பழக்கப்பட்டவை, இவரது நையாண்டியும் அவர்களுக்கு புதிதல்ல. ஆண்கள் சிறைப்பகுதியை பெரும் மதில் சுவர்கள் பெண்கள் சிறையிலிருந்து பிரிக்கின்றன. நம்மவருக்கு பெண்வாசம் நாடியில் ஊறிய ஒன்று. சிறைக்குள் நுழைந்த நொடியிலேயே பெண் சிறை அருகில் இருப்பது தெரியாமலே வாசம் மட்டும் உணர்கிறார் (பூ வாசமல்ல, பெண்வாசம் என்கிறார்!). பின்னர் பெண் சிறை மதிலுக்கு அப்புறம் என அறிந்ததும் இவர் மனம் ரெக்கை கட்டிப்பறக்கிறது. அந்த மதில் சுவரின் அருகில் வேலை இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். சுவரில் ஒரு துளை. அதன் வழியே பெண்கள் சிறையை பார்க்க இயலும். ஆனால் ஒரு வில்லங்க ஜெயிலர்(!) அந்த ஓட்டையையும் அடைத்து ஒரு கைதியிடம் அதனால் மொத்தும் வாங்குகிறார். நம்மவர் அந்த சுவரின் அருகில் வேலை செய்யும்போது பெண் வாசம் மீண்டும்! அதோடு மனதை கொள்ளையடிக்கும் சிரிப்பு சத்தம் வேறு! குரல் கொடுக்கிறார். மறுபுறமிருந்து பதில் வரு
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!