முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருமூலர் அருளாத மூன்று மந்திரங்கள்!


திருமூலர் அருளாத மூன்று மந்திரங்கள்!

மூன்று மாதம் இவற்றை முயன்றவர் வாழ்நாள் நலம் பெறும், அதன் பின்னும் தொடர்ந்து பயின்றால் :-)

முதலாம் மந்திரம்:
--------------------------------

"பற்பசை தவிர்த்தவனே குடல்நோயின்றி வாழ்வான்!"

அதாகப்பட்டது...
பெரு வணிக பற்பசை - பல் முளைத்த நாளிலிருந்து நாம் 'உண்ணும்' நஞ்சு. கேடு தரும் ஆறிலிருந்து பத்து நச்சுக்கள் இல்லாத பற்பசை மிக மிக குறைவு!
கார்சினோஜெனிக் எனப்படும் புற்றுநோய் உண்டாக்கும் நச்சும் இதில் அடக்கம்!

இவற்றை அறவே தவிர்த்து இயற்கை விளைபொருட்களாலான பற்பொடி 'உண்ணுங்கள்'!. மூன்று மாத பயன்பாட்டில் வயிற்று உருமல், பொருமல் குறையும்; மற்ற உணவும் நல் உணவாய் இருந்தால்!

இரண்டாம் மந்திரம்:
-------------------------------------

'வெள்ளைச்சர்க்கரை மகா பீடை"

அதாகப்பட்டது...
வெள்ளை சர்க்கரை உடலுக்கு ஒவ்வாத நச்சு, எந்த வடிவில் உட்கொண்டாலும்.

கருப்பு க்ளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாளாம் வெளுத்த தோல் வேண்டுமென. சர்க்கரையோ வெள்ளையாவதற்கு நூறு நச்சுக்களில் குளித்து, வெண்மை நிறத்தினுள் அத்தனை நச்சுக்களையும் பொதித்து, உண்பவருக்கு கடத்தும், நோயில் வீழ்த்தும், உறுதியாய்!

நாட்டு சர்க்கரை நலம்.

முதலாம் மந்திரத்துடன் இதனையும் சேர்த்தால், இரண்டு மூன்று மாதங்களில் வயிற்று கோளாறுகள் காணாமலே போய்விடும்; மற்ற உணவும் நல் உணவாய் இருந்தால்! 

மூன்றாம் மந்திரம்:
----------------------------------

"சூரிய அடுப்பில் குளி"!

அதாகப்பட்டது...
தினமும் காலை 7-9 மணிக்குள் (அல்லது மாலை 4-6 மணிக்குள்) மூன்று இளையராஜா பாடல்களுக்கு முதுகு காட்டியும், மேலும் மூன்று இளையராஜா பாடல்களுக்கு தொப்பை காட்டியும் கூடுமான வரை தோலில் வெப்பம் படும்படி (மொட்டை மாடி with மறைப்புடன், நமக்கும், மாடிக்கும்!) நம்மை நாமே டோஸ்ட் செய்துகொண்டால் நமது பேட்டரி full charge + reserve charge ஆகி, விழித்திருக்கும் நேரம் முழுதும் எனர்ஜி குறையாமல், சோர்வின்றி, களைப்பின்றி சுற்றி வரலாம்! 


இது தவிர நம் அனைத்து உடல் உறுப்புக்களும் சார்ஜ் ஆகி மகிழ்வாய் தத்தமது வேலைகளை செவ்வனே செய்யும் :-)
இதையெல்லாம் விட மேலான ஒன்றும் நிகழும்; முழு உடலும் வியர்க்கும்!

இவற்றை செய்து, பலனை உணர்ந்து,feel ஆகி பதிவிடுகிறேன். பயின்றால் நலம்!

பின் குறிப்பு 1:

வீட்டில் உள்ளவர்களிடம் 'சொல்லி விட்டு' தொடங்குங்கள்; மெரண்டுடுவாங்க, இல்லைன்னா:-)

பின் குறிப்பு 2:

காலை 7-9 அல்லது மாலை 4-6 முகூர்த்தத்தை தவறவிட்டவர்கள், சூடு பொறுக்கும் தன்மையை பொறுத்து இடைப்பட்ட நேரத்திலும் 'சூரியக்குளியல்' செய்யலாம். சூரியனின் கதிரனைத்தும் நன்மை மட்டுமே பயக்கும். :இந்த வெயில் ஆகாது! அந்த வெயில் ஆகாது!' என்பதையெல்லாம் தயவு செய்து நம்பவேண்டாம்.


பின் குறிப்பு 3:

நண்பர் ஒருவர் சில மாதங்கள் பயின்றதில் தோல் நோய், மூச்சுத்தேக்கம், உயர் இரத்த அழுத்தம் எல்லாம் போயே போச், போயிந்தி, Its gone! என்கிறார் மலர்ந்த முகத்துடன்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்