முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பனையோலை கலகலவென...


துறு துறு குழந்தைகளை ஷாப்பிங் அழைத்துச்சென்ற இடங்களில் சமாளிப்பது எப்படி என இந்த துறையில் விற்பன்னரான திருத்துறைப்பூண்டி லேட். சீனிவாசன் தாத்தாவிடம் கேட்டபோது அவர் சொன்னது:

(அவருக்கு ஆறு குழந்தைகள்; அவரது அண்ணனுக்கு 12! அண்ணனை விடுத்து இவரிடம் கேட்டதன் காரணம் படிக்கையில் விளங்கும் :-)

'நீ டவுசர் போட ஆரம்பிச்ச டைம் அது. நியாபகம் இருக்கா? கும்மோணம் மாமாங்கத்தில என் கைய பிடிச்சிட்டு குதிச்சி குதிச்சி வருவ...

கூட்டமான கூட்டம், எக்கச்சக்கமான கடைங்க... நீ என்ன பண்ணின, ஒரு கூலிங் க்ளாசு கடையில ப்ரேக் போட்டு நின்ன. சும்மாதான் நிக்கிறியோன்னு கொஞ்சம் அசந்தனா, அந்த நேரம் பாத்து ஒரு கண்ணாடிய பாத்து கைய நீட்டி, தாத்தா அது வேணும் தாத்தா... வாங்கித்தாங்க தாத்தா...ன்னு கேட்ட. 

சின்னப்புள்ள, ஆசையா கேக்குற... சரின்னுட்டு கடைக்காரன பாத்து, என்ன வெலப்பான்னு கேட்டேன். அவன் என்னடான்னா இருபத்தஞ்சு ரூபாங்கறான் கடங்காரன் (இன்றைய மதிப்பில் இரண்டாயிரம்)!

நான் ஒண்ணுமே சொல்லாம ஹா ஹா ஹா ன்னு சிரிச்சிட்டு, அங்கே இன்னொரு கடைல டெல்லி அப்பளம் விக்கிறாங்க! வாழை இலை சைசுக்கு! போலாம் வான்னு கண்ணை சிமிட்டக்கூட கேப் உடாம, ஒங்கைய பிடிச்சி, மிளகாய்த்தூள் வாசனய வச்சே கடைய கண்டு பிடிச்சிடலாம், ஒன்னால முடியுமா? ன்னேன். நீயும் துள்ளிக்குதிச்சி எனக்கு முன்னாடி ஓட ஆரம்பிச்சே!' ன்னார்.

அந்தக்கண்ணாடி, தங்க ப்ரேமில் ப்ரவுன் கலரில், இன்னும் என் மனக்கண்ணில் மறையாமல் நிற்கிறது! ஆனால் அது கிடைக்கவில்லையே என்ற ஏக்கமோ வருத்தமோ துளியும் அன்றே இல்லை!

அப்பளமாவது கிடைக்குமேன்னு ஜொள்ளு ஒழுக போனா, மொத்த கும்மோணமும் அங்க நிக்கிது! ஒரு வழியா என்னை இன்னொரு கூட்டமில்லாத கடைக்கு அழைத்துச்சென்று அதில் பனையோலை காற்றாடி ரெண்டு ரூபாய்க்கு வாங்கித்தந்தார். அதை கையில் உயர்த்திப்பிடித்தபடி காறறைக்கிழித்து நான் ஓடுகையில் அது சுற்றிய வேகம்!!!!!! விமானத்தையே ஓட்டுவது போன்ற அந்த மகிழ்ச்சி இன்றுவரை அடி மனதில் ரசக்கப்பி போல!

இந்த நிகழ்வில் ஏராளமான உளவியல் முறைகளும் ஒரு வாழ்வியல் நெறியும் பொதிந்து இருப்பதை உணர்ந்தவர்களுக்கு இன்று சிறார்கள் மொபைல் / ஐபேட் வழியே அமேசானிலிருந்து பெற்றோர் அனுமதியின்றி ஆர்டர் செய்வதும், அவர்களின் பெற்றோர்கள் ஸ்விக்கியில் உணவு வாங்கி சாப்பிடுவதும் இன்னும் சில நாட்களுக்கு வருத்தம் தரும். அதன் பின்... பழகிவிடும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்