என் விழித்திரையில் - சுடலைமாடன்! 'சே, பஸ்ச மிஸ் பண்ணியாச்சே! இப்ப என்ன பண்றது?' காலேஜ்க்கு அடுத்த பஸ் இரண்டு மணி நேரம் கழித்து என அறிந்ததும் அருகில் இருந்த தியேட்டரில் டிக்கட் வாங்கி ('படம் போட்டு இருவது நிமிசம் ஆச்சி' என்றார் டி. கிழிப்பவர்) நுழைந்தேன். ஐந்து நிமிடத்தில் முன்கதை பிடிபட்டுவிட்டது. ஒரு சிற்றூரில் கோயில் பூசாரியின் மகனும் அதே ஊரில் ஒரு பெரிய மனிதரின் வைப்பாக இருக்கும் பெண்ணின் மகளும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். இரு குடும்பமும் கடுமையாக எதிர்க்க காதல் பற்றிப்பரவி அவள் உண்டாகிறாள். ஏராளமான அவமானங்களோடு ஊர் எல்லை தாண்டி ஒதுக்கி விடப்படுகிறாள். பூசாரி தந்தை ஊர்த்திருவிழாவில் சுடலைமாடசாமியாக அந்த வருடம் வரை இரா வேட்டைக்கு வழக்கமாக செல்பவர், கூடிய சபை நடுவில் கல்லூரிப்படிப்பு படிக்கும் மகனுக்கு அந்த பொறுப்பை திணிக்கிறார். தந்தை ப்ளஸ் ஊர்க்கட்டுப்பாடுகளை மீற இயலாத மகன் முதன் முதலாய் சுடலைமாடனாய் இரவில் வேட்டைக்கு கிளம்புகிறார். வேட்டைக்கு செல்கையில் எதிரில் எவர் வந்தாலும் கொன்று விடுவார் என ஐதீகம். எனவே ஊர் அடங்கிக்கிடக்கிறது. ஊர்
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!