முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிம் ஜோங்கின் சுத்தியல்

நம் ஈரல்குலையை உலுக்கிக்கொண்டிருக்கும் இந்த மகாமாரியும் 'கடந்து போகும்'. "சூப்பர்! சீக்கிரமே நார்மல்சி திரும்பிடும்!" என்றுதான் நாம் அனைவரும் மகிழ்வோம். நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான வாழ்வியலுக்கு நாம் திரும்பவே வேண்டாம் என்று இறைஞ்சுகிறேன்! நார்மல் வாழ்க்கை இதுவரை என்ன சாதனைகள் நிகழ்த்தியிருக்கிறதென்று பார்ப்போம்: - இயற்கை வளங்களை கண்மூடித்தனமாய் கொள்ளையடித்தது - வசதி இருப்பவருக்கும் இல்லாதவருக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியது - பூமியின் துரையீரலில் (காடுகள்) கோடானுகோடி ஓட்டைகள் இட்டது, தலைக்கவசமாய் நமை காக்கும் ஓசோன் படலத்தை கிழித்தது, காற்று மாசு மூலம் நம் நுரையீரல்களையும் பதம் பார்த்தது - மனிதர்களுக்கிடையில் தீரா வெறுப்பை விதைத்தது - கானக வாழ் மக்களை ரேஷன் கடைகள் முன் வரிசையில் நிற்கவைத்து அரிசி, பருப்புக்காக கையேந்தவைத்தது - இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இந்த நார்மல், மறுபடி வேண்டவே வேண்டாம். புதியதொரு விதி செய்வோம்... என ஒரு புதிய நார்மல்சியை நாம் சிந்திக்கவேண்டியிருக்கிறது...உருவாக்கவேண்டியிருக்கி

எங்கெங்கு காணினும் வைரஸடா!

வைரஸ் என்ற உயிரி... உயிர் வாழ அதற்கு உணவு தரும் கொடை வள்ளல் ஒருவர் வேண்டும். அவர் தந்த உணவு, இருப்பிட வசதி காரணமாய் மகிழ்ந்து வளர்ந்து... தன்னைத்தானே வெகு வேகமாய் பிரதி எடுக்கும்.  அங்கு இடம் போதவில்லையென்றால் இன்னும் பல கொடையாளர்களை தேடும், பரவும். வைரசின் அடிப்படைத்தேவை உயிர் வாழ்தல், தனக்கு இடம் தந்த கொடையாளரை கொல்வதல்ல. தானும் வளரணும் அவரும் இருக்கணும் என்பதாய் அதன் சார்பு நிலை. வைரஸின் இவ்வாறான தங்கலை அதற்கு இடம் தந்தவர் விரும்பாவிட்டால் அதை துரத்த / மீண்டும் தம்மை அனுகாதிருக்க மருந்து ஏதேனும் பயன்படுத்துவார். அந்த மருந்து கொரோனா. அப்போ வைரஸ்? அப்போ கொடையாளர்? இந்த மருந்து கொஞ்சம் தீவிரமாய் வைரஸை ஒழித்தே தீருவேன் என கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது ஏன் தெரியுமா? ம்யூட்டேஷன் காரணமாய் "நாமும் வளரணும், நமக்கு இடம் தந்த கொடையாளரும் (பூமிதானுங்கோ!) வளரணும்" என்ற அடிப்படை விதியிலிருந்து நழுவி, நமக்கு இடம் தந்த பூமியை அழித்தே தீர கங்கணம் கட்டிக்கொண்டு fast forward இல் இதுவரை ஓடிக்கொண்டிருந்த வைரஸ்கள் எல்லாம் Pause mode இல், ச

அடங்கமாட்டேங்குதே ஊரு!

ஊரு அடங்கமாட்டேங்குதே! நாட்கள் நகர நகர ஊரடங்கு இருப்பது மாதிரியான அறிகுறிகள் குறைந்தவண்ணமே இருக்கின்றன. மருந்துப்பொருட்கள் வாங்கித்தர மட்டுமே கடந்த பதினைந்து நாட்களில் சில முறை மெயின் ரோடு போக நேரிடும். இன்று அதில் ஒரு நாள். மருந்து விற்கும் கடை வாசலில் மாஸ்க் அணிந்த மூன்று பேர். மருந்து வாங்க வந்தவர்கள் என்று எண்ணி இடைவெளி விட்டு நின்றேன். கடைக்காரர் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே பிசியாக இருக்கவும் அந்த மூவர் ஏன் எனப்பார்த்தால்... அரட்டைக்கச்சேரி! 'ஏங்க, கொரோனாவைரஸ் நியூசெல்லாம் பாத்தீங்கதானே? அவசியம்னா மட்டும் வெளில வரலாம்னு சொல்லியும் இப்படி பண்றீங்களே நியாயமா? உங்களுக்கு தொத்துனா உங்க வீட்டில் உள்ளவங்களையும் பாதிக்குமே?' என்றேன். 'வந்தா... போவ வேண்டியதுதான்!' என ஜஸ்ட் லைக் தாட் பதில் சொல்லிட்டு ஞானச்செருக்கோடு கச்சேரிய அவங்க நடத்த, நொந்துபோய் மருந்தோடு வீடு திரும்பலாமென்றால், ஊரடங்கின் அறிகுறியே இல்லாத அளவு மக்களும், வாகனங்களும் சாலைகளில்... தனித்திரு, விழித்திரு, பசித்திருன்னு சொன்ன வள்ளலாரையே 'கடை விரித்தேன்... கொள்வா

ஆலிவருக்கு என்ன ஆச்சி? / Oliver's Story

"Sometimes I ask myself what I would be if Jenny were alive. And then I answer: I would also be alive" ஆலிவரோட ப்ரச்னையே இதுதான். கண்ணை திறந்ததில் இருந்து மூடுவது வரை ஜென்னி, ஜென்னி, ஜென்னி... ஜென்னி கேன்சரில் இறந்தபோது அவளுக்கு வயது 24, just twenty four... இரண்டு ஆண்டுகள் ஜென்னி இல்லாத வாழ்வு, அவளுடைய நினைவுகளோடு மட்டுமே... வீடு, வாகனம், வேலை வசதிகள் நிறைந்திருந்தாலும் ஜென்னி இல்லாத வெறுமை அவனை வாட்டுகிறது. நடைபிணமாய் வாழ்கிறான். ஜென்னியின் அப்பாவும், ஆலிவரின் நண்பர்களும் எவ்வளவோ பெண்களை பரிந்துரைத்தும் அவன் மனம் தேடுவது இல்லாத ஜென்னியை மட்டுமே. ஆனால் காலம் யாரையும் மாற்றுமே! அவனையும் மாற்றுகிறது. மறுபடியும் ஒரு magic நிகழ்கிறது. ஆலிவர் உள்ளம் மீண்டும் காதல் வசம். மார்சி, ஆளுமை மிகுந்த, வெற்றிகரமான தொழிலதிபர் (ஆயத்த ஆடைகள் விற்கும் பெருநிறுவனம்). அவள் அப்போதுதான் ஒரு துன்பமான திருமண உறவை முறித்து தன் காயங்களை ஆற்றிக்கொண்டிருப்பவள், புத்திசாலி.  காதல் பெருக, இருவரும் இணைந்து வாழ முடிவெடுக்கின்றனர். ஆலிவர் என்ன முயன்றாலும்

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்