முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆலிவருக்கு என்ன ஆச்சி? / Oliver's Story


"Sometimes I ask myself what I would be if Jenny were alive.
And then I answer:
I would also be alive"

ஆலிவரோட ப்ரச்னையே இதுதான்.

கண்ணை திறந்ததில் இருந்து மூடுவது வரை ஜென்னி, ஜென்னி, ஜென்னி...

ஜென்னி கேன்சரில் இறந்தபோது அவளுக்கு வயது 24, just twenty four...

இரண்டு ஆண்டுகள் ஜென்னி இல்லாத வாழ்வு, அவளுடைய நினைவுகளோடு மட்டுமே...

வீடு, வாகனம், வேலை வசதிகள் நிறைந்திருந்தாலும் ஜென்னி இல்லாத வெறுமை அவனை வாட்டுகிறது. நடைபிணமாய் வாழ்கிறான்.

ஜென்னியின் அப்பாவும், ஆலிவரின் நண்பர்களும் எவ்வளவோ பெண்களை பரிந்துரைத்தும் அவன் மனம் தேடுவது இல்லாத ஜென்னியை மட்டுமே.

ஆனால் காலம் யாரையும் மாற்றுமே! அவனையும் மாற்றுகிறது.

மறுபடியும் ஒரு magic நிகழ்கிறது. ஆலிவர் உள்ளம் மீண்டும் காதல் வசம்.

மார்சி, ஆளுமை மிகுந்த, வெற்றிகரமான தொழிலதிபர் (ஆயத்த ஆடைகள் விற்கும் பெருநிறுவனம்). அவள் அப்போதுதான் ஒரு துன்பமான திருமண உறவை முறித்து தன் காயங்களை ஆற்றிக்கொண்டிருப்பவள், புத்திசாலி. 

காதல் பெருக, இருவரும் இணைந்து வாழ முடிவெடுக்கின்றனர்.

ஆலிவர் என்ன முயன்றாலும் ஜென்னி பிசாசை அவனால் மறக்கமுடியவில்லை.
'இதுவே ஜென்னியா இருந்தா இப்படி பண்ண மாட்டா', 'ஜென்னி மாதிரி வராது' என்பதாக வாக்கு வாதமாகி, கருத்து வேற்றுமை வலுக்கிறது. ஒரு காரசாரமான தருணத்தில், 'உனது நிறுவனத்திற்கு குறைந்த செலவில் ஆடைகள் தயாரிக்க Hingkong இல் Sweatshops ஐத்தானே பயன்படுத்துகிறாய்!?' என ஆலிவர் குறை கூற (தொழிலாளரை கொத்தடிமை போல நடத்தும், குறைந்த ஊதியத்தில், அடிப்படை காற்றோட்ட வெளிச்ச சுகாதார வசதிகள்கூட இல்லாத வியர்வைக்கடைகள்...) வெகுண்டெழுந்த மார்சி, தனது பாட்டி அப்படி ஒரு Sweatshop இல் உழைத்ததையும், மார்சி தொழிலாளர்களை மேன்மையாக நடத்துவதையும் சொல்லி எதிர்வாதம் செய்ய, உறவு அறுந்து போகிறது.

மனமுடைந்த ஆலிவருக்கு, அவனோடு ஒட்டுறவு அறுந்துபோன தந்தை ஆறுதலாயிருக்கிறார். தந்தை மகன் உறவில் தொலைந்த பலவற்றை இருவரும் மீட்டெடுக்க காலம் துணை செய்கிறது. ஆலிவர் தனது தந்தையின் நிறுவனத்திலேயே வேலைக்கு செல்கிறான்...

ஆலிவர் மீண்டும் காதல் வயப்படலாம், மறுமணமும் செய்யலாம், பிரியலாம், வேலையையும் விடலாம், இடம் மாறலாம்....

வாழ்வெனும் மகாநதியில் நீரோட்டத்தோடு நகர வேண்டிய யதார்த்தத்தை, ஆலிவரின் கதை வழியே ஜென்னியின் பிரிவால் வாடிய ஒரு தலைமுறையையே வாழ்வின் அடுத்த நிலைக்கு Erich Segal நகர்த்திச்சென்ற விதம், அற்புதம்.

Life goes on...

நூற்றி சொச்சம் பக்கங்களே ஆலிவரின் கதை.

Love Story படித்து சிறிய இடைவெளி விட்டு Oliver Story படித்துப்பாருங்கள். அது ஒரு வாழ்வனுபவம் தரும்! 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்