முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வள்ளுவனின் சீற்றம், மூலனின் ஏமாற்றம்...

சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் யானைகளும், புலிகளும், சிங்கங்களும், மான்களும் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளன. பி.பி நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பூனைகள் கூடுவாஞ்சேரியில் திடீர் மரணம். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட முதலைகள் சென்னை முதலைப்பண்ணையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கின்றன. ஏங்க இது மாதிரி செய்திகள் ஒன்று கூட வர்றதில்ல? மிருகங்கள அடிச்சி விழ வைக்க, மாமிசத்த கிழிச்சி சாப்பிட, வேற விலங்குகள் / பறவைகள்கிட்டேர்ந்து தன்ன காப்பாத்திக்க கூரிய நகங்களோ, முள்ளுள்ள வாலோ, மரம் ஏறித்தொங்க வாலோ அல்லது நிறம் மாறும் தன்மையோ எதுவுமே இல்லாத ஏங்க இந்த மனுசப்படைப்பு? விலங்கு பறவை பூச்சிக்கெல்லாம் மேல சொன்ன ஆற்றலை எல்லாம் படைச்ச கடவுளுங்க, இதெல்லாம் யோசிக்கத்தானே நமக்கு சிந்திக்கிற தன்மையை தந்திருக்காங்க? நாம வரம்பு இல்லாத, தேவையில்லாத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்னு எங்கயோ போயி, அடிபட்டு இடிபட்டு மருந்து மாத்திரைகள் உதவியோட உசுர வளக்குற நிலைமைக்கு ஆளாயிட்டோமே. ஊனை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனேன்னு சொன்ன திருமூலரே இன்னைக்கு இருந்தா மூல வியாதியால, முட

பாபெல் கோபுர உச்சியில்... - At the top of the Tower of Babel...

130 கோடி முகமுடையாள்  ... செப்புமொழி பதினெட்டுடையாள் ... ஆனாலும் ஏன் புரிதலின்றி இருக்கிறோம்? ஏன் சிந்தனை ஒன்றுடையாளாக முடியவில்லை? ஏன் நம்மிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகிறது (தூரம் சுருங்கிக்கொண்டே போனாலும்)? இளவரசன் சித்தார்த்தனுக்கு பேச்சு வரவில்லை என்பதே ஊரெங்கும் பேச்சாக இருந்ததாம். அரசனும் அரசியும் மிக கவலையோடு பல முயற்சிகளை செய்து பார்த்தும் பயனில்லையாம். இயல்பாக தன்னைச்சுற்றி நடப்பது அனைத்தும் சித்தார்த்தனுக்கு புரிந்தாலும் பேச்சின்றி வளர்ந்தானாம். 'இளவரசை பேச வைப்பவருக்கு அவர் கேட்டதெல்லாம் தருவேன்' என அரசன் முரசறிவிக்க சொல்ல, நாடெங்குமிருந்து மருத்துவர்களும், மந்திரவாதிகளும் அரண்மனை நோக்கி படையெடுத்து, முயன்றும் முடியவில்லையாம். கவலையை சற்றே குறைக்க எண்ணிய அரசன், கானக வேட்டை நிகழ்வுக்காக இளவரசை அழைத்துச்சென்றானாம். அங்கும் மௌனமாகவே இளவரசன் சுற்றிவரவும் கவலை தாளாது காட்டுமரமொன்றின் நிழலில் அரச பரிவாரங்கள் ஒதுங்கி ஓய்வெடுத்தனவாம்.  அடுத்த நாள் அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு அனைவருக்கும் முன்னர் எழுந்த சித்தார்த்தன் சத்

தீற்றல்

இருட்டுப்பெருமரமெங்கும் தீப்பொறி சிதறலாய்  சிற்றூரின் வயல்நடுவே முன்னிரவில் காண்பவரின் கனவுக்கு பாதையிட்டு  இருளில் கரைந்துபோகும் வால்வெளிச்சம், ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம்... கண்டு கடந்துபோன நொடியில் வாழ்ந்து முடித்த வாழ்வின்  மிச்சம் ஊறிய கருவிழிகளில்  உடைந்த நிலவாய் உறைந்துமின்னும் இன்னுமந்த  வால்வெளிச்சம். காலமென்ற ஒன்றே  மின்மினியாய் மின்னிமறைந்த பேரிருளில் கரைந்துபோன ஒற்றைமரம் விடிந்ததும் தன்னைத்தேடி தன்னையடைந்து தனியே தன்னந்தனியே மின்மினிக்காய் காத்திருக்கும் மீண்டுமங்கே. என்ன முயன்றும் அதேமரம் ஆகாது அம்மரம். என்ன முயன்றும் மின்மினியாகாது சூரியனும், ஒருபோதும். இருளும் ஒளியும் கூடிக்கலந்து கலைந்து பிரிந்து மீண்டும் கூடிக்கலந்து... ஆடிச்செல்லும் காலத்தின் பெருநடனம். x

பொறுக்க மறந்த கோழி

கோழியொன்று கையிலே பையுடன் ரேஷன் கடைக்கு புறப்பட்டது. எதிரில் வந்த பலநாள் நட்புக்களுடன் வணக்கம் பறிமாறிக்கொண்டே வந்ததில் லேட் ஆகிப்போச்சி. ரேஷன் கடையை இழுத்து மூடி கடைக்காரனும் புறப்பட்டு போயாச்சி. பொட்டு அரிசி கூட தரையில் சிந்தாமல் டெக்னாலஜி துணையோடு பட்டுவாடா நடப்பதால் துடைத்து எடுக்கவும் ஒன்றுமில்லை.  இனி அடுத்த வாரம்தான் அரிசி கிடைக்கும் என்ற நினைவில் கொண்டையை தொங்கப்போட்டுக்கொண்டு வெயிலில் உஸ் உஸ் என காற்றை ஊதிக்கொண்டு அலுவலகம் நோக்கி நடையை கட்டியது. நிழலுக்கு ஒதுங்க மரங்களில்லை. தார் சாலைகள் அதன் கால் தோலை வறுக்க, வயிற்றை பசி கிள்ள, தள்ளாடி தள்ளாடி நடைபோட்டது. சாலையில் விரையும் வாகனங்களில் செல்பவர் எவரும் கோழியை கவனித்ததாக தெரியவில்லை. கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகூட சுமக்கமுடியாத கனமாக ஆகிப்போன உணர்வில் எட்டி நடை போட்டது. கண்கள் செருகி கால்கள் பிண்ணி தரையில் சாய்ந்து மயக்கமாகிப்போன அந்த நொடிகளில் அதன் நினைவுப்படலத்தில் விரிந்தது காட்சியொன்று... 'மரங்கள் அடர்ந்த பச்சை நிலம். விதம் விதமான வண்ணங்களில் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மலர்கள்,

சாமீ என் வூட்டக்காணோம் சாமீ!

அண்மையில் கோவாவில் ஒரு கிராமத்தில் பசு மாடுகளை புலி அடித்துக்கொன்று தின்றதாக கொதித்தெழுந்த ஊர் மக்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு விலங்குகள் காப்பகத்தில்(!) மூன்று குட்டிகளுடன் அடைபட்டிருந்த ஒரு புலிக்கும் குட்டிகளுக்கும் சேர்த்து விஷ உணவு தந்து அனுப்பி விட்டார்கள். இது தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று சட்டசபையில் ஆணித்தரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்; 'மனிதர்கள் பசுக்களை வதைத்து தின்றால் தண்டனை தருகிறோம். அதுபோல புலிகளையும் தண்டிக்கவேண்டுமல்லவா?' 1. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து வலம்வரும் புலி மனுஷனைக்கடிக்கும்போது "கண்டதும் சுட உத்தரவு" என்பது மாறிப்போய், 'ஆட்டைக்கடித்தால் சுடு, மாட்டைக்கடித்தால் சுடு' என அரசாணை பிறப்பிக்கலாம். 2. விலங்கு உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பரித்தால் அடக்கலாம், நசுக்கலாம் அல்லது போனால் போகிறதென்று Animals Penal Code வரையறுத்து, இன்னன்ன குற்றங்களுக்கு இன்னன்ன தண்டனைகள் என வடித்து, விலங்குகள் சார்பாக வாதாட வழக்கறிஞர்களை வளர்த்து, சட்ட மன்றங்களில் வாதாடவைத்து, சேதாரம் பொறுத்து செய்கூலி தண்டனைகள் வழங்கலாம். Only N