முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாபெல் கோபுர உச்சியில்... - At the top of the Tower of Babel...


130 கோடி முகமுடையாள் 
...
செப்புமொழி பதினெட்டுடையாள்
...

ஆனாலும் ஏன் புரிதலின்றி இருக்கிறோம்?

ஏன் சிந்தனை ஒன்றுடையாளாக முடியவில்லை?

ஏன் நம்மிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக்கொண்டே போகிறது (தூரம் சுருங்கிக்கொண்டே போனாலும்)?

இளவரசன் சித்தார்த்தனுக்கு பேச்சு வரவில்லை என்பதே ஊரெங்கும் பேச்சாக இருந்ததாம். அரசனும் அரசியும் மிக கவலையோடு பல முயற்சிகளை செய்து பார்த்தும் பயனில்லையாம். இயல்பாக தன்னைச்சுற்றி நடப்பது அனைத்தும் சித்தார்த்தனுக்கு புரிந்தாலும் பேச்சின்றி வளர்ந்தானாம்.

'இளவரசை பேச வைப்பவருக்கு அவர் கேட்டதெல்லாம் தருவேன்' என அரசன் முரசறிவிக்க சொல்ல, நாடெங்குமிருந்து மருத்துவர்களும், மந்திரவாதிகளும் அரண்மனை நோக்கி படையெடுத்து, முயன்றும் முடியவில்லையாம்.

கவலையை சற்றே குறைக்க எண்ணிய அரசன், கானக வேட்டை நிகழ்வுக்காக இளவரசை அழைத்துச்சென்றானாம்.

அங்கும் மௌனமாகவே இளவரசன் சுற்றிவரவும் கவலை தாளாது காட்டுமரமொன்றின் நிழலில் அரச பரிவாரங்கள் ஒதுங்கி ஓய்வெடுத்தனவாம். 

அடுத்த நாள் அதிகாலையில் ஏதோ சத்தம் கேட்டு அனைவருக்கும் முன்னர் எழுந்த சித்தார்த்தன் சத்தம் வந்த திசை தேடி நடந்தானாம்.

ஒரு அடர்மரக்கிளையில் பறவைக்கூடொன்றில் தாய்ப்பறவை கொண்டுவந்த உணவை உண்ண போட்டி போட்டு குஞ்சுகள் சத்தமிடுவதைக்கண்டதும் சித்தார்த்தன் மனம் பதைத்ததாம். ஏனெனில். மரத்தடியில் ஒரு புதரில் வேடன் ஒருவன் வில்லில் நாணேந்தி இலக்கு தேடுவதும் அவன் கண்ணில் பட்டதாம்.

பறவையின் குரல் காட்டிய திசையில் வேடன் அம்பு எய்ய, தாய்ப்பறவை அடிபட்டு குருதி சிந்தி விழ, குஞ்சுகள் ஓலமிட, பெருங்குரலெடுத்து அழுதவண்ணம் சித்தார்த்தன் ஓடிச்சென்று தாய்ப்பறவயை மடியில் இட்டு புலம்பினானாம், 'பேசாமலேயே இருந்திருக்கலாமே... பேசாமலேயே இருந்திருக்கலாமே' என.

வேடன் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து அரசனைத்தேடி ஓடினானாம், 'அரசே, அரசே, வாழ்க உன் புகழ்! இளவரசை நான் பேசவைத்துவிட்டேன், நான் பேசவைத்துவிட்டேன்!'.

அரசனுக்கு நம்பிக்கையில்லையாம். ஆனால். வேடன் உண்மை சொல்வதாகவே தோன்றியதாம்.

"இளவரசனுக்கு பேச்சு வந்தது உண்மையானால், இங்கு எம் அனைவர் முன்னும் பேச வை. நீ கேட்பதை தருகிறேன்!' என்றானாம்.

பெருமரத்தடியில் சபை கூடியதாம்.

வேடன் சித்தார்த்தனிடம், 'இளவரசே, அந்த மரத்தடியில் என்ன நிகழ்ந்தது என தயைகூர்ந்து சொல்லுங்கள்' என பணிவாய் கேட்டானாம்.

சோகம் ததும்ப சித்தார்த்தன் மௌனமாய் அமர்ந்திருந்தானாம்.

சில மணி நேரம் வேடன் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் சித்தார்த்தன் மௌனமாகவே அமர்ந்திருக்க, பொறுமை இழந்து சினந்த அரசன் கட்டளையிட்டானாம், 'யாரங்கே? இந்த வேடன் இப்படி பலர்முன் பொய்யுரைத்து என் இளவலை அவமானப்படுத்தி விட்டானே! இவனை இப்போதே இங்கேயே சிரச்சேதம் செய்யுங்கள்!'

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு புலம்பிய வேடனை காவலர்கள் தரதரவென இழுத்துச்செல்ல, இவனது மரணபய ஓலம் இளவரசன் மனதைத்துளைக்க, மெல்ல தனது இருக்கையிலிருந்து இறங்கிய சித்தார்த்தன் அந்த வேடனிடம் சென்று கனிவாய், கருணை தோய்ந்த கண்களோடு சொன்னானாம், 'பேசாமலேயே இருந்திருக்கலாமே...:.

எல்லோரும் பேசாமலே இருந்திருந்தால் உலகம் மேன்மையாக இருந்திருக்குமோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்