முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளுவனின் சீற்றம், மூலனின் ஏமாற்றம்...


சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் யானைகளும், புலிகளும், சிங்கங்களும், மான்களும் க்வாரண்டைன் செய்யப்பட்டுள்ளன.

பி.பி நோயினால் பாதிக்கப்பட்ட ஆயிரம் பூனைகள் கூடுவாஞ்சேரியில் திடீர் மரணம்.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்ட முதலைகள் சென்னை முதலைப்பண்ணையில் உயிருக்குப்போராடிக்கொண்டிருக்கின்றன.

ஏங்க இது மாதிரி செய்திகள் ஒன்று கூட வர்றதில்ல?

மிருகங்கள அடிச்சி விழ வைக்க, மாமிசத்த கிழிச்சி சாப்பிட, வேற விலங்குகள் / பறவைகள்கிட்டேர்ந்து தன்ன காப்பாத்திக்க கூரிய நகங்களோ, முள்ளுள்ள வாலோ, மரம் ஏறித்தொங்க வாலோ அல்லது நிறம் மாறும் தன்மையோ எதுவுமே இல்லாத ஏங்க இந்த மனுசப்படைப்பு?

விலங்கு பறவை பூச்சிக்கெல்லாம் மேல சொன்ன ஆற்றலை எல்லாம் படைச்ச கடவுளுங்க, இதெல்லாம் யோசிக்கத்தானே நமக்கு சிந்திக்கிற தன்மையை தந்திருக்காங்க?

நாம வரம்பு இல்லாத, தேவையில்லாத சிந்தனைகள், கண்டுபிடிப்புகள்னு எங்கயோ போயி, அடிபட்டு இடிபட்டு மருந்து மாத்திரைகள் உதவியோட உசுர வளக்குற நிலைமைக்கு ஆளாயிட்டோமே.

ஊனை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனேன்னு சொன்ன திருமூலரே இன்னைக்கு இருந்தா மூல வியாதியால, முடக்குவாதத்தால முடங்கியிருப்பார்...

கண்டதைத்தின்றால் குண்டனாவாய்ங்கிறது பழமொழி. 

கண்டதைத்தின்றால் நோயாளியாவாய்ங்கிறது அதுக்கும் முந்தின முதுமொழி.

பால்: பொருட்பால்
அதிகாரம்/Chapter: மருந்து / Medicine
குறள் 942:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

விளக்கம் வேணுமா என்ன?

வள்ளுவம் வகுத்த உணவு முறையிலிருந்து வெகுதூரம் விலகிப்போய் கொஞ்சம் கொஞ்சமாய் நஞ்சு தின்னத்தொடங்கி, இன்று நம் உடலோடு ஒட்டி உரவாடும் அனைத்துப்பொருட்களும் நஞ்சாகிப்போனாலும் (காலை பற்பசை முதல் இரவு கொசுவிரட்டி வரை) விடாது தின்போம் என விரட்டிப்பிடித்து கப்பலிலும் விமானத்திலும் தொலைதேச உணவுப்பழக்கங்களை இறக்குமதி செய்து கொழுப்பேறிப்போய், 'கொரானாவாவது குரானாவாவது? நம்மள எல்லாம் தொடமுடியாதப்பேய்!' என நகைத்து 'அனைத்தையும்' தின்று அன்பின்றி உறங்கும் நம்மைக்கண்டு வள்ளுவன் சினம் கொள்வது நியாயம்தானே!

நம்மிடம் சிக்கி உடல்படும்பாட்டை கண்ட வள்ளுனுக்கே மிகுசீற்றமென்றால், உடலுள்ளே உயிர்ப்புடனிருக்கும் சீவனைப்போற்றிய மூலனின் நிலை?

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்" என்ற திருமூலனுக்கு தெரியுமா நம் சீவனுள்ளே சிக்கிய சிவம் படும்பாட்டை?!

(Image maybe under copyright by respective unknown creator)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்