முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சாமீ என் வூட்டக்காணோம் சாமீ!

அண்மையில் கோவாவில் ஒரு கிராமத்தில் பசு மாடுகளை புலி அடித்துக்கொன்று தின்றதாக கொதித்தெழுந்த ஊர் மக்கள் ஊருக்கு அருகில் உள்ள ஒரு விலங்குகள் காப்பகத்தில்(!) மூன்று குட்டிகளுடன் அடைபட்டிருந்த ஒரு புலிக்கும் குட்டிகளுக்கும் சேர்த்து விஷ உணவு தந்து அனுப்பி விட்டார்கள்.

இது தொடர்பாக ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் நேற்று சட்டசபையில் ஆணித்தரமான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்; 'மனிதர்கள் பசுக்களை வதைத்து தின்றால் தண்டனை தருகிறோம். அதுபோல புலிகளையும் தண்டிக்கவேண்டுமல்லவா?'

1. ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து வலம்வரும் புலி மனுஷனைக்கடிக்கும்போது "கண்டதும் சுட உத்தரவு" என்பது மாறிப்போய், 'ஆட்டைக்கடித்தால் சுடு, மாட்டைக்கடித்தால் சுடு' என அரசாணை பிறப்பிக்கலாம்.

2. விலங்கு உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பரித்தால் அடக்கலாம், நசுக்கலாம் அல்லது போனால் போகிறதென்று Animals Penal Code வரையறுத்து, இன்னன்ன குற்றங்களுக்கு இன்னன்ன தண்டனைகள் என வடித்து, விலங்குகள் சார்பாக வாதாட வழக்கறிஞர்களை வளர்த்து, சட்ட மன்றங்களில் வாதாடவைத்து, சேதாரம் பொறுத்து செய்கூலி தண்டனைகள் வழங்கலாம். Only Non Bailable Offence என முடிவு செய்யலாம். Bailஇல் விட்டால் சேதாரம் தொடரும்.

2. இப்படி வன்முறை செய்யும் விலங்குகளுக்கு காப்பகம் எதற்கு என அவற்றை காப்பகங்களில் இருந்து விரட்டிவிடலாம்.

3. விரட்டப்பட்ட விலங்குகள் தஞ்சமடைய காடுகளை தேடினால் 'டேக் டைவர்ஷன்' போர்டு காட்டி காட்டி நம் எதிரி நாடுகளுக்கு அனுப்பிவிடலாம்.

4. அல்லது காடுகளை விரிவாக்கி பாதுகாத்து,விலங்குகளை காப்பகங்களை விட்டு நீக்கி இழுத்து மூடி, அவற்றை காடுகளில் அவற்றின் இயல்பிலேயே அவற்றிற்கான உணவுகளை மனிதர்கள் வேட்டையாடாதவண்ணம் காத்து,  விட்டுவிடலாம்.

5. அல்லது காப்பகங்களின் எல்லைகளை ஓட்டைகள் இன்றி அடைத்து "உள்ளே உள்ள விலங்குகளை வெளியே உள்ள மனிதர்களிடமிருந்து" காப்பாற்றலாம்.

நம் நாட்டின் இறையாண்மையை இந்த ஐந்தில் எதை நம் நாடு செய்யப்போகிறது என்பதே வடிவமைக்கப்போகிறது!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...