உலகத்தை படைத்தது இறை என்று ஒரு பக்கம், இயற்கையென்று ஒரு பக்கம் - இன்றுவரை தொடரும் இந்த விவாதத்திற்கு விரைவில் விடை கிடைக்கலாம். அந்த விடை நமக்கு அவசியமற்றுப்போகலாம். கடவுள் படைத்த சொர்க்க தோட்டத்தில் ஒரு ஆப்பிள் மரப்பழத்தை இறை கட்டளையை மீறி உண்ட ஒரு மனிதன் சாபத்தால் / பாபத்தால் மண்ணில் விழுந்தானாம். விழுந்தவன் எழுந்து... வாழத்தொடங்கினானாம். தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் தன் விருப்பத்திற்கு மாற்றியமைக்கும் வல்லமையை அந்த ஆப்பிள் அவனுக்கு தந்திருந்ததாய் அவன் நம்பினானாம். அந்த வல்லமை கொண்டு நதிகளின் போக்கை, காற்றின் போக்கை, கடலின் நீட்சியை, மலையின் மாட்சியை தன் விருப்பம் போல மாற்றி அமைக்கத்தொடங்கினானாம். இந்த தியரியை ஒத்துக்கொள்ளாத மனிதன் ஒருவன் 'மாற்றுவதை நிறுத்தி' தன்னை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும் என வாழ்வின் தொடக்கம் பற்றி இயற்கையிடம் பாடம் படித்தானாம். 'எந்த உயிரினம் இயற்கையோடு, இயற்கை மாற்றங்களோடு இயைந்து வாழ்கிறதோ அதற்கு மட்டுமே தொடர்ந்து வாழ, சந்ததி பெருக்க இயற்கை அனுமதி தரும்' என்பதாக அப்பாடம் இருந்ததாம். இவ்வாறாக இருவரும் தம் உலகை
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!