உலகத்தை படைத்தது இறை என்று ஒரு பக்கம், இயற்கையென்று ஒரு பக்கம் - இன்றுவரை தொடரும் இந்த விவாதத்திற்கு விரைவில் விடை கிடைக்கலாம். அந்த விடை நமக்கு அவசியமற்றுப்போகலாம்.
கடவுள் படைத்த சொர்க்க தோட்டத்தில் ஒரு ஆப்பிள் மரப்பழத்தை இறை கட்டளையை மீறி உண்ட ஒரு மனிதன் சாபத்தால் / பாபத்தால் மண்ணில் விழுந்தானாம்.
விழுந்தவன் எழுந்து... வாழத்தொடங்கினானாம்.
தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் தன் விருப்பத்திற்கு மாற்றியமைக்கும் வல்லமையை அந்த ஆப்பிள் அவனுக்கு தந்திருந்ததாய் அவன் நம்பினானாம். அந்த வல்லமை கொண்டு நதிகளின் போக்கை, காற்றின் போக்கை, கடலின் நீட்சியை, மலையின் மாட்சியை தன் விருப்பம் போல மாற்றி அமைக்கத்தொடங்கினானாம்.
தன்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் தன் விருப்பத்திற்கு மாற்றியமைக்கும் வல்லமையை அந்த ஆப்பிள் அவனுக்கு தந்திருந்ததாய் அவன் நம்பினானாம். அந்த வல்லமை கொண்டு நதிகளின் போக்கை, காற்றின் போக்கை, கடலின் நீட்சியை, மலையின் மாட்சியை தன் விருப்பம் போல மாற்றி அமைக்கத்தொடங்கினானாம்.
இந்த தியரியை ஒத்துக்கொள்ளாத மனிதன் ஒருவன் 'மாற்றுவதை நிறுத்தி' தன்னை சுற்றி நடப்பவற்றை கவனித்தாலே போதும் என வாழ்வின் தொடக்கம் பற்றி இயற்கையிடம் பாடம் படித்தானாம். 'எந்த உயிரினம் இயற்கையோடு, இயற்கை மாற்றங்களோடு இயைந்து வாழ்கிறதோ அதற்கு மட்டுமே தொடர்ந்து வாழ, சந்ததி பெருக்க இயற்கை அனுமதி தரும்' என்பதாக அப்பாடம் இருந்ததாம்.
இவ்வாறாக இருவரும் தம் உலகைப்படைக்க முற்பட்டு பெரும் முன்னேற்றங்கள், பின்னடைவுகள் எல்லாம் தாண்டி ஏதோ ஒரு நிலப்பரப்பில் 'பேராசைப்பெருவணிகம்' என்ற இன்னொரு, அதி ஆற்றல் மிக்க ஆப்பிள் மரத்தின் நிழலில் சந்தித்து அதன் பழத்தை பகிர்ந்து ருசித்தனராம்.
ருசியில் மயங்கி, விவாதங்களை மூட்டை கட்டி வைத்து, இப்பழத்தை உலகம் முழுதும் பரப்பும் முயற்சியை தொடங்கி, பெரு வெற்றியும் பெற்றனராம்.
உலகெங்கும் வெற்றி கொண்ட பின்னர் அவர்கள் கவனம் சொர்க்கத்தோட்டத்து ஆப்பிள் மரங்களின்மீது திரும்பியதாம்.
அவர்கள் சொர்க்கத்தோட்ட மக்களை அழைத்து, 'உங்கள் மரங்கள் பழம் தர நெடுங்காலம் பிடித்தன. ஆனாலும் பழங்களை உண்டவர்கள் வாழ்வில் வெற்றிபெற்று எங்கள் நிலையை அடையவில்லையே. தவறு இந்த மரங்களில்தான். அடியோடு வெட்டி வீழ்த்துங்கள். நாங்கள் வேறு ஆப்பிள் மரக்கன்றுகள் தருகிறோம். விரைவில் காய்ப்பவை, ஏராளமாய்...
பறிப்பதும் சுலபம். உலகம் முழுதும் இதன் சந்தை. மாறுங்கள், மாற்றுங்கள், அதி விரைவில் உங்கள் வாழ்வை இவை மேன்மையாக்கும்' என்றனராம்.
இந்த ஆண்டு காஷ்மீர சொர்க்கத்தோட்டத்தில் உள்ளூர் மரங்கள், பல்லாண்டாய் இயற்கையோடு ஒத்திசைந்தவை, பெருவிசை எந்திரங்களால் ஒன்று விடாமல் வேர் அறுக்கப்பட்டு, ராயல் காலா, ராயல் டெலிஷியஸ், க்ரான்னி ஸ்மித் போன்ற இறக்குமதி செய்யப்பட்ட, காஷ்மீர இயற்கைக்கு பழகாத, மரக்கன்றுகளுக்கு தம் வாழ்விடத்தை விட்டுச்சென்றுவிட்டனவாம்.
இந்த இடம் போதாதென நெல் வயல்களும் எரிக்கப்பட்டு அவற்றின் சாம்பலை உண்டு குள்ள வகை ராயல்கள் மற்றும் க்ரான்னிகள்
வேகமாக வளர்கின்றனவாம்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் இப்போது இந்த புதிய மரக்கன்றுகளைச்சுற்றி நிலவும் மயான அமைதி, இயற்கைக்கு மட்டுமே புரியக்கூடியதாம்...
கருத்துகள்
கருத்துரையிடுக