முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏகாந்தம்

மலை முகடு தாண்டி தீற்றலாய் வானம். நீலம். காலடி நடந்த தடமெங்கும் சூழும் மரங்களின் பச்சை. தொடுவானில் தொலையப்போகும் சூரியப்பந்தின் அந்தி வெளிச்சம் சிவப்பு. செங்குழம்பு தீயாகி  சுற்றியுள்ள பச்சையெல்லாம்  நீலமெல்லாம்  சிவப்பின் சாயல். சிவப்பை மெள்ள விழுங்கும் நீலம். நீலத்தை கவ்வும் இருள். இருளில் ஒளி உமிழும் ஆயிரமாயிரம் கண்கள், சுடராடும் கண்கள். குளிர் காற்று போர்வையாய் தழுவ, தாலாட்டும் சில்வண்டின் ஓங்காரம். ஏகாந்தம். ஏகத்தின் அந்தம். நாளை மற்றொரு நாளே, இன்றைய இரவு அப்படியல்ல!

2018ன் மிகச்சிறந்த Mainstream கவிதை!

இவரை ரசிக்கப்போனேன்... பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா கரை வந்த பிறகே பிடிக்குது கடலை நரை வந்த பிறகே புரியுது உலகை நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே நாளை ஓர் அர்த்தம் காட்டுமே வாழா என் வாழ்வை வாழவே தாழாமல் மேலே போகிறேன் தீரா உள் ஊற்றை தீண்டவே இன்றே இங்கே மீள்கிறேன் இங்கே இன்றே ஆழ்கிறேன் ஹே.. யாரோபோல் நான் என்னைப் பார்க்கிறேன் ஏதும் இல்லாமலே இயல்பாய் சுடர் போல் தெளிவாய் நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன் கண்ணாடியாய் பிறந்தே காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன் இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா.. நானே நானாய் இருப்பேன் நாளில் பூராய் வசிப்பேன் போலே வாழ்ந்தே சலிக்கும் வாழ்வை மறுக்கிறேன் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோ…காற்றோடு வல்லூரு தான் போகுதே பாதை இல்லாமலே அழகாய் நிகழே அதுவாய் நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன் திமிலேறி காளை மேல்

கோடை ஷ்பெசல் : பாம்பு டான்சு!

வெயிலோடு_உறவாடி ராமநாதபுரம் - தண்ணியில்லாக்காடு. அரை டவுசர் டீம் சேர்த்து நெசமான கிரிக்கெட் பேட்டு, நெசமான பால் தேத்திட்டு காலைல ஒம்போது மணிக்கு வீடு வீடா ப்ளேயர் புடிச்சி, டீம் செட் பண்ணி, அப்பால கண்ணுல படுற மொத எதிரி டீம (ப்ளேயர) உசுப்பேத்தி, 'பத்து மணிக்கு அந்த ஊருணில மேட்ச், மோதிப்பாக்கலாமா?'. அந்த ப்ளேயர் ஒடனே ரோசம் வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில டீம் தேத்தி, அம்ப்பயர், ஸ்கோரர் எல்லாம் ரெடி பண்ணி... அதென்ன மாயமோ தெரில அந்த கத்திரி வெயிலோட பாச்சா எல்லாம் வெளையாடி முடிக்கிற வரைக்கும் நம்மகிட்ட பலிக்காது. பல முறை ஸ்கோரர் கைங்கரியத்தில எதிர் டீம் கெலிக்கிறதெல்லாம் சகஜம். இது மேட்டரே இல்லை. மேட்டரு மாட்ச் முடிஞ்சபின்னதான் தொடங்கும்.  அதுவரை நேர நடந்துகிட்டு இருந்த பசங்களெல்லாம் பாம்பு டான்சு ஆடுற மாதிரி நெளிய ஆரம்பிப்போம். 'டேய், ஒனக்குமாடா?' என நலம் விசாரித்துக்கொண்டே வீடு நோக்கி ஓடுவோம். போகும் வழியில் தெரு கோவில் அருகில் கடை வைத்திருப்பவர் எங்களை கண்டதும் குஷியாகி விடுவார், 'இன்னைக்கு வியாபாரம் ஜோரு' என. தலைக்கு இரண்டு எலுமிச

குப்பையிலே ஒரு விதை

They add beauty to even a waste bin! குப்பைக்கூடைக்கும் அழகு சேர்ப்பவை இயற்கையில் விளைந்தவை. What about us who are rapidly coverting Giving Earth into a Giant Waste Bin?! இந்த உலகை பெரிய குப்பைத்தொட்டியாக்கிக்கொண்டிருக்கும் நாமும் இயற்கையில் விளைந்ததுதானே. நாம் மட்டும் ஏன் இப்படி? Planting is the only way Up, from the pile of trash we heap on ourselves, to our salvation... விதையொன்று ஊன்றி, அது செடியாய், கொடியாய், மரமாய் வளர வளர அதை இறுகப்பற்றிக்கொண்டால் மட்டுமே தப்பிக்க இயலும்... அவை நாம் சொர்க்கம் செல்லும் பாலமாகவும் அமையும்!

எச்சம்

எச்சம் - என்ன ஒரு தமிழ் சொல்! உண்டது போக மீவது மிச்சம் என்றால், உண்டது செரித்தது போக வெளித்தள்ளுவது எச்சம். நம் உடல், தேவையில்லை என வெளித்தள்ளும் எச்சமும் உணவே, வேறு யாருக்கோ, பூமியில். பறவையின் எச்சம் கானகமாக விரியும். கானக எச்சம் பூவாய், காயாய், கனியாய் நமை வந்தடைய அவற்றை உண்டு நம் உடல் வெளித்தள்ளுவதும் எச்சமே. மனிதனும் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் அவனது எச்சமும் கானகமானது பழங்கதை. இலக்கணத்தில் எச்சம் என்பது முற்றுப்பெறாத சொல்லை குறிக்கிறது. ஒன்பது வாசலிட்டு என்புதோல் போர்த்த உடம்பும் ஒரு உயிரெச்சமும் மெய்யெச்சமும் சேர்ந்து செய்த உயிர் மெய் எச்சம்தானே! தமிழ்க்கடலின் சுவையென்னவோ திகட்டாத இனிப்பு மட்டுமே!

இந்த டீலக்ஸ் சூப்பரு!

பல வருடங்களுக்கு முன்னர் ஒரு படம் மட்டுமே தந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது பட டைட்டில் கார்டில் தியாகராஜன் குமாரராஜா பெயர்  போடும்போது தியேட்டர் அதிர உற்சாக குரல் எழுப்பிய இளையவர்கள், பட நாயகர்கள் அனைவருக்கும் அதே மரியாதை தந்து, 'தப்பான கூட்டத்தில படம் பாக்க மாட்டிகிட்டமோ, இந்த ரேஞ்சில கத்தினா ஒன்னுமே புரியாதே...' என்று பயமுறுத்தியவர்கள், அடுத்த சில நிமிடங்களில் கப் சிப்! அப்படி என்னதான் நடந்தது? கண் முன்னே விரியும் கதைகளும், காட்சிகளும் செய்த வித்தை அது! 'என்னடா நடக்குது இங்கே?! என வியப்போடு நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள், இடைவேளை வரை வெவ்வேறு விதமான உணர்வுகளை வெளிப்படுத்திக்கொண்டு படத்தில் மூழ்கியாச்சி! நடைமுறை வாழ்வின் அபத்தங்களை, போலித்தனங்களை, வக்கிரங்களை, நம்பிக்கைகளை, பிம்பங்களை... உடைத்து எறிந்து, அதனுடனே நமது மனக்கட்டமைப்புகளையும் வெடி வைத்து தகர்த்திருக்கிறார். தியாக குமார ராஜா. அவரது பலம், அவற்றை உணர்ந்த நாமும் குதூகலமாய் அந்த உடைப்புக்களை ஏற்றுக்கொண்டு சிரித்தபடியே வெளிவருவதுதான்! A certificate முற்றிலுமாய் பொருந்தக்கூடிய ஒரே இந்திய சி

ஈதல் இகழ்பட வாழ்தல்...

கொளுத்தும் வெயில். சிவப்பு சிக்னல் மாறக்காத்திருக்கும் நேரம். காரின் கண்ணாடிக்கதவைத்தட்டி தட்டி கை கூப்பி காசு கேட்கும் நடு வயது கடந்த பசித்த மனிதர்... என் ஆடை பைகள் எதிலும் பொடிச்சில்லறை இல்லை என்று உள்மனம் செய்தி வாசிக்க, 'பர்சுல பத்து ரூபா இருக்கலாம்' என புத்தி இன்டிகேட் செய்து, உடனே குழப்பியது 'நம்ம மெனக்கெட்டு பர்ச பாக்கெட்லேந்து உருவி தேடி, பத்து ரூபா நோட்டு இல்லன்னா என்ன பண்றது? எதிர்பார்க்கு அதிகமாகி பின்ன அவரு மனசு நோவுமே...' என் இக்கட்டை மனைவியிடம் சொல்ல, 'என் பர்சுல இருக்கு. எடுத்துத்தரேன்' என அவர் அவசரமாய் முயன்று எடுக்க, சிக்னல் பச்சை காட்ட, பின்னால் கார்கள் ஆரன் நிறுத்தாமல் அடிக்க, நான் அவசரமாய் கண்ணாடியை இறக்கி அவர் கரங்களில் பத்து ரூபாயை திணிக்க... கேட்டாரே ஒரு கேள்வி! 'எய்யா, பசியோட கும்பிட்டு நிக்குற ஆளுக்கு பசி நீக்க ஏதாச்சும் குடுக்க ஒனக்கு தோணல. எங்கம்மா மகமாயி எடுத்துக்குடுத்தா பாத்தியா யோசிக்காம பத்து ரூபாய. அவ நல்லா இருப்பாய்யா!'.... ஒரு நிமிடம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 'நடு ரோடில சிக்னல்ல வ