முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோடை ஷ்பெசல் : பாம்பு டான்சு!


வெயிலோடு_உறவாடி

ராமநாதபுரம் - தண்ணியில்லாக்காடு.

அரை டவுசர் டீம் சேர்த்து நெசமான கிரிக்கெட் பேட்டு, நெசமான பால் தேத்திட்டு காலைல ஒம்போது மணிக்கு வீடு வீடா ப்ளேயர் புடிச்சி, டீம் செட் பண்ணி, அப்பால கண்ணுல படுற மொத எதிரி டீம (ப்ளேயர) உசுப்பேத்தி, 'பத்து மணிக்கு அந்த ஊருணில மேட்ச், மோதிப்பாக்கலாமா?'.

அந்த ப்ளேயர் ஒடனே ரோசம் வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில டீம் தேத்தி, அம்ப்பயர், ஸ்கோரர் எல்லாம் ரெடி பண்ணி...

அதென்ன மாயமோ தெரில அந்த கத்திரி வெயிலோட பாச்சா எல்லாம் வெளையாடி முடிக்கிற வரைக்கும் நம்மகிட்ட பலிக்காது.
பல முறை ஸ்கோரர் கைங்கரியத்தில எதிர் டீம் கெலிக்கிறதெல்லாம் சகஜம்.

இது மேட்டரே இல்லை.

மேட்டரு மாட்ச் முடிஞ்சபின்னதான் தொடங்கும். 

அதுவரை நேர நடந்துகிட்டு இருந்த பசங்களெல்லாம் பாம்பு டான்சு ஆடுற மாதிரி நெளிய ஆரம்பிப்போம். 'டேய், ஒனக்குமாடா?' என நலம் விசாரித்துக்கொண்டே வீடு நோக்கி ஓடுவோம். போகும் வழியில் தெரு கோவில் அருகில் கடை வைத்திருப்பவர் எங்களை கண்டதும் குஷியாகி விடுவார், 'இன்னைக்கு வியாபாரம் ஜோரு' என. தலைக்கு இரண்டு எலுமிச்சம்பழம் வாங்கிக்கொண்டு நெளிந்தவண்ணம் வீடு நோக்கி ஓடுவோம்.

எங்கள் வீட்டில் அம்மா அல்லது அக்கா, எங்களை கண்டதுமே எரிச்சலாகி, 'தொடப்பத்தாலயே ரெண்டு போடனும். நாளப்பாத்தாப்புல இதே ரோதன. எத்தன வாட்டி சொன்னாலும் கேக்க மாட்றானுங்களே!' என தலையில் அடித்துக்கொண்டு எங்களிடம் இருந்து எலுமிச்சையை பிடுங்கிக்கொண்டு அடுக்களைக்குள் மறைந்ததும், கிணற்றில் மளமளன்னு தண்ணிய எறைச்சி தொட்டிய ரொப்பி, உள்ள டைவ் அடிச்சி பதுங்கிடுவோம்.

அடுப்படிலேந்து சோடா உப்பு போட்ட எலுமிச்சை சாறு நீரை தேவதைபோல் ஏந்தி வரும் அக்கா, 'கருமம் புடிச்சவனுங்களே! எப்படிடா அதிலயே போறீங்க?!' என தலையில் அடித்துக்கொண்டே தந்து மறைந்ததும் அவசர அவசரமா குடிச்சிட்டு அதோட எஃபக்ட் தெரியறவரைக்கும் தண்ணிக்குள்ளயே குந்திகினு...

பாஸ், நீர்க்கடுப்போட கொடும உணர்ந்தவங்கதான் அது ரிலீவ் ஆகும்போது ஏற்படுகிற கடவுள் அனுபவத்த உணரமுடியும்!

சோடா உப்பு எலுமிச்ச சூசு அத சரி பண்ணுற வரையில தொட்டிக்குள்ள கடுமையான எரிச்சலோட சொட்டு சொட்டா... நீர்க்கடுப்பு ஒண்ணுக்கில ஒன்னுது என்ன என்னுது என்னன்னு... வெயில் எங்களோட விளையாடியது அந்தக்காலம்!

(நாங்கள் தாவிக்குதித்து வெளியேறியபின் அம்மாவும் அக்காவும் அரைநாள் அந்த தொட்டியை கழுவுவார்கள். அடுத்த நாள் மதியம் மீண்டும் எலுமிச்சம்பழத்துடன் எங்களை காண்கையில் அவர்களுக்கு வரும் கோபத்தின்முன் கண்ணகி எம்மாத்திரம்! :-)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...