சுரேஷும் நானும் பக்கத்து பக்கத்து லைன் வீடு. பதின்பருவம். ஒரே வயது, வெவ்வேறு பள்ளிகள். கோலிக்குண்டு எங்களை நட்பாக்கியது, முட்டிக்கொள்ள வைத்தது, நட்பாக்கியது. வீட்டுக்கு வெளியே மண் தரை. மழை விழுந்து இறுகி மேலே மணல் படிந்து என கோலி குண்டு விளையாட சரியான பதத்தில். பள்ளி முடிந்த நேரங்களில், விடுமுறை தினங்களில் கால் டவுசர் பைகளில் கோலிக்குண்டுகள் சிணுங்க சிணுங்க விளையாடுவோம். பதினைந்தடி தூரத்தில் இடமிருந்து வலமாக ஒரு கோடு கிழிப்போம். கோட்டிலிருந்து இரண்டு அடிகள் மேலே தள்ளி ஒரு சிறு குழி எடுப்போம், சில கோலிகள் மட்டும் சிக்கும் அளவில். கோலி வீரர்கள் வரிசையாய் அணிவகுத்து ஆளுக்கு இத்தனை கோலி (ஒன்றிலிருந்து கைகொள்ளும்வரையிலான அளவில் பந்தயம் கட்டலாம், எல்லா வீரர்களும் ஒரே எண்ணிக்கையில் கட்டவேண்டும் ) என முடிவுசெய்து, சாட் பூட் த்ரீ போட்டு ஓபனிங் அண்ட் ப்ளேயிங் ஆர்டரை முடிவு செய்வோம். அந்த வீரரும் குறிப்பிட்ட இடத்திலிருந்து கோடு தாண்டி கோலிகளை வீசுவார். குழியில் விழுந்த கோலிகள் அவருக்கே சொந்தம். எஞ்சிய கோலிகளில் எதை அடிக்கவேண்டும் என வரிசையில் அடுத்து உள்ள
நம்மைச்சுற்றி நடப்பவை அனைத்திலும் நாம் இருக்கிறோம், செயலாகவோ செயலற்றோ. மாற்றம்... நாமே!