முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த மழை...நிற்காது!

பார்வையற்ற இசைக்கலைஞன், இளைஞன்.

பகல் இரவு பேதமின்றி அளந்து நடந்து, வாழ்ந்து, வயலின் இசைப்பவன்.

அவனது ஆப்த நண்பனின் அன்பான கவனிப்பில் குறையற்ற வாழ்வு வாழ்பவன்.

கதை எழுதும் ஆவலில் நாயகி, யுவதி.

மோதலில் தொடங்கி காதலாகி கசிந்துருகி...வீட்டின் எதிர்ப்பை முறியடித்து காதலனை கைப்பிடிக்கிறாளா இல்லையா என்பதை, அவளது பாசத்தாத்தனோடு முடிவுசெய்கிறாள்.

கதை அவ்வளவே. 

அதை படமாக்கிய விதம், கவிதை... அற்புதம்.

இசை என்பது அமைதியும்தான் என்பதை 80களிலேயே இளையராஜா அழுத்தமாய் பதிந்த படம். பல காட்சிகளில் நிமிடங்கள் கணக்கில் இயல்பான சூழல் சத்தங்களே இசையாக மாறும் விந்தையை இங்கேயே தொடங்கிவிட்டார்.

அந்தி மழையில் நனைந்துகொண்டே இப்படப்பாடல்களை ரசிப்பது, இன்றும் தொடர்கிறது.

பின்னொரு நாளில் கமல் சொன்னதாய் படித்தது இது: 'படம் ஓடலைங்கிற வருத்தம் இருந்தது. எங்கெங்கே தப்பு பண்ணிருக்கேன்னு நல்லாவே தெரியுது. இன்னுமொருமுறை எடுத்தால் வேற மாதிரி எடுக்கலாம்'.

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை, இல்லவே இல்லை. Raja Paarvai is a certified cult classic!


"நான் என்ன செரைக்கிறதுக்கா இருக்கேன்? ஆமாம், அதுக்கும்தான்!!" என ஆப்த நண்பன் ஒய்.ஜி - தொட்ட உயரம், உயரம்!

பல காட்சிகள் என்றும் மனதை விட்டு அகலாது:

துவக்கத்தில் மௌனப்படமாய் ஓடும் கௌபாய் பஸ் சேஸ், அதே சேஸ்க்கு பிண்ணனி இசை கோர்க்கையில் நம்முள் எழும் உணர்வுகள்...

நாவித வேலை செய்யும் நண்பன், 'இப்ப என்னை எடுத்துக்கயேன், நான் என்ன செரைக்கிறதுக்கா இருக்கேன்?...ஆமாம், அதுக்கும்தான்!' மொமெண்ட்...

அழகோ அழகு தேவதை பாடலின் சூழல், நாயகன் நாயகி கெமிஸ்ட்ரி...

சூரிய ஒளியில் குளித்துக்கொண்டு ஒற்றை வயனில் இசையை கசியவிட்டபடி நாயகன் பால்கனியில் French door பிண்ணனியில் நிற்கும் காட்சி...

அவனது சாலையில் நாயகி, வீடு தேடி வருகையில் ஒளிக்கும் இயல்பான சூழல் ஓசைகள்...

கண்ணற்ற பதினைந்து வயது 'மணமக'ளுக்கும் நாயகனுக்கும் நடக்கும் பரிதாப உரையாடல்...

சித்திக்கு வயலின் இசைத்தே பதில் அளிக்கும் நிகழ்வு...

பார்வையற்ற நாயகி கைத்தடியூன்றி நடக்க, நாயகன் அவளை கைப்பிடித்து வழிகாட்டி அழைத்துச்செல்லும் பூங்கா காட்சி, வண்ணங்கள் வழியும் frames...

நாயகன் நம்முள் கடத்தும் blind innocence...

பார்வை தெரியும் நாயகன் சிறுவயதில் தகப்பனுடன் விளையாடுகையில் தகப்பன் பாதி விளையாட்டில் மாரடைத்து மாள, கயிற்றில் தொங்கியவண்ணம் சிறுவனின் கையறு நிலை கூக்குரல்...

இசை... இசை... இசை...

வைரமுத்துவின் கவிதை மழை...

தன் நறுவனத்தின் முதல் படத்துக்கு பாருண் முக்கர்ஜி என்ற பெங்காலி ஒளிப்பதிவாளரை கமல் எப்படி தேடிப்பிடித்தார் என யாராவது அவரிடம் கேட்பார்களா என ஆவலோடு காத்திருக்கிறேன் :-)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்