முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அஞ்சாம் ஸ்டாப்பு - கும்மோணம் டு ராம்நாட் ரைட் ரைட்

 


லாக்கு விளையாட்டும் ராம்குமாரின் ரெண்டு ரூபாயும்.


வசதியான வீட்டின் பையன் ராம்குமார், லாக்கு விளையாட்டில் என் தோழன். வண்ண வண்ணமான சிகரெட்டு அட்டைகளை சேகரிப்பதில் exchange செய்வதில் என் அரைடவுசர் பார்ட்னர்.


அவன் கையில் திடீரென்று ரெண்டு ரூபாய் நோட்டு. இன்றைய மதிப்பில் சில நூறு.


'அப்பா தந்தாங்கடா!' என்று வெள்ளந்தியாய் என்னிடம் காட்டியபோது எனக்குள் பனாமா அட்டைகளும் வில்ஸ் அட்டைகளும் ஜொலிக்கத்தொடங்கின.


'நேர அடுத்த தெரு முக்கில இருக்கிற பொட்டிக்கடைக்கு போறம், ரெண்டு ரூபாய்க்கு எவ்வ்வ்ளோ high exchange value அட்டைகள் கெடச்சாலும் வாங்குறோம், நம்ம ஏரியாவயே கலக்குறோம்!' என வீறு கொண்டு நடந்தோம் இருவரும்.


'சிகரெட்டு...' என தொடங்கி கையில் பணத்தோடு எதிரில் நிற்கும் ராம்குமாரின் தலை மட்டுமே பொட்டிக்கடை மேசைக்கு மேலே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.


"மொளச்சு ஒரு எல கூட வுடல, அதுக்குள்ள சிகரெட்டா!" என கடைக்குள்ளிருந்து எகிறி வெளியே வந்தவருக்கு எங்களோட டீலிங் ரொம்ப பிடிச்சிப்போச்சி :-)


'அட்டை மட்டும் தாங்க மாமா, உள்ள இருக்குற பொருளெல்லாம் வேணாம்!' என நாங்கள் கோரசாக சொல்ல, மகிழ்வாய் அவசர அவசரமாய் பத்து பன்னிரண்டு பெட்டிகளை அடுக்கிலிருந்து உருவி, உள்ளிருந்த சிகரெட்டுகளை செய்தித்தாள் ஒன்றின் மேல் தனித்தனியாய் கொட்டிக்குவித்து... எங்கள் டவுசர் பைகளில் பச்சை மஞ்சள் சிவப்பு ஊதா வண்ண அட்டைகள் பிதுங்கி வழிய, உலகை வென்ற மகிழ்வோடு எங்கள் ஏரியா திரும்பினோம்.


என்னா வரவேற்பு. என்னா வரவேற்பு என சக டவுசர்களின் வரவேற்பில் கெத்து இன்னும் ஏறிப்போய் மிதந்தோம்.


அன்று மாலை மங்கி இருள் கவியும் நேரம் வரை பளிங்குகள் குலுங்க, விளையாடிக்கொண்டே இருந்தோம்.



அடுத்த நாள் காலையில் கோழி கூவி சூரியனை எழுப்பிவிட்டு அதனால் பாதிக்கப்பட்டு நாங்கள் முற்றத்தில் பல் தேய்த்துக்கொண்டிருக்கையிலே வாசலில் நிழலாட, பார்த்தால் ராம்குமார், கை விரல் அச்சு பதிந்த, சற்றே சிவந்த கன்னங்களோடு!


நான் அட்டைகளை சொருகி வைக்க உதவிய ஓட்டுக்கூரை வசதி அவனுக்கில்லை; அவனது டார்சு வீடு (RCC போட்டு கட்டிய மாடி வீடு மக்களே). எனவே டவுசர் பாக்கெட்டிலேயே வைத்து காலையில் கழட்டிப்போட, டவுசரை துவைக்க எடுத்த அவனது அம்மாவின் கையில் அது சிக்க, அவனை துவைத்துவிட்டார்!


'நேத்து வாங்கின அட்டையெல்லாம் எடுத்துட்டு ஒடனே எங்கூட வா!' என அழுகுரலில் ஆணையிட, அடித்துப்பிடித்து வாய் கொப்பளித்து டவுசர் பைகளை நிரப்பிக்கொண்டு ஓடினேன், ஓடினோம். கூடவே அவனது அப்பாவும் வந்தார்.


கடைக்காரர் நமட்டு சிரிப்புடன் அட்டைகளை வாங்கிக்கொண்டு இரண்டு ரூபாய் தந்தார்.


அதன் பின் ராம்குமார் எங்களோடு லாக்கு விளையாட வருவதே இல்லை...


கிட்டிப்புல், பம்பரம், புளியாங்கொட்டை தெத்துக்கல்லு, ஐஸ் பாய் என ஏனைய விளையாட்டுகளில் கலந்துகொள்வான்தான். ஆனாலும் எங்களிடம் இருந்து விலகியே இருப்பான். எந்த அளவுக்கு என்றால் ஓரு நாள் பம்பர விளையாட்டில் எங்கள் எதிரிகள் கேங்குடன் சேரும் அளவுக்கு!


பயணம் தொடரும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...