முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போகுதே போகுதே, என் பைங்கிளி காரிலே!

 


ராசாத்தீ என்னுசுரு என்னுதில்ல...


ஒரு கார் நிறைய தினுசு தினுசாய் ஆட்களுடன் வந்து இறங்கிய பெண்ணின் பெற்றோர் (ஊர்ல மாட்டிகிட்ட ராம்கியோட கூட்டாளி மேப்பு போட்டு அனுப்பிருக்காப்ல!) வீட்டின் வெளியே நின்றுகொண்டே பஞ்சாயத்து பேசியிருக்கிறார்கள், இரவெல்லாம் கண் விழித்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்து சேர்ந்த களைப்பு + நிகழ்வின் மீதான ஆத்திரம் என கலவையான உணர்வுகளுடன்.


சாம, பேத, தண்டம் என்கிற மூன்று வழிகளில் பேச்சுவார்த்தை:



'அம்மா, எங்களோட வந்திடும்மா. கல்யாண வயசு வந்ததும் நாங்களே கட்டி வைக்கிறோம்...'. என சாம வழியில் தொடங்கி, 'இப்ப மட்டும் அவசரமா கல்யாணம் ஊர்ல அரேஞ்சு பண்ணியிருந்தீங்களே? அப்ப நாங்களே பண்ணீட்டா மட்டும் ஏன் வெயிட் பண்ணனும்' என பெண் எகிறவும் வேறு பல சமாதானங்கள் பேசப்பட்டு பெண்ணின் பிடிவாதத்தை அசைக்க முடியாததால் அடுத்து பேத வழி: 'ஒனக்கு என்ன தகுதி இருக்குன்னு எங்க பொண்ண கட்ன?' என ராம்கியிடம் எகிறி, ராம்கியின் மௌனம் + பெண்ணின் பிடிவாதம் ஆத்திரத்தை அதிகமாக்க, அடுத்த வழி, தண்டம்: பேசிக்கொண்டே சூடான பெண்ணின் சிற்றப்பா பளாரென அவளை அறைந்துஅவளது கைகளைப்பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு காரில் ஏற்றி கதவை அடித்து மூடி... வண்டி கிளம்பியாச்சி. போயே போச்சி.


இதுதான் நடந்தது என ராம்கியின் அம்மா எங்களுக்கு மொபைல் வழியே  Flash Back சொல்லி நிரப்ப, 'இப்ப என்ன செய்யப்போறீங்க?' என்றோம்.


'இவன ஒடனே ஒரு பத்து இருவது நாளைக்கு எங்கணா அனுப்பிடனும் சார். ஏதாவது பண்ணாலும் பண்ணிடுவானுங்க... இவனும் ஏதாவது பண்ணிகிட்டா...' என்றார் அவன் அம்மா.


'அப்போ நீங்க?' என்றோம். 


'நானும் பொண்ணும் இங்கயே இருக்கோம் சார். தோட்டத்த, ஆடுகள, நாய்கள பாத்துக்கணும் சார்' என்றார்.


இல்லம்மா, சரி வராது என்று சொல்லி கிளப்பினால், போக்கிடமில்லாத இவர்கள் என்ன செய்வார்கள்? என்கிற எண்ணம் மேலோங்க, 'சரிம்மா' எனச்சொல்லி பின்பு ராம்கிக்கு எங்களுக்கு தெரிந்த பூமர்த்தனமான அறிவுரைகளை எல்லாம் செல்லி, 'கவலப்படாத. காலம் வரும். நீ ஜெயிப்படா' என்றெல்லாம் தேற்றி, 'தொடர்பிலிரு' என அழுத்தமாக சொல்லி உரையாடலை முடித்தோம்.


(அடுத்த நாள் அவன் கிளம்பி, திருச்சி தாண்டி ஏதோ ஒரு சிற்றூருக்கு சென்று சேர்ந்தவன், அதன் பின்பு 40 நாட்கள் சுத்தமாக தொடர்பிலேயே இல்லாமல் காணாமல் போனான்.)


இரு நாட்கள் சென்றபின் மறுபடி வினு அழைத்திருந்தார்; 'சாரே, ராம்கியுட அம்மேயும் சேச்சியும் நேத்து வீட்ட பூட்டிட்டு போயி சாரே. நிங்கள விளிச்சோ?' என வினவினார்.


எங்களை அவர்கள் விளிச்சி முன்பே பறஞ்ஞிருந்நால் நாங்கள் எந்தானு முழிக்கப்போறோம் ஙே! னு?!


முழித்தோம். பின்னர் திகைத்தோம்; 'ஐயோ! அப்ப ஆடுகளுக்கும் நாய்க்குட்டிகளுக்கும் சாப்பாடு?! பாதுகாப்பு??? எண்டே குருவாயூரப்பா!!!!'




தொடரும். (அடுத்த பகுதியில் நிறைவுறும்).


கருத்துகள்

  1. அட கடவுளே. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாக இருக்கிறது

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...