முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ராம்கி என்ன செய்யப்போகிறான்?

 


(ராம்கியின் கதை மேலும்  தொடர்கிறது).


அடுத்த இரண்டு மாதங்கள் ராம்கி தோட்ட வேலைகளில் மும்முரமாய் இருந்தான். எங்களை சந்திக்கும்போதெல்லாம் நன்றியுணர்வு மின்னும் கண்களுடன் மெல்லிய குரலில் பேசுவான். அவனுக்காக ஆறு ஆடுகளும் வாங்கித்தந்திருந்தோம்.


டி.வி, மொபைல் தவணை கடன்களை அந்த இரு மாதங்களில் பாதி அடைத்துவிட்டான். அவ்வப்போது அருகில் உள்ள பேரூரின் மருத்துவமனையில் அம்மாவுக்கு வேண்டிய மருந்துகள் வாங்கி வருவான்.


ரிஸ்க் எடுத்து இவனை தொடரச்சொன்ன எங்கள் முடிவு சரிதான் என்கிற உணர்வுடன் அவனை 'திறந்த வெளி பல்கலைக்கழகத்தில்' சேர்ந்து படிக்கிறாயா என கேட்டிருந்தோம். சரி என்று சொல்லியிருந்தான்.


தென் மேற்கு பருவமழை பெய்துகொண்டிருந்த இன்னொரு மழை நாள் இரவில் வினு மறுபடி மொபைலில் அழைத்தார்...


'சாரே, ஆயாளு வீட்டில் ஒரு பெண்குட்டி வந்நு!' என்றார்.


அவனது சகோதரியாக இருக்கலாம் என்றோம். "இல்ல சாரே, இது வேற!' என்றார்.


இதென்ன சோதனை என உடனே அவனை மொபைலில் அழைத்தோம். எடுக்கவில்லை. பல முறை முயன்றபின் அவனது அம்மா எடுத்து பேசினார்...


ராம்கி உயிர்க்கொல்லி அருந்திய இரவில் அவசரமாய் ஊரை விட்டு ஓடிப்போன அவனது கூட்டாளி, அடுத்த நாள் காலையில் பூர்வீக கிராமம் சேர்ந்து, அந்த பெண்ணிடம் எப்படியோ தகவலை சேர்த்திருக்கிறான். அதி்ர்ந்துபோன அந்தப்பெண் ஏகமாய் ஆர்ப்பாட்டம் செய்து தனது திருமணத்தை நிறுத்திவிட்டாள். அதன் பிறகு வீட்டாரின் பலமான கண்காணிப்பினால் ராம்கியை தொடர்புகொள்ள முடியாமல் தவித்திருக்கிறாள். பின் ஒரு நாள் உறவுகள் அசந்திருந்த நேரத்தில் வெளியேறி, ராம்கியை மொபைலில் அழைத்திருக்கிறாள்; 'நான் வரேன்டா!'.


அந்த பதினேழு வயது சிறுமி, அவளது கிராமத்திலிருந்து உறவுகளுக்கு தெரியாமல் பஸ் பிடித்து பஸ் மாறி பல மணி நேர பயணத்திற்கு பின் கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் வந்து இறங்க, அவளுக்காக காத்திருந்த ராம்கி, அவளை அழைத்துக்கொண்டு, அந்த இரவில் அருகில் இருந்த ஒரு கோவிலில் தாலிக்கயிறு ஒன்றை கட்டி, எங்கள் தோட்ட வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்!


'எனக்கு என்ன செய்றதுன்னே தெரில சார். ரொம்ப பயமா இருக்கு' என அழுதார் ராம்கியின் அம்மா.


வினு மறுபடி அழைத்து 'சாரே, போலீசு வந்நால் ப்ரச்ன ஆவும்' என்றார்.


நாங்கள் மறுபடியும் அவனை எங்களுக்கு அறிமுகம் செய்துவைத்தவரை அழைத்தோம். அவருக்கு ஏகப்பட்ட சங்கடம். 'நாங்க போய் பாத்துட்டு சொல்றோம் சார்' என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.


மறுநாள் ராம்கி அழைத்தான். 


'சார்...மன்னிச்சக்குங்க சார். கெளம்பி வந்திட்டா. வராதன்னு சொன்னேன், செத்திடுவேன்னா. என்ன பண்றதுன்னு தெரில சார்... அதான்... மன்னிச்சிக்குங்க சார்' என்றான்.


இடையில் ராம்கியின் உறவினர் அவனை சந்தித்து, 'டேய், அவ மைனர்டா! அவங்க வீட்ல போலீஸ் கம்ப்ளெயிண்ட் பண்ணா தூக்கி உள்ள வச்சிருவானுங்க!' என்றெல்லாம் பலவாறு சொல்லிப்பார்த்தார். சிறுசுகள் கேட்பதாய் இல்லை. அவர்களுக்கு மாற்று வழி எதுவும் புலப்படாததால், 'ஆனது ஆகட்டும், பாத்துக்கலாம்' என்கிற அசட்டு தைரியம் +. ரெண்டுங்கெட்டான் வயதின் முதிர்ச்சியில்லாத சிந்தனை...


இரண்டு நாட்கள் தகவலின்றி நகர்ந்தது. மூன்றாம் நாள் வினு அழைத்தார்; 'சாரே, ஆ பெண்குட்டி வீட்டு ஆட்கள் இவிடே வந்நு. பெரிய ப்ரச்ன சாரே!' என்றார்.


தொடரும்.


கருத்துகள்

  1. சரியான வழிகாட்டிகள் வாழ்வில் அமையாமல் போனதால் தானும் இழந்து பிறரையும் கசந்து பின்னர் பிடிப்பின்றி ஜடமாய் ஆன சிலரின் கதை ஞாபகம் வருகிறது 🙏

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...