முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

2025 வந்தாச்சி!

2000 மாவது ஆண்டிலிருந்து 2010 வரை ஐரோப்பிய வாழ்வு, பணியிடம் என உலகை வெல்லும் பேராசையில் ஓடிக்கொண்டிருந்தோம் நானும் மனைவியும், குழந்தைகளுடன்.

2010 இல், தாய்மண் திரும்ப முடிவு செய்து (return for good type of return) எங்களது அலுவலகங்களில் தெரிவித்ததும் அரைமனதாக ஒப்புக்கொண்டு வழியனுப்பும் விதமாக பல வாழ்த்து அட்டைகள் தந்தனர்.

பதினான்கு ஆண்டுகள் கடந்த பின் இந்த டிசம்பர் 31, இன்றைய தினம், பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்யும் பணியில் நாங்கள் இருவரும் reorganize செய்துகொண்டிருக்கையில் தற்செயலாக கண்ணில் பட்ட file ஒன்றில் அந்த வாழ்த்து அட்டைகளை கண்டோம். அவரவர் அலுவலக அட்டைகளை சற்று நேரம் கைகளில் விரித்து பார்த்துக்கொண்டோம்.

'என்ன நினைக்கிற?' என்றார் மனைவி.

'இல்ல...ராப்பகலா ஆர்வமா ஜாலியா வேலை செய்த குழுக்களின் சக பணியாளர்கள், அன்று நல்ல நண்பர்கள், ஒருத்தர் பெயரும் நினைவிலில்லை... இதுவா அந்த பதினெட்டு வருட நினைவுப்பேழைகள்னு வியப்பா இருக்கு' என்றேன்.

அவரது அலுவலக நண்பர்கள் தந்திருந்த வாழ்த்து அட்டைகளை இன்னுமொரு முறை புரட்டிப்பார்த்தார்.

'எனக்கு அப்படில்லாம் மறக்கல, முகங்கள் நினைவில இருக்கு' என்றார். 

பல வருடங்கள் இரண்டே இரண்டு குழுக்களுடன் தொடர்ந்து அவர் பணி செய்ததால் அவரது நினைவுகள் அப்படி. எனது பணியில் பல குழுக்கள், பல அலுவலகங்கள் என்பதால் இருக்குமோ என விவாதித்தோம்.

ஆனால் விவாதமின்றி நாங்கள் ஆமோதித்த ஒன்று என்னவென்றால், the power of these cards to bring back those jolly good years in a jiffy, the kind of happiness that permeated us when we had that reflection...

இடங்கள் போல மனிதர்களும், நாட்களும்கூட ஒரு விதத்தில் நம் மனக்குளங்களில் தத்திச்சென்ற பானைச்சில்லின் அதிர்வுகள்தான். எறிந்தவர் யார் / எது என்பது மறந்துபோனாலும், even கசந்துபோனாலும் நினைவுகூறும்போதெல்லாம் அவை புதிதாய் ஏற்படுத்தும் அதே பழைய ripples and good vibes... kind of a time travel ticket.

அதனால்தானோ என்னவோ இன்று நம்மிடம் முகம் கொடுத்து பேசக்கூட ஆர்வமின்றி பகை பாராட்டும் மனிதர்கள்கூட நம் நினைவுக்குளங்களில் எரித்த கற்களின் வட்ட வட்ட அதிர்வுகள் மட்டும் இனிமையாய், அவர்களையும் இந்த நொடியில் நேசிக்கும் வல்லமையை நமக்கு தருகின்றன (ஆனால் நமது மூளை உடனடியாக அலெர்ட்டாகி, 'ஏய், அவர் அன்னைக்கு அப்படி இருந்தாருதான். ஆனா இப்ப முறுக்கிகிட்டடு திரியிறாரு, ஆமா, அம்புட்டுதான் சொல்வேன்' என நிகழ்காலத்திற்கு வம்பை இழுத்து வரும்).


அவர்களைப்போலவே நாமும் யார் யாரோவுடைய நினைவுகளில் நொடியில் நோன்றி குளத்தின் விளிம்பு நோக்கி விலகும் அதிர்வுகள்தானே.

2024 விடைபெறும் இறுதி நிமிடங்களில் தொடங்கி, 2025 பிறக்கும் முதல் நிமிடங்களில் முடிக்க திட்டமிட்டு எழுதிய இந்தப்பதிவை நீ வாசிக்கும் பொழுதில் யார் யாருடைய நினைவுகளையோ உன் மனதில் அது தெத்துக்கல் உருட்டி விளையாடி மறையலாம். நினைவின் வட்ட வெளி விளிம்புகள் அனைத்தும் ஒன்றோடொன்று இணைந்தால் உண்டாகும் மாபெரும் தொடர் வட்டங்களில் நீயும், நானும், எல்லோரும் இணைந்தே இருப்போம் நட்பே! அது என்றும் இனிப்பாகவே இனிக்கவும், பழைய கசப்புகள் அனைத்தையும் மெல்ல மெல்ல இனிப்பாக மாற்றவும் எல்லாம் வல்ல இயற்கையையும் அதனின்று உண்டான வாழ்வியலையும், அந்த வாழ்வியல் உருவாக்கின கடவுள்களையும் வேண்டுகிறேன்.

புத்தம்புதிய ஆண்டில் என் அன்பு வாழ்த்துகள் உனக்கு என் நட்பே!

சக உயிர்களனைத்தையும் நேசிப்போம், மனிதர்கள் உட்பட :-) 

பேரன்புடன்,

பாபுஜி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...