முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Freeயா வுடு freeயா வுடு மாமே

 


Freeயா வுடு freeயா வுடு மாமே வாழ்க்கைக்கு இல்ல க்யாரண்டீ...


அவர் கல்லூரி பேராசிரியர். மனைவியும் ஏதோ ஒரு அலுவலகத்தில் பணி.

ஐந்து வருடங்களுக்கு முன்பு கோவை சாய்பாபா காலனி எனப்படும் upmarket பகுதியில் ஒரு வெள்ளி இரவு உணவு முடித்து, சாலை ஆரவாரங்கள் சற்றே அடங்கிய நேரத்தில் walking கிளம்புகிறார்கள்.

அந்த பகுதியின் மெயின் ரோட்டில் இரவு ஒன்பது மணிக்கு சாலையோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்த தம்பதி மீது கட்டுப்பாடிழந்த இரு சக்கர வாகனம் மோதி மனைவி சம்பவ இடத்திலேயே பலி என அடுத்த நாளில் அவர்களது வாழ்வு ஊடக செய்தியாக மாறப்போவது அப்போது அவர்களுக்கு தெரியாது.

சென்னையில் சில வருடங்களுக்கு முன்பு என் நணபனின் அப்பா இதே போன்ற ஊரடங்கிய ஒரு இரவில் நடைப்பயிற்சி சென்றவர் அங்கிருந்து நேராக ஐ.சி.யு போய் பின்பு யாரையும் பார்க்காமலே போய்விட்டார். அங்கும் ஒரு இரு சக்கர வாகனத்தில்தான் எமன் வந்தானாம்.

நேற்று இரவு எங்கள் பூர்வீக கிராமத்தில் கோவில் திருவிழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் இனிதே நடத்தி முடித்த களைப்பில் பத்து மணிக்கெல்லாம் ஊர் உறங்கிப்போயாச்சு. அந்த ஊரின் ஒரு மனிதரை தவிர.

திருத்துறைப்பூண்டி, எங்கள் கிராமத்திலிருந்து ஆறு கி.மீ. ஊர்க்காரர் ஒருவர் அங்கு முன்னிரவில் பணி முடித்து கடை ஒன்றில் ஏதோ வாங்கிக்கொண்டு கடையிலிருந்நு வெளியே வந்தவர் மீது இரு சக்கர வாகனத்தில் எமன். 

இன்று ஊரே சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது. ஊரில் உள்ள முக்கியஸ்தர்கள் எல்லோரும் காலையில் போலீஸ் ஸ்டேசனில். மற்ற able bodied எல்லோரும் மருத்துவமனையில்.

இந்த விபத்துக்கள் அத்தனையிலும் இருசக்கர வாகனத்தில் வந்து மோதிச்சென்றவர்கள் யாரென தெரியவில்லை. நேற்றைய நிகழ்வின்போது அப்பகுதியில் இருந்த ஒரு CCTV யில் விபத்து பதிவாகியிருக்கலாம்...

இறந்தவருக்கு ஐம்பது வயது. அவரை நம்பி ஊரில் குடும்பம், பிள்ளளகள், உறவுகள், நண்பர்கள்...


நம் தேசத்தில் இது போன்ற சாலை விபத்துகளில் பலியான மக்கள் எத்தனை பேர் என்கிற புள்ளி விபரம் இருக்கிறதா? யாராவது இதன் அபரிதமான வளர்ச்சியை கவனித்துக்கொண்டிருக்கிறார்களா என தெரியவில்லை.

குடி போதையில் சாலையில் தள்ளாடி நடக்கும், தவழ்ந்து செல்லும், விழுந்து கிடக்கும் மக்களின் உயிரையெல்லாம் கவனமாய் கடவுள் ஒருபுறம் காப்பாற்றிக்கொண்டிருக்க, அவருக்கு report செய்யும் பணியாளரான எமதர்மர் என்னடாவென்றால் நிதானமாக, ஏராளமான கனவுகளுடன் + கவலைகளுடன் நடந்துகொண்டிருக்கும் இன்றைய குடும்பத்தலைவர்களை, தலைவிகளை just like that  தட்டித்தூக்கிச்செல்கிறார் - பைக்குகளில் குடிபோதையில் / வேறு போதையில் நிதானமிழந்து முறுக்கிப்பறக்கும் எதிர்கால இந்திய தலைவர்கள் வழியே.


குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே சட்டப்படி குற்றம். தட்டித்தூக்குவது?

பிடிபட்டால்தானே!


வாகனங்கள் மோதி விலங்குகள் சாலைகளில் மாய்வதை தடுப்பது எப்படி என்பது தெரியாமல் அரசுகள் I.I.T போன்ற கல்வி நிறுவனங்களுடன் கரம் கோர்த்து ஆராய்ச்சிகள் செய்வது ஒரு புறம் நடக்க, "போதை வாகனங்கள்" மோதி மனிதர்கள் சாலைகளில் மாய்வதை தடுப்பது எப்படி என்பது... அரசுகளுக்கு தெரியாதா என்ன?

பெருகிக்கொண்டிருக்கும் மதுபான உற்பத்தி, பெருகிக்கொண்டிருக்கும் போதைப்பொருட்கள் புழக்கம், பெருகிக்கொண்டிருக்கும் சாலை விபத்துக்கள் + spontaneous crimes... இவை மற்றும் இவற்றுக்குள் உள்ள தொடர்புகள் ஏனோ இன்னும் பொது வெளியில் பேசுபொருளாக மாறவில்லை... 

Maybe because all of us are drugged with social media anyway :-( 

Still, there is a solution: What about signboards every 100 meters in every damn road that is motorable, that says "Caution! Accident Zone!! Sober people walk here" ?!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்