முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கூழாங்கல் மனிதர்கள்

கூழாங்கற்கள் பார்த்திருக்கிறீர்களா?

உருண்டையாய. அல்லது நீளுருண்டையாய், வழவழப்பாய் அல்லது சற்றே சொரசொரப்பாய், பலப்பல வண்ணங்களில்.

கூழாங்கற்களை பிடிக்காத மனிதர்கள் யாரும் இருக்கமுடியுமா என்ன?!

இந்தக்கற்களின் மீது நடப்பதும், இவற்றை உள்ளங்கைகளில் பொதித்து வைப்பதும் நம்மை பால்யத்தி்ற்கு தூக்கிச்செல்லும் மந்திரக்கதவுகள் அல்லவா?

நட்சத்திர வெடிப்பின் துகள்கள், தூசிகள், மெல்ல மெல்ல்ல்ல திட வடிவம் பெற்று பல லட்சம் கோடி ஆண்டுகள் தவம் செய்து  புவியின் ஓடாகி... பூமிப்பாறைகள் அவ்வப்போது ஒட்டி உரசுகையில் உரசலின் சூடும் அழுத்தமும் இவற்றை குழம்பாக்கி பிளந்த ஓட்டின் வழி வான் நோக்கி கக்க, கக்கியது குளிர்ந்து இறுகி பாறையாய், மலையாய், மலைத்தொடர்களாய்...

இப்படி உருவான மலையொன்றின் செதிள் போல ஒரு துண்டு மட்டும் நீரரித்த வேதனையில் உதிர்ந்து உருண்டு... உருண்டு  உருண்டு மலையிறங்கி தரையோடு ஓடடைந்து பள்ளமிறங்கி நீருக்குள் நழுவி 'தொபுக்' என விழுந்த தருணத்தில் அதனுள் இறங்கிய குளிர் சிலிர்ப்பு அதுவரை படிந்திருந்த நினைவுகள் அனைத்தையும் கழுவித்துடைக்க... ஆனந்தமாய் நீரோடு அது வாழும்.

கூழாங்கல்லின் ஆதி கதை இது.

ஒவ்வொரு கூழாங்கல்லும் கோடி வருடங்கள் முன்னான பெரு வெடிப்பில், ஒளி ஜோதியில் பிறந்து பலப்பல இன்னல்கள், பேரிடர்கள் வழி பயணித்து... நம் கைகளில் சேரும்போது அது நமக்கு தருவதென்னவோ குளிர் நீரின் தண்மை மட்டுமே!

இது போன்ற மனிதர்களும் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் இவர்கள் கடந்து வந்த பாதையின் வலிச்சுவடுகளின் தகிப்பை நம் உள்ளங்கைகளில் குவித்து பொசுக்குவதில்லை.

தண்மை, தண்மை, தண்மை மட்டுமே!

வைர இழைகளால் பின்னப்பட்ட கனவுகளை அணிந்திருக்கும் மனிதர்கள் ஏனோ கூழாங்கற்களை தேடுவதே இல்லை.

நாம் தேடுவோம் வாருங்கள், கூழாங்கற்களை. வைரங்கள் நமக்கு வேண்டாம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்