முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

150!

 


ஒரு மிகப்பெரிய நிறுவனம். அந்த நிறுவனத்தில் அலுவலக கட்டிடம் ஒவ்வொன்றும் அதிகபட்சம் 150 பேர் மட்டுமே வேலை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல நூறு அலுவலர்கள் புதிதாய் சேர்ந்தால் ஒவ்வொரு 150 பேருக்கும் ஒரு கட்டிடம் என அருகருகிலேயே கட்டித்தருகிறதே ஒழிய ஒரே கட்டிடத்தில் இவர்களுக்காக புதிய பல மாடிகள் என்கிற வடிவை தவிர்த்து வருகிறது.


"ஏன் இப்படி?" என்ற கேள்விக்கு அதன் விடை வியப்பூட்டும் ஒன்று; "அதற்கு மேலன்னா பல பிரச்னைகள் வருகிறது; logistical, interpersonal, social, parking slot issues(!)" என அடுக்கிக்கொண்டே போகிறது.


அதென்ன 150 கணக்கு?


ராபின் டன்பார் (Robin Dunbar) என்கிற அறிவியலாளர் மனிதர்களின் பரிணாம வளர்ச்சியில் குழுக்களின் தேவை, மொழிகளின் தேவை என்ற வகையிலெல்லாம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்தவர்.


.அவர் நமது விலங்குகளின் மூளையில் உள்ள நியோகார்டெக்ஸ் (neo cortex) என்கிற பகுதியின் அளவை வைத்து அவற்றின் குழு (gang) எண்ணிக்கையை தீர்மானிக்கும் வழி கண்டுபிடித்தவர் (புள்ளி விவரங்களின் துணையுடன் நிரூபித்திருக்கிறார்). மனித மூளையின் நியோ கார்டெக்ஸ் அளவை வைத்து மனிதர்களின் social circle இன் எல்லை என அவர் வகுத்திருப்பது 150 பேர்!


இதற்கு மேலாக எண்ணிக்கை அதிகமானால் manage செய்வது கடினமாம்! குழு பல குழுக்களாக பிரியத்தொடங்குமாம்!


இந்த 150 என்பது 'Hi / Bye' வகை தொடர்புகள் அல்ல. எப்போது நினைத்தாலும் அழைக்காமலே சேர்த்து கொள்ளலாம், சார்ந்திருக்கலாம் என்கிற உரிமை தரும் தொடர்புகள்.


நெருங்கிய நட்புகளுக்கு  மிக குறைவான சராசரி எண்ணிக்கை, குடும்ப உறவுகளுக்கு கூடுதலான சராசரி எண்ணிக்கை (average range), அடுத்த சுற்று வட்டத்துக்கு இன்னும் கூடுதலான சராசரி எண்ணிக்கை (என் மச்சினனோட மாமனாரோட சின்னம்மா :-) )


ஆதிகுடிகளின் tribal strutures, குடியிருப்புகள் என இந்த எண்ணின் ஆதிக்கம் பரவி இருக்கிறதாம்.


இந்த சராசரிக்கு மேலே போனால், "உங்கள் எங்கயோ பாத்திருக்கேன்... பேரு நினைவில் இல்லாத போயிடிச்சே... Sorry!" என்பதாகவே இருக்குமாம்!


Socialogy, Psychology, Anthropolog, Social Network sites என இந்த டன்பார் எண்ணுக்கு இன்று வரை பயன்பாடுகளும் அதிகம்.


இதெல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு பலப்பல ஆண்டுகள் முன்னரே நம்ம நிலத்துக்காரர் ஒருவர், "எனக்கு 150 இளைஞர்களை கொடுங்கள். நம் நாட்டை முன்னேற்றிக்காட்டுகிறேன்" என்றார்!


ஆச்சரியமல்லவா!


(150 வருடங்கள் தாண்டியும் அந்த நூற்றைம்பது பேரை நாம் இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறோம்...)




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்