முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓ நெஞ்சமே...இது உன் ராகமே...

புது தில்லியில் ஆக்சிஜன் பார் திறந்திருக்கிறார்களாம்!


ஒரு மணி நேரத்திற்கு பல நூறு தந்தால் சுத்தமான ஆக்சிஜனை அங்கு அமர்ந்து சுவாசிக்கலாமாம்!


அமெரிக்க ஸ்டார் பக்ஸ் போல இதுவும் விரைவில் பிரபலமாகலாம்.


உலகெங்கிலும் வாழும் மனிதர்களுக்கு, வீடு, அலுவலகம் என்கிற இரண்டு இடங்களை தாண்டி மூன்றாமிடம் ஒன்று தேவைப்படுகிறது. The so called Third Space.


வீட்டின் சட்ட திட்டங்களும் அலுவலகத்தின் அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸ்டாக, இரைச்சல் இன்றி, வெக்கை மற்றும் வாகனப்புகை சாக்கடை நாற்றம் இல்லாத ஓரிடத்தில் நமக்கு பிடித்த காஃபியை பருகியவண்ணம் நண்பர்களுடனோ தனியாகவோ சில மணித்துளிகளை கரைக்க நாம் பெரிதும் விரும்புகிறோம்.


இதற்காக பல நூறு செலவு செய்யவும் ஆயத்தமாக உள்ளோம்.


இது போன்ற Third Space, குறிப்பாக Star Bucks, அவர்கள் தரும் Third Space எவ்வளவு ரம்மியமானது என அங்கேயே பல விளம்பர போஸ்டர்கள் வைத்திருப்பார்கள்.... 'டேபிள் மேல் கால் போட்டுக்கொள்ளுங்கள. இது வீடு அல்ல!' என்பதில் தொடங்கி, 'ரிலாக்ஸ். இங்கு யாரும் உங்களை துணி துவைக்கச்சொல்வதில்லை' வரை :-)


No wonder people flock to these places, making them multi billion dollar companies.


எனக்கும் ஒரு Third Space உண்டு.


மேற்படி இரண்டைப்போல இல்லாமல் எனது Third Space பல விதங்களில் வேறுபட்டது:


நான் செல்லுமிடமெல்லாம் இதை நான் எடுத்துச்செல்ல முடியும்.


எனக்கு உகந்த எந்த இடத்திலும் இந்த மூன்றாவது இடத்தை நொடியில் என்னால் நிறுவிக்கொள்ள முடியும்.


ஒரே முறை பணம் தந்து வாங்கி வாழ்நாள் முழுதும் அனுபவிக்க முடியும்.


நண்பர்கள் சிலரையும் இலவசமாக இந்த Third Space இல் Host செய்ய முடியும்.


இப்படித்தான் பனி பொழியும் இன்றைய அதிகாலை இருளில் ஒரு வேலையாக வெளியில் சென்று திரும்புகையில் ஒரு வயல்வெளி சாலையில் மகிள மரத்தடியில் நான் என் Third Space ஐ நிறுவினேன்.


"ஓ நெஞ்சமே இது உன் ராகமே" என்ற பாடல் என் வாகனத்தின் இசைப்பேழையிலிருந்து ராஜாவின் இசைவழி என் உள்ளும் புறமும் நிரம்பி, வாகனத்தின் திறந்த சன்னல்கள் வழி வெளியேயும் வழியத்தொடங்கியது என் "மூன்றாவது இடத்தி" லிருந்து!


கண்கள் மூடிய நொடியிலிருந்து திறந்த நான்கு நிமிடத்திற்குள் அது என் நினைவுகளை மாயக்கயிறு கட்டி எங்கெங்கோ இழுத்துச்சென்று எனக்கு காஃபி, ஆக்சிஜன், இன்னும் பல உபசரிப்பெல்லாம் செய்து மறுபடி என் வாகனத்திற்குள்ளே இறக்கிவிட்டபோது என்னுள் தளும்பியது நன்றியுணர்வு மட்டுமே!


ராயல்டி என்ன ராயல்டி? தென்றல் வந்து தீண்டும்போது இசைக்கோவையை, சுந்தரி கண்ணால் ஒரு சேதி இசைக்கோவையை, என்னுள்ளே என்னுள்ளே, இது மௌனமான நேரம், இளங்காத்து வீசுதே.... ஒவ்வொரு முறை கேட்பதற்கும் நான் மகிழ்வாய் நெகிழ்வாய் ராயல்டி தருவேன் அவர் கேட்டால்!


நான் ராஜாவின் ரசிகன் அல்ல! அவரது இசை எனது Third Space, Time Machine, Oxygen Bar, Healing Touch, Joyride Partner, Consoler in Chief, My sleeping Pill, Place of Worship and much much more!


யாராவது Raja Music Bar என ஒரு Global Chain தொடங்கினால் இவரது இசையோடு சேர்த்து எதை வேண்டுமானாலும் உலகெங்கும் இன மத நிற மொழி வேறுபாடுகள் இன்றி விற்க முடியும் :-)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்