முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வென்பதே...


உரக்கமற்ற இரவுகளின்

இமை உரசல்களில்

உதிர்ந்த கனவுகளில்

ஏதேனும் ஒன்றை

நிகழில் எதிர்கொள்கையில்

கனவென்றறியாது கடந்துபோய்

ஏதோ நினைவில்

திரும்பி நோக்க

காலத்தின் பெருங்காற்றில்

அது போயிருக்கும்

பலதூரம் பறந்து.


கனவு பொறுக்கி

கனவு சேர்த்து

கனவில் நெய்த

கனத்த ஏக்கங்கள்

சொல்லாமல் சுற்றிச்சூழும் 

பொருள்தேடி உழலும்

வெக்கை தினங்களிலும்.


கனவு மெய்ப்பட

ஓடித்தேடும் இரவுகளில்

ஒரு கனவில்

கண்விழித்து நிசமாகாதா

என ஏங்கித்தவித்து

மறுபடி உறங்கிப்போகும்

மனதுக்கு தெரியுமா

கனவு மெய்ப்பட

மெய்வருத்தம் தேவையென?


கனவென்பது ஓர்விதை

விதையென்பது பேராயுதம்

நானே நல்நிலம்.


மெய்வருத்தி ஊன்றி

ஊன்றியதை போற்றி

கண்ணும் கருத்துமாய்

உரக்கமின்றி வளர்த்து

வளர்த்தது வளர

வளர வளர

வாழ்வு துலங்கும்

(விதை)ஆயுதம் பெருகும்.


"ஆயுதம் செய்வோம்

தலை சாயுதல்

செய்யோம்" என

தோழனொருவன் முழங்கியது

உரக்கம் கலைத்துப்போட


உறங்கப்போவதில்லை நான்

என் கனவு

காடாகும் வரை.


உறங்கப்போவதில்லை நான்

நானே காடாகும்வரை.


வீழ்வேன பதைத்தனையோ

சொல்லடி சிவசக்தி!


நச்சிட்ட நிலத்தினிலும்

நான் விதைத்த

கனவு விதை

விசையுறு பந்தினைப்போல்

விரும்பியபடி வளர்ந்து

நித்தம் நவமெனச்

சுடர்விடும் ஜோதியாய்

திசைகாட்டும் வெளிச்சமாய்

உயர்ந்து நிற்குது

இன்று பெருமரமாய்.


பெருமரம் தோப்பாகி

தோப்பு காடாகி

இன்று என் 

காட்டு மரங்களில்

கிளைகளில் இலைகளில்

தங்கிச்செல்ல இளைப்பாற

இடமிருக்குது ஏராளமாய்.


விதை சுமந்து

காடு பரப்பும்

பறவைக்காய் எப்போதும்

ஈரமுடன் காத்திருக்குது

என் வேர்கள்.


நல்லதோர் வீணை

நல்விதை ஒவ்வொன்றும்.

நலம்பட நல்நிலம்

சமைக்க வீழும்,

"பொங்கியெழுந்தது காடு"

என விழுந்தது

மகிழ்ந்து முளைக்கும்

தழைக்கும் செழிக்கும்

ஐநிலமும் காடாகும்,

காடுவழி வாழ்வின்

சுவடுகள் நீளும்.


வாழ்வென்பதே ஆராதனை.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்