முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனை ஆண்டாளே!

 


மார்கழி முப்பதுக்கு காலத்திற்கும் உரக்க கேட்கும் திருப்பாவை தந்தவளை உலகம் போற்றட்டும். எனக்கதில் அக்கறையில்லை.


போற்றுவோர், தம் வாழ்வியல் சூக்கும கயிறு கொண்டு தம்மைத்தாமே அந்த முப்பதில் பிணைத்து அதனுள்ளே உய்யட்டும்.


என் ஆண்டாள், "நாச்சியார் திருமொழி" ஆண்டாள்.


143 பாடல்வழி தன் கண்ணனை 'உண்டு இல்லை' என ஆக்கிய பெருங்காதல் பெண்; ஆண்கள் வார்த்த உலகில் பெண்ணுக்காய் அவர் வார்த்தடைத்த உலோகக்கதவுகளை தன் கவிதைகள் கொண்டு எட்டி மிதித்து ஏறித்தாவி மறுபுறம் குதித்து இறையோடு கலந்த காதல் தலைமகள்.


நெஞ்சமெல்லாம் கண்ணனென உன்மத்த காதலில் அற்ப மானிடரை அண்ட விடேன் என்று திண்ணமாய் நின்றவளை 'என்ன செய்வதென' அறியாது தவித்த சமூகம் பற்றிய உணர்வெதுவுமின்றி காதல் பெருவெளியில் பாற்கடலை கடைந்தவனின் 'அரையில் சாத்திய பீதாம்பரத்தை என் மீது படியும்படி சாத்தி என் வாட்டம் போக்கும்படி செய்யாமல் ஏன் என்னை இன்னும் நோகடிக்கிறீர்கள்?!' என பாடிக்கேட்கும் பெறும்பேறு பெற்ற மாயவன் அவளை தன்னுள்ளே சூடிக்கொண்டதில் விந்தையென்ன?


ஜெய கோவிந்தத்தை சிலாகிக்கும் சமூகம், மார்கழித்திங்கள் மதி நிறைந்த சமூகம், அவளது மனத்திண்மையை, மண்ணுலகை அலட்சியமாய் சுண்டியெறிந்து விண்ணாண்ட காதலை, அதை அவள் போற்றிப்பாடிய நூற்று நாற்பத்து மூன்றை என்றாவது ஒரு நாள் தம் சமூக அளவீடுகளை புறந்தள்ளி, கைகளில் உயர்த்திப்பிடித்த துலாக்கோலையும் தூக்கியெறிந்து வாசித்துப்பார்க்கும் மன வலிமையையும், அவை முரசு கொட்டும் அவளது உன்மத்த காதலை பார் புகழ போற்றி உய்யும் மன முதிர்வும் தர அருள்புரிவாய் நாரணனே!


(143 - நான் உன்னை நேசிக்கிறேன் என ஆங்கிலத்தில் மூன்று சொற்களில் எழுதுகையில் முதல் சொல்லின் நீளம் ஓரெழுத்து, இரண்டாம் சொல்லின் நீளம் நான்கெழுத்து, மூன்றாம் சொல்லின் நீளம் மூன்றெழுத்து!)

Image courtesy: Forum Art Gallery (from the web. Image may be under copyright by the artist)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...