முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டமார செவிடு

 


தீபாவளி பட்டாசு.


அணு குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டிருக்கிறீர்களா?

காது கிழியும் அளவு சத்தமும், அதே அளவு உடல் அதிர்வும் தரக்கூடிய ஒற்றை வெடி அது.


"சைனாலேந்துதான் வாங்கணுமா?!


இந்தியன்டா! புறக்கணிப்போம்டா!! 


பட்டாச இல்லடா, சைனா பட்டாச மட்டும்தாண்டா!!!'


சிவகாசி தொடங்கி ஆந்திரா, தெலங்கானா தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் பட்டாசு தொழிற்சாலைகள் பல, குடிசைத்தொழிலாக இயங்கி வருகின்றன.

தினக்கூலிக்காக, அருகிலுள்ள கிராமங்களில் வேலை வாய்ப்பு இன்றி / உடல் உழைப்பு தர இயலாத / நலிந்த... பெண்கள், முதியோர்கள், சிறார்கள் என சரவெடி முதல் மத்தாப்பு வரை செய்து தர ஆட்கள் ஏராளம்.


அது என்ன சாபமோ தெரியவில்லை. இவர்களில் பலரது வீடுகளில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை...


கடந்த இருபது ஆண்டுகளில் எத்தனை பட்டாசு ஃபேக்டரி தீ விபத்துகள்? உயிர் போய், கை போய், கண் போய் என இழப்புகள்?

புள்ளி விபரம் எதுவும் இன்றுவரை பொது தளங்களில் இல்லை.


"யானைகள் நடக்கையில் சிற்றெறும்புகள் மிதிபட்டு சாவது இயற்கை நியதிதானே?" என்பது பாழ்பட்ட பட்டறிவு...

கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை. யானை (அதன் தடத்தில்) மிதித்து எறும்பும் சாவதில்லை!

இது வாழ்வறிவு.

ஆனால், நாம் தீபாவளி வெடி வெடிக்க ஏன் அவற்றை உருவாக்கும் தொழிலாளர்கள் இறக்கவேண்டி இருக்கிறது? இன்று வரையில்?


இந்தியராய் இருப்பது, தேச பக்தியில் முழங்குவது மிக நன்று.

"மனி"தராய் இருப்பதும் மானுடப்பற்றில் முழங்குவதும், செயலாற்றுவதும் அதனினும் நன்று!


"வெடிகளையே புறக்கணிப்போம்!" என்ற முழக்கம் ஏன் இன்றுவரை உரத்து ஒலிக்கவில்லை?


'குடிசைத்தொழிலில் நெருப்பு பிடித்தால் குடிசைகள் எரிவதும், கூலித்தொழிலாளர்கள் வேவதும் இயல்புதானே' என்று யதார்த்தம் பேசுவதாய் சுற்றித்திரியாமல் முதலில் அங்கு உழைக்கும் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் உயிர்ப்பாதுகாப்பு அளிக்க ஏன் தொழில்நுட்ப வல்லரசான நம் நாட்டில் இயலாமல் இருக்கின்றோம்?


செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பும் நம்மால் இயலாத அருஞ்செயலா இது?


புள்ளாகிப்பூடாகி பறவையாகி பல் மிருகமாகி... பல நிலைகள் உயர்ந்து மேன்மையான மனிதப்பிறவி அடைந்து, அதில் பல மனிதர் வாழ சில மனிதரை காவு தருதல்... கவலை ஏதுமின்றி கடந்துபோதல்...

இதற்காகவா இத்தனை நிலைகள்? இத்தனை இன்னல்கள்?


அணு குண்டுகள் வெடிக்கும் ஓசை கேட்டிருக்கிறீர்களா?

காது கிழியும் அளவு சத்தமும், அதே அளவு உடல் அதிர்வும் தரக்கூடிய ஒற்றை வெடி அது.

பல வருடங்களாக தீபாவளியின் 'அரசன்' இந்த வெடிதான்.


இதனால்தானோ என்னவோ இன்னாட்டு மன்னரெல்லாம் டமார செவிடாய் இன்றுவரை நம்மைச்சுற்றி நம் புறக்கணிப்பால், கவனக்குறைவால், அலட்சியத்தால் உயிரிழக்கும் எத்தனையோ உயிர்களின் ஓலம் நம் காதுகளைத்துளைப்பதில்லை.


ஆலை விபத்துகள், மலக்குழி மரணங்கள், வன்புணர்வு மரணங்கள், சாதி சமூக ஏற்றத்தாழ்வு உந்தும் மரணங்கள... பட்டியல் பெரிது...

ஊடகங்களும் இவற்றைப்பற்றி பேசுவதில்லை. அவர்கள் நமது கவனத்துக்கு கொண்டுவரத்துடிக்கும் வெற்று விஷயங்களையும் ஏன் விழி பிதுங்க, கழுத்து  நரம்புகள் புடைக்க, கத்திக்கத்திப்பேசுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு  புரிந்திருக்கும் என நினைக்கிறேன்!


இனி வரும் சில ஆண்டுகளின் பண்டிகைகளாவது வெடிகள், வாண வேடிக்கைகள் இல்லாது நடந்தால் மட்டுமே நமக்கு கேட்கும் திறன் ஓரளவாவது கிட்டும்.


ஒரே ஒரு கேள்வி:

ராணுவத்திற்கு மகனை அனுப்பிவிட்டு, வயிறு வளர்க்க உயிராபத்து தொழில்கள் செய்யும் தகப்பன்மார்களும் தாய்மார்களும் நிறைந்த நம் நாட்டில், எல்லையில் அந்த வீரனின் உயிர் எதிரியின் கண்ணி வெடியில் சிக்குண்டு இறப்பதற்கும், அவனது தாயோ தகப்பனோ நம் பட்டாசு ஆலைகளில் வெடி மருந்து பற்றியெரிந்து இறப்பதற்கும் / யார் வீட்டு மலக்குழியிலோ முடங்கி மிதப்பதற்கும் நம் பார்வையில், அணுகுமுறையில் ஏன் மலையளவு வித்தியாசம்?


இதுவா நம் முன்னோர்கள் கண்ணீராலும் உதிரத்தாலும், அகிம்சையாலும் கட்டிக்காத்து நமக்கு பெற்றுத்தந்த சுதந்திரம்?


ஒரே ஒரு கேள்வி என்று சொல்லி இரண்டு கேள்விகள் கேட்பதும் சுதந்திரம்தானோ?


இதுவே மூன்றாவது கேள்வியோ?


?


Favourite destination for people of the world for a loooong time, we have become a "Questi"nation of late. Everybody wants to question something or other but nobody wants to do / does anything to bring the needed change!


#myfestivalsarecrackerfree


அப்போ நீங்க?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்