முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலிலியோவின் காணாமல்போன கை விரல்கள்!

கலிலியோ வீட்டுச்சிறையில் இறந்தபோது அவருக்கு மத முறைப்படி இறுதிச்சடங்கு செய்ய யாரும் முன்வரவில்லை, மதத்தின. கோபத்தை சம்பாதிக்க துணிவின்றி.


ஏதோ ஒரு கல்லறையில் சாதாரணன் போல புதைக்கப்படுகிறார் இந்த மாபெரும் அறிவியலாளர்.


அவருடைய கண்டுபிடிப்புகளின் உண்மைத்தன்மையால் உந்தப்பட்ட சான்றோர்கள் சிலர், மெல்ல மெல்ல அவர்களது மதக்கட்டமைப்புக்குள் தம் செல்வாக்கை வளர்த்துக்கொண்டு, ஒரு காலகட்டத்தில் மத தலைமையிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று, அவரது கல்லறையை தோண்டி எலும்புகளை சேகரித்து, ஏனைய அறிவியலாளர்கள் உறங்கும் ஒரு மரியாதைக்குரிய சர்ச் கல்லறையில் அவரை அடக்கம் செய்கின்றனர்.


இங்குதான் நம் மனிதர்களின் சிந்திக்கும் திறனின் மறுபக்கம் வெளிப்படுகிறது!


அவரது உடல் பழைய கல்லறையிலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்படும் வழியில் அவரது விலா எலும்புகள் சிலவும், கை விரல்கள் மூன்றும், பல் ஒன்றும் அப்புறப்படுத்தப்படுகின்றன! பல ஆண்டுகள் கழித்து சில அருங்காட்சியகங்களின் கண்ணாடிப்பேழைகளுக்குள் வந்து அமர்கின்றன!


(அவரது விலா எலும்பு மட்டும் அவர் கற்பித்த பல்கலைக்கழகத்தில் காட்சியாக வைக்கப்பட்டுள்ளது).



'இத்தாலி போய்ருந்தப்போ நான் கலிலியோவ பாத்தேன் தெரியுமா?!' என இன்றும் சிலர் பெருமை பேச மட்டுமா இப்படி?


இறந்த லெனினின் உடல் பாடம் செய்யப்பட்டு இன்றும் ரஷ்யாவில் இருப்பதற்கும், புத்தரின் பல், ஒரு இஸ்லாமிய துறவியின் தலைமுடி, சிலுவையில் மரித்த இயேசுவின் முகத்தை துடைத்த துணி, ஸ்ரீரடி சாயியின் ஆடைத்துணுக்கு, காந்தியின் மூக்கு கண்ணாடி என நினைவுப்பொருட்கள் நினைவுச்சின்னங்களிலும் அருங்காட்சியகங்களிலும் காட்சிப்படுத்தப்படுவதற்கும் என்ன காரணங்கள் இருக்கமுடியும்?


பற்றற்றிரு பராபரமே என்ற நம் மண்ணிலும். பெரிதினும் பெரிது நோக்கி ஓயாத தேடலோடு ஓடும் பிற மண்ணிலும் இந்த 'clinging onto remnants of our epochal past' தழைத்திருப்பது எதனால்? எதை, யாருக்கு நினைவுபடுத்த?


தெரியவில்லை!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்