முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மந்திரவாதியின் கல்லறையில் கற்பூர சத்தியம்!

 


அந்த மந்திரவாதிக்கு உறக்கமே வரவில்லை.

தொலை தூர கிரகங்களை எல்லாம் மந்திரக்கண்ணாடி கொண்டு காண முடிந்த அவனது ஆற்றலும் அறிவும் அவனுக்கு உணர்த்திய உண்மை அத்தகையது!

உண்மைகளில் பலவகை உண்டு; பொய்யான உண்மை, பொதுவான உண்மை, சில நேரங்களில் உண்மை, எக்காலத்திலும் மாறாத உண்மை.

அவன் கண்டுபிடித்த உண்மை, எக்காலத்திலும் மாறாத வகை; அன்று இருந்த பொதுவான உண்மைக்கு முற்றிலும் முரண்பட்ட உண்மை.

அவனது கண்டுபிடிப்பின் ஆதாரம் தந்த உந்துதலில் அவன் தன் சிந்தனையையொத்த மனிதர்களிடமும், தேடல் மிகுந்த மனிதர்களிடமும் பகிறத்தொடங்கினான்.


"கடவுளோடும் கடவுளின் பிரதிநிதிகளுடனும் மோதுகின்ற இந்த அறிவிலியை இழுத்து வாருங்கள்!" என ஒரு பிரதிநிதி ஆணையிட, கூண்டிலேற்றப்படுகிறான்.

"கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா? நமக்கு ஒவ்வாத முரண்கருத்துகளை பரப்பி மக்களை குழப்புகிறாயாமே?"


'இல்லங்கையா.... நான் கண்டறிந்ததை பகிர்கிறேன் ஐயா. அவ்வளவுதான்'


"குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா இல்லையா?"


'மாற்றுக்கருத்து வேறு முரண்கருத்து வேறு ஐயா. என்னது மாற்றுக்கருத்து மட்டுமே. முரணா இல்லையா என்பதை காலம் முடிவு செய்யும்...'


"அறிவிலி! காலத்தையே படைத்தது எம் கடவுள்! நம் கடவுள்! அவர் படைத்த நம் பூமியை சுற்றிதானே மற்ற கோள்களெல்லாம் செல்கின்றன? சூரியனும் அவ்வாறுதானே கிழக்கிலிருந்து மேற்கு நகர்ந்து நம் பூமிக்கு பகலும் இரவும் தருகிறான்? நீ சார்ந்த கூட்டமும்கூட இதைத்தானே இத்தனை ஆண்டுகளாய் ஏற்றுக்கொண்டிருக்கிறது?! 


அதென்ன விசித்திரமான கோட்பாடு உனது?! சூரியன்தான் மையமென்றும், நம் இறை படைத்த பூமி அதை சுற்றும் பல பந்துகளில் ஒரு பந்து மட்டுமே எனவும்

முட்டாள்தனமான கோட்பாடு? 

தவறென்று ஒப்புக்கொள்! இந்த கோட்பாட்டை இனி ஒருவருக்கும் பகிரமாட்டேன் என உறுதி கூர்!! இன்றே, இப்போதே!!!"


கலிலியோ மறுக்கிறார். 

"மன்னிப்பு கேட்கும் வரை வீட்டுச்சிறை!" என்று தீர்ப்பாகிறது.


வீட்டுச்சிறைக்குள் முடங்கியபடி ஒன்பது ஆண்டுகளை கழித்து ஒரு சாதாரண தினத்தில் மரித்துப்போகிறார்.


மன்னிப்பு என்ன ஆனது?


முன்னூறு ஆண்டுகள் கழித்து அவரிடம் மன்னிப்பு கோருகிறது கடவுளின் பிரதிநிதி அமைப்பு!


Such is the Power of Eternal Truth!


இந்த மாமனிதனின் கல்லறை முன் சில நிமிடங்கள் மௌனமாய் அஞ்சலி செலுத்தும் வாய்ப்பு எனக்கு கிட்டியதும் இவர்வழிவந்த அறிவியலாளர்களின் அசுர உழைப்பினால்தான்.(இத்தாலி நாட்டின் ஃப்ளோரன்சு நகரில் Basilica of Santa Croce இல் உள்ளது. இது இவருக்கு இரண்டாவது கல்லறை! ஏன் இரண்டாவது என்று இன்னொரு பதிவில் பார்ப்போம்:-))

அந்த வழி வந்த அறிவியல், இன்று பேராசை பெருவணிகத்தின் பிடியில் சிக்குண்டு, நம்மிடம் "சிகரெட் பிடிப்பது உடல் நலத்தை பாதிக்கவே பாதிக்காது. சிகரெட் புகை நுரையீரலுக்கு நல்லது!" என 1960களிலும், "ரவுண்ட் அப் களைக்கொல்லி, விவசாயிகளின் நண்பன்! புற்றுநோய்க்கும் இதற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை!" என இன்றும் கலிலியோவின் கல்லறையில் கற்பூர சத்தியம் செய்துகொண்டிருக்கிறது!

அறியாமைச்சிறையில் நாமெல்லாம் வாழ்நாளை கழித்தபின்பு சில நூறு ஆண்டுகள் கழித்து 'மன்னித்துக்கொள்ளுங்கள் மாண்டோரே!' என அறிவியலும் மன்னிப்பு கேட்கும்.


அதுவரை, 'உல்லாச உலகம் உனக்கே சொந்தம், நுகரடா நுகரடா நுகரடா!' என நம் சந்ததியும் ஆடிப்பாடித்'திரிய'த்தான் போகிறது!


*Heresy:

ஒரு மதத்தின் நடைமுறை மெய்ம்மைகளோடு ஒத்தமையாத கருத்து அல்லது கோட்பாடு; முரண்கருத்து.


(Images may be subject to copyright. Used only for illustrative purpose here)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்