முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நன்றி மரம்!

மலை மரம்.

மா மரம்.

பூ மரம்.

அரச மரம்.


மலைப்பூவரச மரம்.


வளர வளர பெருக்கும் இதன் சுற்றளவு, வருடங்கள் ஆன பின் பலர் கூடி கட்டிப்பிடிக்க நினைத்தாலும் இயலாத ஆகிருதி கொண்ட மரம்.


இது நன்றி மரம்!


தன் இருப்பிடத்திலேயே விதையாய் விழுந்த நாளிலிருந்து இன்று பூமியின் கீழும் மேலும் குடை வளர்த்து நிற்கும் நாள் வரையிலும், தான் மலைப்பூவரசாக மாற உதவிய அனைத்துயிர்க்கும் நன்றி சொல்லி, தன் பூ, இலை, காய், கனி, காய்ந்த சுள்ளி என இது உதிர்ப்பதெல்லாம் நன்றியன்றி வேறில்லை. 

இந்த பதிவை வாசிப்பதை சற்றே நிறுத்தி, இங்கு நான் இணைத்துள்ள ஒளிநிழல் படங்களை பாருங்களேன், இந்த "மா" மரத்தின் நன்றியை உணர!



















ஒரு நாள் அதுவே உதிர்ந்து விழுந்தாலும் நன்றியாகவே விழும், பூமிக்கு பாரமின்றி மெள்ள மெள்ள.


நன்றி நன்றி நன்றி பாலு சார்.


இவருக்கும் எனக்கும் என்ன உறவு? சொந்தமா பந்தமா? 

எதுவுமில்லை ஆனால் ஏதோ ஒன்று.


என்னதெனத்தெரியாத அந்த ஏதோ ஒன்று என்னுள் மறுகி மறுகித்தவித்தது இந்தப்பூமரம் உதிர்ந்த நாளிலிருந்து.


அடுத்த சில நாட்களுள் என் வயதான, நெருங்கிய உறவினர் ஒருவரும் உதிர்ந்து போனார்.

இறுதியாக அவர் முகம் காண, அஞ்சலி செலுத்த, அங்கு சென்று அவர் கண்ணாடிப்பேழையில் படுத்திருக்க நான் அருகில் நிற்க...

மனம் கனத்ததே தவிர அந்த முந்தைய உள்மறுகல் இல்லை...

வெளியே வந்து தனியே அமர்ந்து இதைப்பற்றி சிந்திக்கையில் ஒன்றை உணர்ந்தேன்...

'நமக்கு யார்யார் என்னவெல்லாமாக எப்போதெல்லாம் இருந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே மறுகலோ மெலிதான துயரமோ நம்மை சூழ்கிறது' என்பதே அது.


சற்றே சிந்தித்துப்பாருங்களேன்... நமது சொந்த பந்தங்களில் அன்பினாலோ பந்தத்தாலோ நமக்கு வழித்தடியாக இருந்தவர்கள் கூட வாழ்வின் கட்டாயங்களால் நாம் பகிர்வு தேடும், துணை தேடும், ஆறுதல் தேடும், உறக்கம் தேடும் எல்லா நேரத்திலும் நம்மோடு இருந்திருக்க வாய்ப்பில்லை. நம் எண்ணங்களை, உணர்வுகளை ஒவ்வொரு முறையும் பிரதிபலித்திருக்க வாய்ப்பில்லை.

இசைக்கும் பாடலுக்கும் அதற்கு உயிர்கொடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த வரம், அந்த இடம்.

அந்த வகையில் என் வாழ்வில் நான் நவரச தருணங்களை தாண்டுகையிலெல்லாம் என் கைபிடித்து தாண்ட துணை செய்தது இவரது குரல், இன்னொரு மேதையின் இசையோடு இயைந்த இவரது குரல்!

அந்தக்குரலே ஓய்ந்து போன அந்த நொடியில், வாழ்வின் நிலையாமையும் நம் நிலையாமையும் முகத்திலறைந்து கேசம் பற்றி உலுக்கும் நொடியிலும் என் மனம் தேடியது இவரது குரலையே துணையாக.

அதனால்தான் என் உள்கிடந்த ஏதோ ஒன்று மருகி மருகி தவித்தது!


இவரை ஊடக வெளிச்சம் தாண்டி நானறியேன். என் இருப்பே இவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், காற்றில் அலைந்த இவரது குரல் என்னுள்ளே சுதி சேர்க்கப்பட்ட ஏதோவொன்றினில் இறங்கியிருக்கிறதுதானே!

மன வேதனை மெல்ல மெல்ல விலகி இன்று இவரது இசை வாழ்வை, நினைவை  கொண்டாடும் கோடி ரசிகரில் நானும் ஒருவனாகிப்போனது எதனால் தெரியுமா?


அதை தெரிந்துகொள்ள, என் எண்ணவோட்டத்தை நீங்களும் கடக்கவேண்டும்...

"வாழ்வில் இவர் ஏறிய மேடையனைத்திலும், பாடிய பாடலனைத்திலும், பொதுவெளியில் உதிர்த்த சொற்கள் அனைத்திலும், இவர் உதிர்த்ததெல்லாம் நன்றி மட்டுமே, நன்றி தவிர வேறொன்றுமில்லை.

குரலில் அன்பு, உச்சரிப்பில் நிதானம், மனதின் நன்றி தந்த கனிவு ததும்பி, வழியும் பார்வை. இவரது சொற்களின் களம் எவராக இருப்பினும், ஐந்து வயது குழந்தையானாலும் எண்பது வயது முதியவரானாலும்.

Gratitude is the word, the code that he lived by. The reason why he is so loved by!

வாழ்வில் எவ்வளவோ உச்சம் தொட்ட ஒருவர் இவ்வளவு நன்றியோடு எவரையும் மகிழ்வோடு மட்டுமே அணுக முடிகையில், மானுட வெள்ளத்தில் ஒரு துளியான நான்?"


கடந்த சில நாட்களாக என் சொற்களின் வேகம் சற்றே குறைந்திருக்கிறது. எண்ணங்களில் நன்றி மிகுந்திருக்கிறது... மறுபடி பாலு சாரின் பாடல்களை கேட்டு இன்னும் மகிழ்வாய் உணர முடிகிறது, எனது தினங்களை ஆராதிக்கமுடிகிறது...


உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே


உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே என்ன

நெனச்சேன் நானும் சிரிச்சேன்

தங்கமே ஞான தங்கமே

...


நலம் புரிந்தாய்

எனக்கு நன்றி உரைப்பேன்

உனக்கு நான் தான்


உன்னை நினைச்சேன்

பாட்டு படிச்சேன் தங்கமே

ஞான தங்கமே


அமரம்ம் நீங்க பாடின 

பாட்டைத்தான் படிச்சேன்

ஞான தங்கமே.


இனியும் படிப்பேன் தங்கமே ஞானத்தங்கமே!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்