முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேர்கள் எவ்விதமோ வாழ்வு அவ்விதமே!

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நோய்கள் தீர்க்க (மூலிகை) வேர்கள் உண்ட கூட்டம் நாம்.

சில நூறு வருட ஆங்கில மருத்துவம் தந்த வண்ணக்கரைசல்களும் களிம்புகளும் மாத்திரைகளும் நம்மை நலமுறச்செய்துகொண்டுதான் இருந்தன, ஐம்பது வருடங்கள் முன்பு வரை.

மருத்துவம் பெருவணிகமாகி, உலகப்பெருவணிகமாக ஆகி, இன்று மருத்துவர்கள்கூட மாதாந்திர வணிக இலக்குகள் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் காலமிது.

எந்த நோய்க்கும் மருத்துவ மூலக்கூறுகளை மட்டுமே ப்ரிஸ்க்ரிப்ஷன் எழுதிப்பழகிய மருத்துவர்கள், வணிக கேரட்டுகளுக்காக குறிப்பிட்ட ப்ராண்ட் மருந்தை எழுதிப்பழகும் காலமிது.

"பக்க விளைவுகள் ஏராளம். ஆனால் எந்த வியாதிக்காக என்னிடம் வந்தாயோ அந்த வியாதி சரியாப்போச்சா இல்லயா? சைட் எஃபக்டா கேன்சர்கூட வந்தாலும் வரலாம்தான். ஆனால் உனக்கு வரும்னு ஏன் பயப்படுற? நீ யூஸ் பண்ற பேஸ்ட்ல இல்லாத சைட் எஃபக்டா?!" என நவீன மருத்துவம் கேள்வி கேட்டால் நம்மிடம் பதில் இல்லை. ஏனெனில் நமக்கு இவற்றை தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லை!

அதனால்தான் இயற்கை அவ்வப்போது மகாமாரிகளை அனுப்பி நமக்கு பாடம் சொல்லித்தருகிறது! 


கற்றுக்கொள்பவர்கள் மட்டும் பிழைத்திருப்போம்.


ஆதியிலிருந்தே இந்த அறியாமையும், இயற்கையின் பாடங்களும் தொடர்ந்து நடப்பதால்தான் இன்றுவரை இயற்கை மருத்துவ அறிவு தொடர்ந்து தழைக்கிறது.

நேற்று உலக சுகாதார நிறுவனம் (WHO), ஆர்டமிசியா என்கிற மூலிகை சார்ந்த இயற்கை மருந்து ஆப்பிரிக்க மடகாஸ்கர் நாட்டில் கோவிட்19 ஐ வெற்றிகரமாக தடுத்திருப்பதால் அதை கோவிட் எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

நம் ஊரில் இதற்கு மாசிப்பச்சை என்று பெயர். பல ஆண்டுகளாக மூலிகை மருத்துவர்கள் பயன்படுத்தும் தாவரம்தான் இது!

😢 வயிற்றுப்பசி தீர்க்க சின்னச்சின்ன குற்றங்கள் செய்பவர்களை அடித்தே கொல்லும் சமூகம், மெல்லப்பாயும் சட்டம்... இவற்றை கட்டமைத்து காக்கும் அரசுகள்தான் உலகளவில் மருத்துவ வணிகத்தையும் வரையறுக்கின்றன. இன்று பல நூறு மருந்துகளை 'விலைக்கட்டுப்பாட்டுக்குள்' அரசுகள் கொண்டுவரத்தொடங்கியுள்ளது நல்ல மாற்றம்தான்

மக்களிடம் விழிப்புணர்வு, ஆங்கில மருந்துகள் பற்றி, வர வாய்ப்பில்லை. ஏன்னா புரிஞ்சிக்க நிறைய பட்டறிவு வேண்டும். ஆனால் உணவே மருந்தான நம் வாழ்வியலை ஏன் நாம் மாறிப்போக அனுமதித்தோம்?


உணவும், மூலிகைகளும் சார்ந்த மருத்துவம், மீண்டு வரும், நம்மை மீட்டுத்தரும்!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்