Life without a Prism.
இயற்கைக்கு நல்லது, கெட்டது, சக உயிருக்கு துன்பமிழைத்தல், துன்பம் கண்டு துடித்தல் போன்ற உணர்வுகள் எதுவும் கிடையாது. சிலது செய்தால் தொடர்கண்ணியாய் சந்ததி நீளும், சிலது செய்தால் நீளாது, அவ்வளவே.
ஏதோ ஒரு ஆதார விதியின்படி கோள்களின் இயக்கம், பிரபஞ்சத்தின் இயக்கம் நிகழ்கிறது.
இயற்கையின் உள்ளிருந்து ஆராய்ந்து இயற்கையை அறியமுடியாது. வெளியே சென்று ஆராயவும் இயலாது. எனவே இந்த முயற்சியே வீண் என்கிறார் Masanobu Fukuoka.
இயற்கை என்பது வெண்ணொளி (white light) என்று வைத்துக்கொள்வோம். கடவுள் என்பதும் அதுவே என வைத்துக்கொள்வோம்.
கடவுளை தேடும் ஒவ்வொருவரும் கடவுள் துகளே என்கிற சித்தாந்தத்தை முதலில் உணர்ந்தது மனித இனம். அதாவது, நாம் அனைவரும் வெண்ணொளியின் துகள்களே.
இயற்கையிடம் மனிதன் எதிர்பார்ப்பது, அனுபவங்கள் தந்த பயங்கள் வழியே கற்பிதங்கள் செய்து மேலும் பயப்படுவது அல்லது மகிழ்வது("fixing" causes for each and every result humankind faces, by heuristic logic) இவை வெண் துகள்கள் நிறம் மாறிப்போய் நம் இன்றைய பல வண்ண கடவுள்களாக ஆகியிருக்கலாம்.
கடவுளே என்கிற நிலைப்பாட்டுக்கும், கடவுளை நம்புபவன் முட்டாள் என்கிற நிலைப்பாட்டுக்கும் இடையில், "காண்பதெல்லாம் கடவுள்" என்கிற நிலைப்பாடு இன்றும் இருக்கிறது. அதாவது, துகள்களை நிறங்கள் வழி பிரிக்காமல் துகள்களாகவே உணர்வது. இந்த நிலைப்பாட்டில் இயங்கமுடிந்தால் நம் உலகு அமைதிப்பூங்காவாக இருந்திருக்கும்...
இந்த நிலையில் இருந்துகொண்டு, வாழ்க்கையை ஆராயாமல் இருத்தலே பெருந்தியானம், "சும்மாயிரு, சொல் அற!" என்பதாய்.
இந்த தியானம் அனைவர்க்கும் கைகூட நான் என்னைச்சுற்றியுள்ள அனைத்தையும் வேண்டி வணங்குகிறேன்.
Rhonda Byrne ன் Secrets என்கிற புத்தகம்... தனக்கு வேண்டியவற்றை பெருவிருப்பத்தோடு (seek) மனக்கண்ணில் உருவாக்கிக்கொண்டு (visualise) நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தால் அவை கண்டிப்பாய் நிறைவேறும் (receive) என்ற அடிப்படை கோட்பாட்டை வரையறுத்து, அது எப்படி இயங்குகிறது என பல உதாரணங்களுடன் விளக்குகிறது.
இந்த கோட்பாட்டை சற்று extrapolate செய்யலாமா?
மனித உயிர் ஒவ்வொன்றும் தன்னை கடவுளின் துகளாக உணர்ந்து, கடவுள்களால் நிறைந்த ஒரு உலகை நாடி, உருவகம் செய்து, அது நிறைவேற பெருவிருப்பம் கொண்டால், கண்டிப்பாய் நிறைவேறியே ஆகவேண்டும்!
அதற்கு நிற வெறி / மத வெறி / இன வெறி / மொழி வெறி / இன்னபிற வெறிகளை ஒதுக்க வேண்டும் என்ற பெருவிருப்பமும் வேண்டுதலுமே தொடக்கப்புள்ளி!
வேடிக்கை என்னவென்றால், எந்த நிறமும், இனமும், மதமும், மொழியும் அன்பாயிருக்கவே, ஒன்றிணைக்கவே உண்டானவை. இதை, இந்த அன்பையே கடவுள் என்கிற 'வெண்ணொளி' எனலாம் (White Light).
ஆனால், நிற வெறி / மத வெறி / இன வெறி / மொழி வெறி / இன்னபிற வெறிகள் வழியாகவே இற்றை பழகுபவர்கள் அணுகுவதால் நிறப்பிரிகை ஏற்பட்டு பல வண்ண (வெறி)ச்சிதறல்களாக இருக்கலாம், ஒருவருக்கு பிடித்த வண்ணம் இன்னொருவருக்கு ஆகாத வண்ணமாயிருக்கலாம்...
இந்த மோதலில் சிதறும் ரத்தம் யாருடையதாக இருந்தாலும் அதன் நிறம் சிவப்பல்ல, வெண்மையே, அன்பின் நிறமே, கடவுளின் நிறமே. சிவப்பென்பதும் நிறப்பிரிகை செய்யும் மாயம்தான்!
Life without Prism is a life without Prisons (of isms and dogmas), well worth living for!
நிற வெறி / மத வெறி / இன வெறி / மொழி வெறி / இன்னபிற வெறிகளை ஒதுக்க வேண்டும் என்ற நம் பெருவிருப்பமும் நமக்கு பேரன்பின் கதவை திறக்கும். அதுவே நமக்கு முக்தி தரும் பாதையையும் விரிக்கும். Let us fall in love with Love, today, again!காதலே காதலே தனிப்பெருந்துணையே!
பேரன்புடன்,
பாபுஜி
Well said
பதிலளிநீக்கு