முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாமா மாஸ்க்கு கழண்ட்டுச்சி!


கொரோனா பீதியில் எல்லோரும் முகமூடிகளாய் பதுங்கி வாழ்கிறோம்.

கொரோனாவுக்கு தெரியுமா நம் முகமூடிச்சிக்கல்கள்?!

சர்ஜிகல் மாஸ்க்கு, நான்சர்ஜிகல் மாஸ்க்கு, மூணு லேயரு, நாலு லேயரு, ஆறு லேயரு. பத்து ரூபாய்க்கு ரெண்டு, ஒண்ணு முந்நூறாம் என இடியாப்ப சிக்கல்கள் ஒருபுறம்.

"லுங்கி, பனியன், துப்பட்டா, துண்டு, வேஷ்டி. எதுனா எட்த்து சுத்திகினு போவியா!' , இல்லல்ல, 'சுத்தாம குந்துவியா!' என மறுபுறம்.

ஒரு மாஸ்க்கு 'யூஸ் அண்ட் த்ரோ' ன்னா இன்னொண்ணு முப்பது வாஷ்க்கு வருமாம்!

சிங்கப்பூர் ப்ரைம் மினிஸ்டரு மாஸ்க்கு போடாதேன்னாரு. அப்பால டாக்டருங்கோ மாஸ்க்கு போடுங்கோன்னாங்கோ! மாஸ்க் போட்டு ஓட்ன கபாலி மூச்சு வுட முடியாத...போய்ட்டான்னாங்கோ!!

இத்தன கொளப்பத்தையும் தாண்டி மாஸ்க்கு வாங்கி, நியாபகமா மூக்கை வாய மூடிகிணு போனா...எத்தன தபா தொவைக்கிறது? ஆரு கணக்கு வைக்குறது?

அதெல்லாங்கூட பரவால்ல...நூறு ரூபா ஜட்டியே எலாஸ்டிக் மரிச்சிபோயி லொடலொடன்னு களண்டு உளுவ சொல்லோ அத்தயே மாட்டிகினு இஸ்து இஸ்து வுட்டுகினு அர்ணா கவுத்த இறுக்கி கட்டிகினு வவுத்து பொளப்புக்காவ கோடிக்கணக்கான கபாலிங்க ஓட்ற நாடு இது! மாஸ்க்கயும் அப்படித்தானே பயன்படுத்துவம்!

"ஆதார் கார்டு காட்டினா பேமிலிக்கு மாசத்துக்கு பத்து மாஸ்க்கு ஃப்ரீ! வாங்கோ வாங்கோ" ன்னு நம்ம 'கண்ண இமை மாரி காக்குற' அர்சு தந்தாலும் அத்தயும் வெளி மார்க்கட்ல வித்து காசாக்கிகினு இத்துப்போன மாஸ்க்கு முடிகயிறு போட்டு கட்டிகினு சுத்துற கூட்டமுய்யா நாங்க, அய்யா கொரோனா, ஒன்னோட ரேஞ்சுக்கு பணக்காரனுங்களுக்கு மட்டுமே வர்றமாரி ம்யூட்டேட் ஆய்டுய்யா, எங்கள உட்டுடுய்யா! எங்க புள்ள குட்டிகளெல்லாம் மாஸ்க்க களட்டிப்போட்டு இஸ்கூலுக்கு படிக்க போவும், ஒனக்கும் புண்ணியமாப்போவும்!


Images maybe under copyright. Used from web only for illustration.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்