முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேற்றுக்கிரக விவசாயி!

நேத்தக்கி வரைக்கும் நம்மளோட ஒண்ணா மண்ணா திரிஞ்சவய்ங்கதான், ரேஷன் கார்டு வாங்கவும், சாதி சான்று வாங்கவும், அரசு மானியம் வாங்கவும் கேக்கிற எடத்திலெல்லாம் லஞ்சம் தந்து தந்தே தேஞ்சவங்கதான் இன்னைக்கு சட்டதிட்டங்கள இயற்றுறாங்க, அமல்படுத்துறாங்க.

நம்ம ஏரியால பைப்லைன் வருதுன்னா நமக்கு வந்தாப்போதும், அடுத்த வூட்டாளுக்கு வர்லன்னா அது அவம்பாடு என்றும், எனது சம்பாத்தியத்தில் சொத்து சேர்க்க, வருமான வரி குறைக்க என பல காரணங்களுக்காக ஏய்த்தோ ஏமாறியோ வாழ்க்கை நடத்தும் யதார்த்த இந்தியரான நாம், நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இதுவரை அவர்கள் பழகிய வாழ்வையே பதவியில் இருக்கும்பொழுதும் செய்தால் மட்டும் பொங்குகிறோம்!

ஊழல், லஞ்சம், ஓரவஞ்சனை, தனி கவனிப்பு என குறைகள் நீட்டும் நாம், கடவுளை தரிசிப்பதில்கூட Fast Tag வாங்கி பார்க்கிறோமே!

அரசியல் வியாதிகள் என புலம்பிக்கொண்டே நாம் நாமாகவே இருக்கும்வரையில் அவர்களும் நாமாகத்தானே இருப்பார்கள்?

நாம் நம் சமூகத்தின் பிரதிபலிப்புகள். அவர்கள் நம் பிரதிநிதிகள், வேற்றுகிரகவாசிகள் அல்ல!

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்று... சுரை விதை என்றால், முளைக்கத்தானே செய்யும்.

கைத்தடி ஊன்றிய கண்ணாடிக்கிழவன் 'நாமே மாற்றத்தின் விதை' என ஊன்றிச்சென்றது, கண்டிப்பாய் முளைக்கும். ஏனெனில் அது நல்விதை.

"அது சரி, இப்ப இன்னா சொல்ல வர்ற?" என்ற வழக்கமான கேள்விக்கு எனது விடை:

ஒரு சதவீதம் மாறுவோம், ஒவ்வொரு நாளும். நமக்கு தேவையான நான்கு வேலைகளுக்கு லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கும் என்றால், அதில் ஒன்றிற்காவது லஞ்சம் தராமல் எப்படி வேலை வாங்கலாம் என சிந்திப்போம். வழி பிறக்கும்.

அந்தக்கிழவன் ஊன்றிச்சென்றது நல்விதைதான். நாம் நல்ல நிலமா என்பதுதான் கேள்வி!

கருத்துகள்



  1. வாழ்க வையகம்.
    உலகிலுள்ள பொறுப்புடைய
    தலைவர் எல்லோரும்
    உயிர் அறிவை உள்ளுணர்வாய்ப் பெற்று
    ஆட்சி நடத்தினால்
    எல்லோரும் எல்லாமும் பெற்று வளமாய் வாழலாம்.
    நல்லதையே
    எண்ணுவோம், சிந்திப்போம்,
    பேசுவோம், செய்வோம்.
    நல்லதே நடக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்த நொடுநுல் ஒளிந்திருக்கக்கூடிய ஆச்சரியங்கள் ஏராளம். நல்லதே நடக்கும் :-)

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்