முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வானம் பார்த்தல்


உல்லாச உலகம் நமக்கே சொந்தம் தையடா தையடா தையடா!

கொரோனா வியாதியால் இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்துவரும் உயிர்காக்கும் தொழிலில் மிக மலிவானது மாஸ்க் தைக்கும் தொழில்.

கருணை உணர்வினால் தொடங்கப்பட்ட இந்த சேவை, இன்று மேட்சிங் ப்ளவுஸ் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கிறது. வீதிக்கு வீதி நடைபாதைக்கடைகளில் மலிவாய் கிடைக்கிறது.

கேரளத்து சேட்டன் ஒருவர் மாஸ்க் மறைக்கும் தன் மீசை தாடியை உலகிற்கு காட்டியே தீருவேன் என மாஸ்க் மீது அது மறைக்கும் தன் முகப்பகுதியின் புகைப்படத்தை பிரிண்ட் செய்து, இப்போது அது ஒரு வல்லிய ரோரிங் பிசினசானு!

கூடிய விரைவில் ஐ.எஸ்.ஓ முத்திரையிட்ட உலகத்தரமான மாஸ்க்குகள் அனைத்துக்கடைகளிலும் சானிடரி நாப்கின்போலவே விற்கப்படும்.

பயன்பாடும் நாப்கின்கள் போலவே வருடக்கணக்கில் தொடரவேண்டியிருக்கும்; அதிகரிக்கும் மகாமாரிகள் ஓரு காரணமாக இருக்கலாம் அல்லது சைனாவிலிருந்து வெளியேறும் உற்பத்தி நிறுவனங்களை இங்கு இழுத்து நம் இயற்கை வளங்கள் ஆலைப்புகையாக மாறிப்போய்... நாம் சுவாசிக்க மாஸ்க் தொடர்ந்து அணியவேண்டி வரலாம்.

2020 ஆம் ஆண்டு உலகிற்கே மாஸ்க் போட்ட ஆண்டாக ஆகிப்போனது எதனால் என நாமெல்லாம் சிந்திக்க நேரமின்றி மறுபடியும் ஓடப்போவது உறுதி :-)

(இப்பொழுதே அமெரிக்காவில் ட்ரைவ் இன் தியேட்டர்களை தூசி தட்டி பொலிவேற்றிக்கொண்டிருக்கிறார்கள். உணவகங்களிலும் ப்ளாஸ்டிக் bubble க்குள் அமர்ந்து பாதுகாப்பாய் உண்ணும் வகையில் டிசைன் prototypes ஆயத்தமாகிக்கொண்டிருக்கின்றனவாம்.

2030களில் வருடத்திற்கொருமுறை 'வானம் பார்த்தல்' என்ற புதியதொரு விழா பிரபலமாகியிருக்கும்.

அந்த விழா நாளுக்கு ஒரு வாரம் முன்பிலிருந்து விழா நாள் இரவு வரை ஆலைகள், நிறுவனங்கள் அனைத்தின்முன்பும் கோவில் காப்பு போல காப்பு கட்டி லீவு விட்டு, அந்த ஒரு நாளுக்காக வானம் தெளிவாக்கப்படும்...

கொண்டாடுவோம், குதூகலிப்போம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்