முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆகவே ஆகாது


மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனம் மனம் அது கோவிலாகலாம்

மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
...

இதை விட்டு மலையில கடுகை தேடினால் காண்பதெல்லாம் கடுகாய் தெரியுதே, கண்ணு எரியுதே...

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
காணும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்...

கொட்டடா ஜெய பேரிகை கொட்டடா!


பாரதிக்கு இருந்த பார்வை, அனைத்துயிரையும் நேசித்த பார்வை.

அன்றும் இன்றும் காக்கை குருவியிடம் அடையாள அட்டைகள் இல்லை.

இன்றைய நம் மண்ணின் மைந்தர்க்கு சக மனிதர்கள் மீதான நம்பிக்கைக்கு ஏனோ குறிப்பிட்ட வண்ணங்கள் தேவை என்றானது...

குறிப்பிட்ட அடையாளமுள்ளவருக்கு குடியுரிமை கிடையாது என்ற நிலைப்பாட்டைவிட அவர்கள் நம் மண்ணில் இத்தனை ஆண்டுகள் இருந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பித்து குடியுரிமை பெறலாம் என்று மாற்றலாமே... அவர்களது வேற்று வண்ண ஆத்மார்த்த நட்புகளின் உத்தரவாதம் வேண்டுமென்றாலும் கேட்டுப்பெறலாமே?

இந்தியாவிலிருந்து மேலை நாடுகளில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்பவர்களுக்கு இந்திய குடிமக்கள் அட்டை வழங்க இயல்கிறது. ஆனால் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு / வங்கத்திற்கு தேசம் பிரிந்தபோது வேறு வழியின்றி பிரிந்தவர்களின் சந்ததியினர் இங்கு மீண்டும் குடியேறி வாழ்ந்து வந்தால் மட்டும் இந்த உரிமையை மறுப்போம் என்பது எந்த விதத்தில் நியாயம்?

நாட்டின் பொதுச்சொத்தான இயற்கை வளங்களை சுரண்டுபவர்களும் தேசத்துரோகிகள்தானே அடையாள அட்டைகள் பல வைத்திருந்தாலும்! இவர்களுக்கு வண்ணபேதமின்று குடியுரிமை தவிர்க்கலாமே? 

இந்தியாவில் இந்துக்களின் விகிதாசாரம் மற்றும் இஸ்லாமியர்களின் விகிதாசாரம் அடிக்கடி விவாதிக்கப்படும் ஒன்று. ஆனால் இந்தியர்களில் கடந்த பல ஆண்டுகளில் அமெரிக்க மோகம் கொண்டு / மேலை நாடுகளின் மோகம் கொண்டு நாடே வேண்டாம் என உதறிச்சென்று அங்கு புதிதாய் வருபவரிடம் 'உங்கள் நாடு இன்னும் முன்னேறவே இல்லையே' என அந்நியமாய் அங்கலாய்ப்பு செய்பவரின் விகிதாசாரம் அறிவோமா நாம்? இவர்களுக்கு ஏன் தரவேண்டும் குடிமக்கள் அட்டை?

இந்தக்கேள்விகளுக்கு நேர்மையான விடையளிப்பதை தவிர்த்து கொட்டப்படும் பேரிகை எதுவும் ஜெயபேரிகை ஆகாது... ஆகவே ஆகாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல...

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?! ...

பெரிதினும் பெரிது கேள்!

பெரிதினும் பெரிது கேள்னு சொல்லிட்டுப்போனவன் ஒழுங்காதான் சொல்லிட்டு போனான், நாமதான் தப்பு தப்பா எதையெதையோ கேட்டுகிட்டிருக்கோம்... வணிகம், பெருவணிகம் பேராசைப்பெருவணிகம் - அப்டீன்னா இன்னாபா? வணிகம், பண்டமாற்றில் தொடங்கியது; எப்போதென்று யாருக்கும் தெரியாது. பண்டம் உற்பத்திப்பொருளில் இருந்து சோழிகளுக்கும், உப்புக்கும் மாறி பின்னர் 'உலகமயமாக்கலின்' (ஆயிரம் வருடங்கள் முன்னரே இது நடந்தாச்சிபா!) தேவைக்காக உலோக நாணயங்களாக மாறி, வழிப்பறிக்கு பயந்து காகிதமாகி, இன்று 'வழிப்பறி' (tax rules of different geographies I mean :-) தாண்டி மாயக்காசுகளாய் (பிட்டு காயின்ங்ணா, இது வேற பிட்டுங்ணா!) அசுவத்தாமன் ஆவி போல 24*7 அலைந்துகொண்டே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறது :-) வணிகம் பெருத்து பெருவணிகமானபின்பும் எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது, பேராசை அதனுடன் இணையும் வரை. அதுக்கப்பறம் வந்ததெல்லாம் பேராசைப்பெருவணிகந்தேன்! பெருவணிகம் (corporates) தவறல்ல, அறம் சார்ந்ததாய் இருக்குமானால். பெருவணிகத்துக்கான தேவையை 1947 க்கு முந்தைய இந்திய நிலையை நினைவில் நிறுத்தி உணரும் ந...