முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காற்றினிலே வரும் கீதம்

இலங்கை தமிழ் வானொலியில் ஏக் தோ தீன் ல ல லா அநேகமாய் நான் முதல் முதலாய் கேட்ட அவருடைய பாடலாக இருக்கலாம்.

பலப்பல பாடல்கள், யார் யாரோ இசையமைத்தவை, கேட்டபோது எல்லாம் என் மனதைக்கவரந்த பாடல்களுக்கென்னவோ இசை அவருடையதாகத்தான் இருந்தது.

பின்னர் டேப் ரெக்கார்டர் அறிமுகமாகி HMV நிறுவனம் மட்டுமே வெளியிட்ட அவரது படப்பாடல்களை நண்பர்களிடம் இரவல் பெற்று கேட்டோம்.

மொக்கை வானொலி நிலையங்களில்கூட செய்திகள் வாசிக்கும் முன் விழும் சில நிமிட இடைவெளியை இவரது பாடல் ஒன்றை கொண்டு நிரப்பிய இரவுகள், எங்களுக்கு நிரம்பிய இரவுகள்.

Sony, TDK, T-Series என ப்ளாங்க் டேப்புகள் வாங்கி, காகிதங்களில் பாடல்களை எழுதி ஒலிப்பதிவுக்கடைகளில் தந்தால் இருபது ரூபாயில் 25 முதல் 30 பாடல்கள் பதிந்து தருவார்கள்.

சில வாரங்கள் திரும்பத்திரும்ப கேட்டு, பிறகு அடுத்த லிஸ்டோடு மீள்பதிவுக்காய் அதே கேசட்டை எடுத்துக்கொண்டு ஓடுவோம் கடைகளுக்கு, அதுவரையில் ரீல் அந்துபோகாமல் இருந்தால்.

காதல், சோகம், கோபம், காமம், நன்றி என எந்த உணர்வை தூக்கலாக தனிமையில் உணர விரும்பினாலும் அங்கும் அவரது இசை ஊதுபத்தி புகை போல கசிந்தால்தான் அந்த உணர்வும் மணம் பெறும்.

கிடார் கற்றுக்கொண்ட நட்புகளின் தேசிய கீதம் அவரது பாடலாகவே இருந்தது.

டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் டேப் தேய்ந்து சி.டி ஆகி, சி.டி நைந்து 'நினைவுத்துண்டுகளாகவும்' (memory cards) 'நினைவு அடுக்களாகவும்' (hard disks) ஆகி, உருவில் வளர்ந்து தேய்ந்து... இன்று 'நகக்கண்'ணில் (flash card) நாலாயிரம் பாடலென வளர்ந்து, 2 ட்ராக், 24 பிட், 5.1 ஸ்டீரியோ, 7.1 என வலைத்தளமெங்கும் 24*7 கசிந்தவண்ணமுள்ளது.

ஒலி பெருக்கிகளிலிருந்து வெடித்து புறப்பட்டு இன்று பாட்டிலில் அடைபட்ட பூதமாகி 'காது மூடி'களுக்குள் சுருங்கி மகிழ்விக்கும்போதும் மகிழ்வூட்டுவதென்னவோ அவரது இசை மட்டுமே.

தனியனாய் நடக்கையில், கார், ரயில், விமானப்பயணங்களில்... கூடவே கசியும் இவரது இசை, என் ஆன்மாவின் அங்கமாகிப்போய் இப்போதெல்லாம் நினைத்த நொடியில் மனதில் இவருடைய  ஏதோவொரு பாடலிசையோ பிஜிஎம்மோ தானே கசிந்து என் பொழுதுகளை நனைத்தாலும் பல ஆண்டுகள் முன் டவுன் பேருந்து ஒன்றில் கிராமம் செல்லும் சாலையில் தலை முடியை காற்று கலைக்க, புதுப்புடவை மல்லிகைப்பூ வாசனை ஆட்களால் பிதுங்கிய வாகனத்தை நிறைக்க, திடீரென கிளம்பிய "அடி ஆத்தாடீ இளமனசொன்னு ரெக்க கட்டி... இவ மேகம் ஆக யாரோ காரணம்" கேட்டதும் கிடைத்த இன்பம்... 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்