முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சின்ன சின்ன ஆசை


சின்ன சின்ன ஆசை
Chota Chota Aasha
Small little wishes

உங்க சின்ன சின்ன ஆசைகள் என்ன?

வீடு.

தண்ணீர், பைப்பில்.

தண்ணியில்லேன்னா என்ன பண்ணுவீங்க?

தண்ணி முன்னே எங்க இருந்தது? இப்போ எங்க இருக்கு? ஏன் ஓடி ஒளிஞ்சுது?

நாம எல்லோரும் இருக்கிறது யாரோட வீடு?

எத்தன பேரு ஆறு பாத்திருக்கீங்க?

குளம்?

ஏரி?

காடு?

காடு என்பது என்ன? Self sufficient eco system that is self sustainable also. அள்ள அள்ள குறையாது, அளவாய் அள்ளினால்.

உலகமே மிகப்பெரிய காடு.

காட்டை விரட்டி நாடு.

நம் ஊரை விட்டு ஓடிப்போன காடு இப்போது எங்கே?

காடு இல்லாத நம் ஊர் எப்படி இருக்கிறது?

காடும் விலங்குகளும்
காடும் மரங்களும்
விலங்குகளும் மரங்களும்
பறவைகளும் மரங்களும்
மரங்களும் தண்ணீரும்
தண்ணீரும் விலங்குகளும்

எப்படி ஒத்திசைவா இயங்குது?

காடு எப்படி சுத்தமா இருக்கு? நாடு ஏன் குப்பையா இருக்கு?

காக்காவையே நம்ம ஊர்ல காணுமே! ஏன்??

(நாங்க பாக்கிறமே என்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். கூடிய விரைவில் தேடப்போகிறீர்கள்! நாம் நஞ்சிட்டு கொல்லும் உயிர்களை தின்னும் காக்கைகள் மட்டும் தப்பிக்குமா என்ன?!)

விலங்குகளின் கூட்டத்திலிருந்து பிரிந்த விலங்கு, மனிதர்கள், நாம். சிந்திப்போமே.

சின்னதாய் ஒரு குட்டிக்கதை (செந்தமிழனின் ஏதோ ஒரு புத்தகத்தில் படித்ததாய் நினைவு )

ஒரு இரவு மனிதர்கள் தூங்கி எழுந்து பார்த்தால், சுற்றிலும் வெட்டவெளி. எல்லாம் ஓவர்நைட்டில் காக்கா தூக்கிட்டு போச்சு.

ஏகப்பட்ட சத்தம் போட்டு, எல்லாரும் கடைசில சாமிகிட்ட போய் அவங்கவங்களோட தொலஞ்சிபோனதையெல்லாம் திரும்ப வரவழைக்க வேண்டுறாங்க. 

அன்றிரவு தூங்கி எழுந்து பார்த்தால், மரம், செடி, கொடி, பூச்சி, பறவை, விலங்கு, தும்பி, ஊசித்தட்டான் எல்லாம் பறந்துகிட்டிருக்கு. பொடிப்பசங்கள்லாம் குஷியா விளையாட ஓடியாச்சி, பள்ளிக்கூடத்ததான் காணலயே!

பெரியவங்க எல்லாம் கவலையோட, கோவத்தோட சாமிகிட்ட ஓடுறாங்க; 'சாமீ! என்னோட வீடு, வண்டி, வாகனம், பணம், துணிமணி எல்லாம் காணாமப்போனது போனதுதானா? மத்ததெல்லாத்தையும் திரும்ப வரவச்ச நீ எங்களோடத மட்டும் புடிங்கிகிட்டியே!' ன்னு பொலம்பறாங்க.

பொலம்பல் தாங்கமுடியாத சாமிங்க எல்லாம் தரிசனம் தந்து, சொன்னது இதுதானாம் 'நாங்க படச்சத மட்டும்தானப்பு எங்களாக திரும்ப வரவைக்க முடியும். நீங்க படச்சத கொண்டான்னா எங்களால எப்படி முடியும்?'

(அடுத்த வாரம் சில நூறு பள்ளி கற்போருக்கு சொல்வதற்காய் ஆயத்தம் செய்தது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்