முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அம்மா என்றால்...


அம்மா என்றால்

ஈர மனது, ஈர விழிகள்.

மகிழ்ச்சி, துக்கம், வருத்தம், கவலை, கோபம்...உணர்வுகள் எதுவானாலும் விழி தளும்பும், கண் சுரப்பிகள் செயல் இழந்த பின்னும்.

இவரது ஈர விரல்கள் பட்ட... பட்ட மரமும் துளிர்க்கும். மனிதர்கள் மட்டும் ஏனோ இதை உணர்வதில்லை என்ற வேதனை, தளும்பும் மனதில் கூழாங்கற்களாய் மூழ்கிக்கிடக்கும்...

எண்ணிக்கையில் பெரிய குடும்பத்தின் குலக்கொடி, அநேக உடன்பிறப்புகளுக்கு மறு தாய், மருந்தாய்... வாழ்வின் முதிர் தினங்களிலும் இன்று வரையிலும் இந்த மருந்து நிற்காது பெருக, மகிழ்வாய் சில, கசப்பாய் பல என உறவுகள்..

கால வெள்ளத்தின் இழுப்புக்கெல்லாம் அசைந்துகொடுக்காத இவரது வாழ்க்கைத்துணை (அம்மாவை விட பெரிய 'மருத்துவர்') பெரிய வரமாய், சாபமாயும் கூட...

நெடிய வாழ்வில் காலம் தந்த வேடங்களை, சுமைகளை, பூங்கொத்துக்களை, விருப்பு வெறுப்பின்றி சுமந்துகொண்டு இன்றும் உரையாடிக்கொண்டிருக்கிறார் தன் 'வளர்ப்புகளுடன்'...

இவரைப்பற்றி முழுமையாக அறிய இவரது கரங்கள் பட்ட தாவரங்களை மட்டுமே கேட்கவேண்டும், (எனக்குக்கூட முழுதாய் தெரியாது). அவரது வாழ்வின் கதை கேட்டு இவை மகிழும், வாடும், அழும், சிரிக்கும்...







பல முறை ஊர் சென்று திரும்பும்போதெல்லாம் கதை கேட்கும் ஆவலில் அவரிடமிருந்து பல பூச்செடிகள் பெற்று வருவேன்.

நான் கொணர்ந்த அச்செடிகள், 'என்ன இருந்தாலும் அவர் போல வருமா' என அவரை விட்டு பிரிந்த சோகத்தில் வாடி விடை பெற, மிஞ்சிய செடிகள் சொல்லும் கதையின் மொழி புரிபடவில்லை முழுதாய் இன்னும்.

நான் உணவுக்காடுகள் வளர்ப்பதாய் அவரிடம் என் அனுபவங்களை பகரும் அரிதான நொடிகளில் அவர் கண்களில் ஒரு ஒளி படரும்...

அவரது ஆன்மாவே இங்கு பூத்துக்குலுங்க, என் காடு எம்மாத்திரம்?!









என் ஆன்மாவின் மீது மெலிதான போர்வையாய் அவரது பேரன்பு, சமயத்தில் இதமாய், சமயத்தில் வியர்வை கசகசப்பாய், என் இருப்பு வரையில் இருக்கும்... 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்