முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொடியனின் இரட்டை கோபுர கனவு



ஆயிரத்து முன்னூறு அடி உயரத்தில், அந்தரத்தில் காற்றில் ஆடும் கயிற்றில், இரு முனைகளிலும் கைது செய்ய காவலர்கள் காத்திருக்கும் சூழலில், பனிப்புகைமூட்டம் பார்வையை மறைக்க... ஒற்றைக்கம்போடு கயிற்றின் மீது ஒற்றைக்காலில் balance செய்து நிற்க, கயிற்றில் அமர்ந்து ஒய்வெடுக்க...நம்மால் முடியுமா?

முடியும் என்கிறார் லெ பெடிட். Audacity of Act, this is!

செயல் தைரியத்தின் உச்சம்!

அமெரிக்க இரட்டை கோபுரம் இன்று இல்லை.

லெ பெடிட் இன்றும் இருக்கிறார்.

Audacity of Hope, நம்பிக்கை தரும் தைரியம் என்ற புத்தகம் எழுதி ஒபாமா அதிபரானார்.

Audacity என்ற சொல்லுக்கு தைரியம் என்ற பொருளை நாம் எப்படி வேண்டுமானால் உணரலாம், லெ பெடிட் உணர்ந்த, வெளிப்படுத்திய விதம், அதன் உச்சம்!

Flashback:

1960களில் லெ பெடிட் தன் பதின் வயதில், அந்தரத்தில் கயிறு கட்டி நடக்கும் வித்தை பழகும் சிறுவன். France இல் வசிப்பவர். Philippe Petit என்பது முழுப்பெயர். பொடியன் போல சிறிய தேக அமைப்பு அவரது காரணப்பெயராயிற்று. லெ பெடிட் என்றால் பொடியன் என்று பொருள்.

ஒரு நாள் முடி வெட்டிக்கொள்ள ஒரு சலூனில் காத்திருக்கையில் செய்தித்தாளை புரட்டுகிறார். அதில் ஒரு துணுக்குச்செய்தி, 'அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மிகப்மெரிய கட்டிடங்கள், Twin Towers, கட்டப்போகிறார்கள்'.

அவர் மனதில் ஒரு பொறி; 'என்றாவது ஒரு நாள் நான் இந்த கோபுரங்களின் இடையில் கயற்றில் நடப்பேன்'.

இன்னும் எழும்பாத அந்தக்கோபுரங்களின் இடையில் நடப்பது அவரை தூங்க விடாத கனவாக மாறிப்போக, தன் வசிப்பிடத்திற்கு அருகில் பயிற்சிக்களம் அமைக்கிறார். இரு குச்சிகளை பல நூறு அடிகள் இடைவெளியில் ஊன்றி இடையில் கயறு கட்டி அதில் Balance செய்ய கையில் ஒரு நீள்கம்பு மட்டுமே துணையாக, கயற்றின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு அடிமேல் அடிவைத்து நடை பயிலுதல், தரையிலிருந்து 25 அடி/50 அடி/100 அடி உயரத்தில்.

கரணம் தப்பினால் மரணம்.

காதலியும் நண்பனும் உறுதுணையாய் நிற்க, பயிற்சி தொடர்கிறது.

இரட்டை கோபுரங்கள் எழும்ப எழும்ப லெ பெடிட் இன்னும் உயரமான கட்டிடங்களின் இடையில் 'நடை' பழகுகிறார். Notre Dame என்கிற உலகப்புகழ் ப்ரெஞ்சு சர்ச்சும் இதில் அடக்கம்.

Twin Towers திறப்புவிழா கோலாகலமாய் நடக்கிறது. 

தன் கனவு நனவாகும் தருணம் வந்துவிட்டதென லெ பெடிட் தன் குழுவோடு அமெரிக்கா கிளம்புகிறார். திட்டமும் தயார். அந்த திட்டம் இதுதான்;

'Twin Towers இல் நுழையவே அனுமதி வேண்டும். பாதுகாப்பு சோதனைகள், கெடுபிடிகள் ஏராளம். எனவே, நாம் அனுமதியின்றி / பொய்யான அடையாள அட்டைகளுடன் உள்ளே நுழையப்போகிறோம்.

இரு கோபுரங்களுக்கு இடையில், 1300 அடிகள் (ஆம்! ஆ. யி. ர. த். து.    மு. ன். னூ. று.   அ. டி. க. ள். ) உயரத்தில், காற்று பிய்த்து உதறும். அதைத்தாங்கும் அளவுக்கு ஆடாமல் தொங்கும் வலுவான இரும்புக்கம்பி வேண்டும். அத்தகைய கம்பியின் எடை பல நூறு கிலோக்கள் இருக்கும். அதையும் உள்ளே எடுத்துச்செல்லவேண்டும்.

அந்தக்கம்பிக்கயற்றை ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து இன்னொரு கோபுரத்திற்கு வீசுவதற்கு ஏதாவதொரு கருவி வேண்டும்.

அதையும் யாருக்கும் ஐயம் எழுப்பாமல் உள்ளே கொண்டுசெல்ல வேண்டும்.

அந்தரத்தில் கயிற்றில் நடக்க balancing pole, நீள்கம்பு, அதையும் உள்ளே எடுத்துச்செல்லவேண்டும்.

இந்த சாகசத்தை ஆவணப்படுத்த Still Camera அல்லது Video camera என ஒன்றையாவது உள்ளே எடுத்துச்செல்லவேண்டும்.

அதிகம் காற்றில்லாத அதிகாலையே சரியான தருணம். அதற்கு முன்னரே உள்ளே சென்று, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, காத்திருக்கவேண்டும், யாருக்கும் சந்தேகம் வராதவண்ணம், யார் கண்ணிலும் படாமல்.

ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால் லெ பெடிட்டும் அவரது குழுவினரும் அதுவரை நியூயார்க் வந்ததும் இல்லை, இரட்டை கோபுரங்களை கண்டதுமில்லை!!!

நினைக்கவே தலை சுற்றுகிறதா,  Man on Wire  என்கிற BBC ஆவணப்படம், ஆஸ்கர் வென்ற படம் பாருங்கள். மயிர்க்கூச்செறிதல் உறுதி!





(நிகழ்வின் நாயகர்களை பேசவைத்து, பேட்டியெடுத்து, பழைய ஒளி நாடாக்கள், சில மீளுருவாக்கங்கள் - reconstructed scenarios என நம் கண் முன்னே விரியும் காட்சிகள், வாவ்! வேற லெவல்! லெ பெடிட்டின் குழு தங்களோடு எடுத்துச்செல்லமுடிந்த photo camera வினால் எடுத்த புகைப்படங்கள், இந்த நிகழ்வை நேரில் பார்த்த மக்கள், கோபுர உச்சிக்கு விரைந்து லெ பெடிட் ஐ கைது செய்ய முயன்ற காவல் அதிகாரிகளின் வாக்குமூலங்கள்... 'மனுஷனா இவன்! கயித்துல நடந்து என் கைக்கெட்டுற தூரத்தில வருவான், பிடிச்சிடலாம்னு நினைக்கிறப்போ மறு பக்கம் நடப்பான். சார்! இடையில அம்மாம் உயரத்தில கயித்துல குந்திகினு ரெஸ்ட் எடுத்துகுறான் சார்! பல நூறு அடி கீழ தரையே தெரியாம பனிமூட்டம், எங்களுக்கு இன்னா பண்றதுன்னே புரியல' என்பதான பதிவுகள் மூலம் அமெரிக்காவும் ஏனைய உலகமும் இவரை அறிந்துகொண்டது அன்று...)

ஆயிரத்து முன்னூறு அடி உயரத்தில், அந்தரத்தில் காற்றில் ஆடும் கயிற்றில், இரு முனைகளிலும் கைது செய்ய காவலர்கள் காத்திருக்கும் சூழலில், பனிப்புகைமூட்டம் பார்வையை மறைக்க... ஒற்றைக்கம்போடு கயிற்றின் மீது ஒற்றைக்காலில் balance செய்து நிற்க, கயிற்றில் அமர்ந்து ஒய்வெடுக்க...நம்மால் முடியுமா?

முயும் என்கிறார் லெ பெடிட். Audacity of Act, this is!

பின்குறிப்பு: youtube இல் இந்த டாக்குமென்டரி கிடைக்கிறது. சென்ற ஆண்டு வந்த Hollywood படம், இந்த ஒரிஜினலின் நிழலைக்கூட தொடமுடியாது :-)

கருத்துகள்

  1. இப்பாேது நான் படித்த கதையும், கதை சாெல்லப்பட்ட விதமும் கூட வியப்பூட்டுகிறது! ஒரிஜினல் இன்னும் நன்றாகத்தான் இருக்க வேண்டும்!! பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்