முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தோட்டா விவசாயம்!


இலக்கை தாண்டிய தோட்டா; அட விவசாயம்! தோடா!!

துப்பாக்கியின் விசை சுண்டப்பட்டதும் இலக்கு நோக்கி சீறிப்பாயும் தோட்டா, இலக்கை துளைக்கையில் அதிலேயே மாட்டிக்கொள்ளும்; அல்லது, துளைத்தபின் விசையிழந்து விழுந்துவிடும்.

நம்மில் அநேகரின் வாழ்வு இவ்விதமே.

ஆனால், இலக்கை துளைத்தபின் அது தவறான இலக்கு என்ற புரிதலும், துளைத்து வெளியேறியபின்னும் விசை குறையாமல் உந்தினாலும், அந்த தோட்டாவின் பயணம் எப்படி இருக்கும்? எதை நோக்கி இருக்கும்?

ஐ.டி துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் பல, சில பல இலக்குகளை வெகு வேகமாக துளைத்தபின்னும் விசை குறையாதிருந்தால்... எங்கெங்கோ சுற்றி பின் வேளாண்மையில் ஐக்கியமாகி விடுகின்றன.

எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி விவசாயம், இவர்கள் செய்யும் வேளாண்மை, பிற்காலத்தில் தோட்டா வேளாண்மை (Bullet Agriculture) என்றும் அறியப்படலாம்.

'பத்து இருபது நாட்டு மாடு வாங்குறோம். பால் பண்ணை நடத்துறோம்; ஒன்லி A2 ப்ராடக்ட்ஸ'் என்பது முதல், 'பாலி ஹவுஸ் பண்றோம், வெள்ளரி / குடை மிளகாய் வளர்க்கிறோம், எக்ஸ்போர்ட் பண்றோம்' என்பது வரை, பணம் சம்பாதிப்பதை மையமாக வைத்தே சுழலும் இந்த தோட்டாக்கள், வேள் ஆண்மைக்கும் (வாழ்வியல்) வேள் வணிகத்திற்கும் உள்ள இடைவெளி தெரியாமல் / உணராமல் வணிக இலக்கில் நுழைந்து சிக்கி பெரும்பாடுபட்டு பிய்த்து வெளியேறி தோல்வியுற்ற உணர்வோடு வேறு இலக்குகளை நாடுகின்றன. 

வேளாண்மை பொய்த்தால் வணிகம் கை கொடுக்கும். வணிகமும் பொய்த்தால் இறை கை கொடுக்கும் என்பதாக, இப்போது பல இடங்களில் இறையும் வணிகமாகி, இறைவணிகமும் தொடங்கியாச்சு... கோசாலைகள், பாபா ஆலயங்கள், அனுமன் ஆலயங்கள் என பல விளை நிலங்கள் இன்று பிழைப்புக்காக நிறத்தை மாற்றிக்கொண்டு காத்திழுக்கின்றன!

வேள் ஆண்மைக்குள் நுழைந்த தோட்டாக்கள் மட்டும் இறகு முளைத்து, விசை கூடி, ஆனால் இலக்கின்றி, தம் நிலத்தில் பறக்கும் பறவைகளோடும் காற்றில் உதிரும் இலைகளோடும் பறத்தல் பழகிக்கொண்டிருக்கின்றன. வாழ்வை கொண்டாடிக்கொண்டிருக்கின்றன!

தெளிவாய் பயணிப்பவர்க்கு நல்லதொரு வாழ்வியல் கண்டிப்பாய் கிட்டும் :-)

இப்படிக்கு,
இறகு முளைத்த தோட்டா!

பின் குறிப்பு: 

இலக்கிற்கு ஆங்கில மொழியில் Bullseye என்று பெயர். சற்றே சிந்தித்துப்பார்த்தால் இந்த சொல்லின் குருதி தோய்ந்த பொருள் விளங்கும். 

"காளையை வீழ்த்த கண்ணைத்துளை!"

இது பெருநுகர்வு வாழ்வியலின் அடிப்படை.

மூக்கணாங்கயிற்றோடு காளையை பிணைத்த நம் பண்டைய வாழ்வியல் புரிந்தவர்கள், "இலக்கின்" பொருளையும் சரியாகவே புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழலுக்கு இறைத்த நீர்

விழலுக்கு இறைத்த நீர்... என்னை சிந்திக்க வைத்த சொற்றொடர் இது.  பலனளிக்காத முயற்சியின் தோல்வியை சுட்டவே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். இதன் கருப்பொருள் வேறாகவும் இருக்கலாம்... விழல் = களை = களையப்படவேண்டிய, நமக்கு அவசியமற்ற பயிர். நமக்கு அவசியமான பயிர்கள் மட்டுமே நம் வயலில் இருக்கவேண்டும். அப்போது மட்டும்தான் பஞ்ச பூத முழு சக்தியும் நமக்கு வேண்டிய பயிருக்கு கிட்டும், அதற்கு மட்டுமே கிட்டும். இந்த சித்தாந்த அடிப்படையில்தான் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் வேறோடு பிடுங்கப்பட்டு, தேயிலையும் காபியும் பயிராச்சி (நாமள்லாம் அப்போ வெள்ளக்காரங்களே!). இந்த சித்தாந்த அடிப்படையிலதான் சம வெளிகளிலும் காடுகள் நம்மால் சிதைக்கப்பட்டு நெல், கோதுமை, கரும்பு, வாழை என மாறிப்போயின. இதே அடிப்படையில்தான் பல உயிரினங்கள் நம் ஆக்கிரமிப்புக்கு அடிபணிந்து ஏற்கனவே விடைபெற்றோ அல்லது விடைபெற்றுக்கொண்டோ இருக்கின்றன. நிலத்தில் மட்டுமல்ல, நீரிலும்தான்; 'என்னது ஆஸ்திரேலியால பவளப்பாறைகளை காணுமா?!!! அது வேற பஞ்சாயத்துபா!'. இதெல்லாம் நிகழக்கூடாதென்றுதான் அன்று நம் ஆட்கள் விழல

சிறுக கட்டி பெருக வாழ்

சிறுக கட்டி பெருக வாழ்! கேள்விப்பட்டிருக்கிறோம். படித்திருக்கிறோம். சிறிதாய் தொடங்கி ஆல் போல் வளர்ந்து என வணிகம் பேசியிருக்கிறோம். அளவாய் வீடு கட்டி சுற்றம் சூழ்ந்து பெருக மகிழ்வாய் வாழ்தல் என முயற்சிக்கிறோம். இவையெல்லாவற்றையும் தாண்டிய புரிதல் ஒன்று வேண்டும். சிறுக கட்டி - சிறு வீடு கட்டி, பெருக - பல்லுயிர் பெருக, நாமும் வாழ்வோம் என்பதாகவும் இதன் பொருள் இருக்கலாம். பாரதி கனவு கண்ட காணி நில வாழ்வும் இதுவே, பில் மோலிசன் கற்றுத்தந்த பெர்மாகல்ச்சரும் (ஒருங்கிணைந்த பண்ணையம்) இதுவே, காந்தி மற்றும் புகுவோகா பரப்பிய சுயசார்பு பண்ணை வாழ்வும் இதுவே! பெரிதாய் கட்டி சிறிதாய் வாழ்ந்துவிட்டுப்போகும் நமக்காகவே சொல்லப்பட்டது, அன்றே! உணவு வீணாவதைப்பற்றி ஐ.நாவில் கூட்டம் கூட்டமாய் விவாதித்து புள்ளி விபரங்கள், அறிக்கைகள் பதிப்பிக்கிறார்கள். இந்தியாவில் 40 சதம் வீணாகிறதாம். நம் வாழ்வியல் அறியாது எழுதித்தள்ளுகிறார்கள். உணவு மீந்தால் / ஒரு இலை வீட்டிலிருந்து வெளியே விழுந்தால்கூட ஒரு கூட்டமே (மனிதர் முதல் பூச்சி வரை) அதிலிருந்து உண்ணும் இங்கு! இதில் வீணாவதெங்கு?!

எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை

+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+- கேன்சர் கட்டிகள் சுமக்கும் எங்கள் விவசாயிகள் பாலாடைக்கட்டிகள் உண்பதில்லை. -+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+-+ வெண்மைப்புரட்சிக்கு முந்தைய இந்தியாவில் (1960 களுக்கு முன்) பால் வியாபாரத்துக்காக யாரும் மாடுகளை வளர்த்ததில்லை. சர்க்கரை, தேயிலை, காபி என வணிகப்பயிர்களும், வணிகமும் நாம் நாட்டில் வேரூன்றியபோது அவர்களை திகைக்கவைத்தது நமது மக்களின் பால் மோகமற்ற வாழ்வு. கிராமங்கள் சார்ந்த அவ்வாழ்வில் பால் என்பது குழந்தைகளுக்கான உணவு, எனவே அது விற்பனைக்கல்ல. அவ்வளவே.  கிடைத்த இலைகளையெல்லாம் நீரில் கொதிக்கவைத்து பருகிய நம் மக்களை டீ, காபி நோக்கி நகர்த்த முதலில் அவற்றை இலவசமாய் தந்து, பின் பாலுடன் சேர்த்தால் சுவைகூடுமென காட்டி, வருடம் முழுவதும் கிடைக்காத பாலை கிடைக்கவைக்க வணிகம் கையிலெடுத்த ஆயுதம் என்ன தெரியுமா? 'பாலுக்காக மாடு வளர்த்தால் சில வருடங்களிலேயே பணக்காரராகிவிடலாம்! உங்கள் நாட்டு மாடுகள் வருடத்தில் சில மாதங்களே கறவையில் இருப்பதால் அவை உங்கள் கனவுகளுக்கு இடையூறு. நாங்கள் இலவசமாய் தரும் மாடுகள் அமிர்